Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - General

பருவநிலை மாற்றத்தைத் தடுக்க ஒரு மணி நேரம் விளக்குகளை அணைக்க மக்களுக்கு அழைப்பு

Print PDF

தினமணி 27.03.2010

பருவநிலை மாற்றத்தைத் தடுக்க ஒரு மணி நேரம் விளக்குகளை அணைக்க மக்களுக்கு அழைப்பு

சென்னை, மார்ச் 26: பருவநிலை மாற்றத்தைத் தடுக்கும் வகையில் ஒரு மணி நேரம் அத்தியாவசியமற்ற விளக்குகளை அணைக்க மின்சார வாரியம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

"டபிள்யு.டபிள்யு.எப். } இந்தியா' என்ற அரசு சாரா நிறுவனமும், தமிழக அரசும் இணைந்து பருவநிலை மாற்றத்தை தடுப்பதற்கான விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக சனிக்கிழமை இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை வீடுகளில் அத்தியாவசியமற்ற விளக்குகளை அணைக்குமாறு, பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் வாரிய தலைவர் சி.பி. சிங், எரிசக்தி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் டேவிதார் ஆகியோர் கூறியது:

தமிழகத்தில் 2004}ம் ஆண்டு மார்ச் மாதம் 3,800 கோடி மெகா வாட்டாக இருந்த மின் பயன்பாடு, 2009}ம் ஆண்டு மார்ச்சில் 5,300 கோடி மெகா வாட்டாக உயர்ந்துள்ளது.

தேவையைக் கருத்தில் கொண்டு, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த மக்கள் முன்வர வேண்டும். உலக வெப்பமயமாதலைத் தடுக்கும் வகையில், சனிக்கிழமை மேற்கொள்ளவுள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அனைத்து மக்களும் பங்கேற்ற ஒரு மணி நேரம் தேவையற்ற விளக்குகளை அணைக்க முன்வரவேண்டும். இதன் மூலம் 60 மெகா வாட் மின்சாரம் சேமிக்கப்படும்.

தமிழகத்தில் இப்போது 1,100 மெகா வாட் மின்சாரம் பற்றாக்குறை உள்ளது. இந்த பற்றாக்குறை காரணமாக சில பகுதிகளில் 2 மணி நேரத்துக்கு மேல் மின்தடை ஏற்படுவது உண்மைதான்.

இப்போது நடைமுறையில் இருக்கும் மின்வெட்டு, கோடை காலத்தில் உயர்த்தப்படாது. இதே அளவில்தான் மின்வெட்டு இருக்கும். மே 15}ம் தேதிக்குப் பின் காற்றாலை மின் உற்பத்தி தொடங்கிவிடும். அதன்பிறகு மின் பற்றாக்குறை ஒரளவு குறையும்.

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கி: பருவநிலை மாற்றத்தைத் தடுக்கும் வகையில் வனத்துறை சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தேசிய வன கொள்கையின் படி நிலப்பரப்பில் 33 சதவீதம் வனப் பகுதி இருக்க வேண்டும். இந்த இலக்கை எட்ட தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சிகள் மூலம், கூடுதலாக 24 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு வனப் பரப்பு அதிகரித்துள்ளது.

இதன்படி இப்போது தமிழகத்தில் 22 சதவீத நிலப்பரப்பு, வனப் பகுதியாக உள்ளது. இதை 33 சதவீதமாக உயர்த்த, 2010}11 நிதியாண்டில் ரூ. 25 கோடி நிதியை அரசு ஒதுக்கியுள்ளது என்றார்.

Last Updated on Saturday, 27 March 2010 07:55
 

உலகில் சுத்தமான குடிநீர் இல்லாமல் அவதிப்படுவோர் 150 கோடி பேர்

Print PDF

தினமணி 18.03.2010

உலகில் சுத்தமான குடிநீர் இல்லாமல் அவதிப்படுவோர் 150 கோடி பேர்

மதுரை, மார்ச் 17: உலகில் சுமார் 150 கோடி மக்கள் சுத்தமான குடிநீர் இல்லாமல் அவதிப்படுகிறார்கள்; எனவே குடிநீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து நாம் சேமித்து சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றார் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமைப் பொறியாளர் ஏ.தனுஷ்.

உலக நீர் தின விழா மார்ச் 22}ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, மாற்று மேலாண்மைக் குழு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், அனைத்து மேலூர், கொட்டாம்பட்டி ஒன்றிய தலைவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம், கல்வித் துறை இணைந்து நடத்திய மனிதச் சங்கிலி விழிப்புணர்வு முகாமை புதன்கிழமை தொடங்கிவைத்து அவர் பேசியது:

ஐக்கிய நாடுகள் அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 22}ம் தேதி உலக நீர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. குடிநீர் பிரச்னைக்குத் தீர்வுகாண்பதும், அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதும் இதன் நோக்கமாகும்.

உலகில் 150 கோடி மக்கள் சுத்தமான குடிநீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். ஆண்டுக்கு 40 லட்சம் பேர் நீரினால் பரவும் வியாதிகளால் மரணமடைகின்றனர். உலகில் மக்கள் தொகை இரண்டாக அதிகரிக்கும் போது தண்ணீரின் தேவை 6 மடங்காக உயர்கிறது.

ஜல்மானி திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் படிக்கும் மாணவர்களுக்கு சுத்தமான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு தமிழக அரசு முனைப்புடன் ஒரு திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பொருட்டு திட்டத்தை வடிவமைத்துச் செயல்படுத்தி வருகிறது. குடிநீரை சேமிப்பதும், சிக்கனமாகச் செலவழிப்பதும் அனைவரின் தலையாய கடமையாகும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவர் பி.அசோக்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவர் பேசுகையில், தண்ணீரை சிக்கனமாகச் செலவழிப்பதன் அவசியத்தையும், சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

மதுரை மாநகராட்சி தலைமைப் பொறியாளர் கே.சக்திவேல், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியப் பொறியாளர் ஆ.மாரியப்பன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ச.செல்வராஜ் உள்ளிட்டோர் பேசினர்.

விழிப்புணர்வு மனித சங்கிலி: குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள், கல்வித் துறையினர், மாணவ, மாணவிகள் ராஜா முத்தையா மன்றம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை மனிதச் சங்கிலியாக நின்று தண்ணீரை சேமித்து சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

உலக நீர் தின விழா, தும்பைப்பட்டி அல்லது கருங்காலக்குடியில் மார்ச் 22}ம் தேதி நடத்தப்பட்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன என்று நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

Last Updated on Thursday, 18 March 2010 11:17
 

சென்னையில் குடியரசு தின விழா கோலாகலம் : கவர்னர் ‌கொடியேற்ற ; அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு

Print PDF

தினமலர் 26.01.2010

சென்னையில் குடியரசு தின விழா கோலாகலம் : கவர்னர் ‌கொடியேற்ற ; அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு

ஜனவரி 26,2010,09:16 IST

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சென்னை: சென்னை கடற்கரை சாலையில் குடியரசு தினவிழா கோலாகலமாக நடைபெற்றது. கவர்னர் பர்னாலா, முதல்வர் மு.கருணாநிதி ஆகியோர் காலை 07:55 மணி அளவில் விழா மேடைக்கு வந்தனர். சரியாக 8 மணிக்கு தேசியக் கொடியை கவர்னர் ஏற்றி வைத்தார். முப்படை வீரர்கள் அணிவகுத்து வந்தனர். அவர்களின் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அரசின் சாதனைகளை விளக்கும் அலங்கார ஊர்திகளும் அணிவகுத்து வந்தன. சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெறும் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

கலை நிகழ்ச்சிகள் : பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இந்திய கலாச்சாரத்தை பறைசாற்றும் நடன, நாட்டியங்களை வண்ணமிகு உடையணிந்து நிகழ்த்திக் காட்டினர். கலை நிகழ்ச்சியை தொடர்ந்து அரசின் சாதனைகளை எடுத்துக்கூறும் அலங்கார அணிவகுப்பு நடந்தது. முதலில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அலங்கார வாகனம் அசைந்தாடி வந்தது. அடுத்ததாக ஊரகவளர்ச்சித் துறை வாகனம். அதில் தமிழகத்தில் ஊராட்சித் துறை எட்டியுள்ள சாதனைகளை விளக்கும் விதமாக பல்வேறு காட்சிகள் இடம்பெற்றன. உர ஆலை துறை ஊர்தி, தமிழ்நாடு சுற்றுலாத்துறை கண்டுள்ள மேதகு வளர்ச்சியை விளக்கும் சுற்றுலாத்துறை ஊர்தி, தொழில் துறை சாதனைகளை விளக்கும் ஊர்திகளில் முதலில் வந்தது மின்சார வாரியத்தின் ஊர்தி. இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம். விவசாயத்துறை ஊர்தி தமிழக அரசு விவசாயிகளுக்கு அளித்துள்ள சலுகைகளை விளக்கியபடி அணிவகுத்தது. காவல்துறை ஊர்தியில் இருந்த காவலர்கள் மேடையில் இருந்த தலைவர்களுக்கு சல்யூட் அடித்தபடி சென்றனர்.தோட்கலைத் துறை, மீன்வளத்துறை, பால் வளத்துறை மற்றும் கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் வெற்றியை எடுத்துக்கூறும் விதமாக கம்பீரமாக வந்தது குடும்ப நலத்துறை ஊர்தி. அலங்கார ஊர்தி அணிவகுப்பை கவர்னரும், முதல்வரும் கண்டு ரசித்தனர். பின்னர் தேசியப் பாடல் இசைக்கப்பட்டு, விழா நிறைவடைந்தது. குடியரசு தின விழா மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக வண்ணமிகு பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டன.

 


Page 12 of 42