Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - General

சென்னை அரசு மருத்துவமனைகளில் "அம்மா' உணவகங்கள்

Print PDF

தினமணி      22.09.2014

சென்னை அரசு மருத்துவமனைகளில் "அம்மா' உணவகங்கள்


சென்னையில் உள்ள 4 முக்கிய அரசு மருத்துவமனைகளில் "அம்மா' உணவகங்களை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை (செப்.22) தொடங்கி வைக்கிறார்.

சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் வார்டுக்கு ஒன்று என 200 அம்மா உணவகங்கள் உள்ளன.

மேலும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, எழும்பூர் தாய்-சேய் நல மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளிலும் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த உணவகங்களில் மலிவு விலையில் இட்லி, பொங்கல், சப்பாத்தி, சாம்பார் சாதம், தயிர் சாதம் உள்ளிட்ட உணவுகள் விற்கப்படுகின்றன. இந்த உணவகங்களுக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள பிற அரசு மருத்துவமனைகளிலும் அம்மா உணவகங்களை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில்,திருவல்லிக்கேணி அரசு கஸ்தூர்பா காந்தி தாய் -சேய் நல மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை நேரடியாகத் தொடங்கி வைக்கிறார்.

மேலும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். மகப்பேறு மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளின் வளாகங்களில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகங்களையும் முதல்வர் திறந்து வைக்கிறார்.

 

முதல்வரின் அறிவிப்புக்கு தொழில் அமைப்புகள் வரவேற்பு

Print PDF

தினமணி           26.08.2014

முதல்வரின் அறிவிப்புக்கு தொழில் அமைப்புகள் வரவேற்பு

கோவை மாநகராட்சிப் பகுதிக்கு ரூ.237 கோடிக்குத் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததை பல்வேறு தொழில் அமைப்புகள் வரவேற்றுள்ளன.

காட்மா சங்கம்: தமிழக முதல்வர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கோவை மாநகரில் நிலவும் போக்குவரத்துப் பிரச்னையைக் கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், லாரி நிறுத்தம், அரை வட்டச் சாலை, அடுக்குமாடி வாகன நிறுத்துமிடங்கள், மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.

கட்டடக் கழிவுகளை மறுசுழற்சி செய்து தரும் திட்டம் கோவையில் முதல் முதலாகச் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். மேலும் மழை நீர் வடிகால் வசதியும் படிப்படியாக ஏற்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். இதை கோயமுத்தூர் திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கம் (காட்மா) சார்பில் வரவேற்கிறோம் என காட்மா தலைவர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

இந்திய தொழில் வர்த்தக சபை, கோவை: தமிழக முதல்வர் கோவைக்கு அறிவித்த திட்டங்களை வரவேற்கிறோம். முதல்வர் அறிவித்த திட்டங்களின் மூலம் கோவை மாநகரின் வளர்ச்சி அதிகரிக்கும்.

அடுக்குமாடி வாகன நிறுத்துமிடங்கள், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், லாரி நிறுத்தத்தை மாற்றுவது உள்ளிட்ட திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று இந்திய தொழில் வர்த்தக சபைத் தலைவர் டி.நந்தகுமார் தெரிவித்துள்ளார். முதல்வர் கோவைக்காக அறிவித்த பல்வேறு திட்டங்களை கோவை மாவட்ட சிறுதொழில் சங்கமான கொடிசியாவும் வரவேற்றுள்ளது.

Last Updated on Tuesday, 26 August 2014 09:47
 

3 இடங்களில் உயர் கோபுர மின்விளக்கு

Print PDF

தினமணி             01.02.2014

3 இடங்களில் உயர் கோபுர மின்விளக்கு

விழுப்புரத்தில் காட்பாடி ரயில்வே கேட் உள்ளிட்ட 3 பகுதிகளில் ரூ.17.52 லட்சத்தில் உயர்கோபுர மின்விளக்கு வசதி ஏற்படுத்த நகராட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

விழுப்புரம் நகராட்சிக் கூட்டம், தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

இக் கூட்டத்தில் விழுப்புரம் நகராட்சிக்கு உள்பட்ட புறவழிச் சாலை, எல்லீஸ் சத்திரம் சாலை, மாவட்ட பெருந்திட்ட வளாகம் செல்லும் சாலை சந்திப்பு பகுதிகளில் போதுமான மின் விளக்கு வசதிகள் இல்லாததால் அவ்வப்போது வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. இந்தப் பகுதிகளில் 7 குழல் விளக்குகள், 6 சோடியம் விளக்குகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. கோலியனூர் காய்வாயை சுத்தம் செய்ய ஒப்பந்த அடிப்படையில் 10 பணியாளர்களை நியமிப்பது, கட்டபொம்மன் நகர் பகுதியில் ரூ.1.45 லட்சத்தில் தார்ச் சாலை அமைப்பது, விஐபி நகர் மேற்கு பகுதியில் ரூ.1.80 லட்சத்துக்கு தார்ச் சாலை அமைப்பது, பி.ஜே.என். சாலை, சென்னை சாலையில் உள்ள காட்பாடி ரயில்வே கேட், திருச்சி சாலையில் உள்ள ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் எதிரில் உள்ள பகுதி ஆகிய இடங்களில் தலா ரூ.5.84 லட்சம் செலவில் உயர் கோபுர மின் விளக்கு அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக் கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் பலர் தங்கள் வார்டுகளுக்கு தேவையான திட்டங்கள் குறித்தும் கேள்வி எழுப்பினர். அதேபோல் தங்கள் பகுதியில் செயல்படுத்திக் கொண்டிருக்கும் திட்டங்கள் குறித்தும் விவாதித்தனர்.

 


Page 2 of 42