Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

ஈரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

Print PDF

தினத்தந்தி              18.02.2014

ஈரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

ஈரோடு மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள். அதைத்தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தொடங்கி உள்ளனர். நேற்று காரைவாய்க்கால் மண்டபம்வீதி, கச்சேரி வீதி, மாரிமுத்து வீதிகளில் ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினார்கள்.

மண்டல உதவி ஆணையாளர் விஜயகுமார் தலைமையில் இளம் பொறியாளர்கள் பிரேம்குமார், முருகானந்தம் மற்றும் சுகாதார ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் பணியாளர்கள் சம்பவ இடங்களுக்கு சென்றனர். அங்கு போக்குவரத்துக்கு இடையூறாக கட்டப்பட்டு இருந்த சுவர்கள், சிலாப்புகள் மற்றும் கூரைகளை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்தனர்.

சுமார் 50 கடைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பாதுகாப்பு பணியில் ஈரோடு டவுன் போலீசார் ஈடுபட்டு இருந்தனர்.

இதுபோல் மாநகர் பகுதி முழுவதும் மாநகராட்சி ரோடுகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

சத்தியமங்கலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினத்தந்தி           12.12.2013

சத்தியமங்கலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சத்தியமங்கலம் நகராட்சிக்கு உள்பட்ட வடக்குப்பேட்டை, சத்யா ரோடு, கோட்டணக்காரவீதி, நிர்மலா தியேட்டர்ரோடு ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்பட்டது. இதனால் அந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிக் கொள்ளுமாறு சத்தி நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து ஏராளமானோர் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனர். ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்த பகுதிகளுக்கு சத்தி நகரமைப்பு ஆய்வாளர் பி.செல்வம், துப்புரவு அதிகாரி சக்திவேல் ஆகியோர், நகராட்சி துப்புரவு பணியாளர்களுடன் நேரில் சென்று போலீசார் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

 

பவானியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினத்தந்தி             29.11.2013

பவானியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பவானி பஸ்நிலையத்தில் உள்ள நடைபாதையில் வியாபாரிகள் கடைகளை அமைத்து ஆக்கிரமித்திருந்தனர். அதனால் பஸ்நிலையத்தில் பயணிகள் நிற்பதற்கு இடமில்லாமல் அவதிப்பட்டு வந்தனர். மேலும் குடிநீர் தொட்டி மற்றும் கழிவறைகள் சுகாதாரமற்ற நிலையில் காணப்பட்டன. அதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதுகுறித்து கோபி உதவி கலெக்டர் சந்திரசேகரசாகமுரியிடம் புகார் மனு கொடுத்தனர். அதைத்தொடர்ந்து உதவிகலெக்டர், பவானி பஸ்நிலையத்தில் நேற்று முன்தினம் திடீர் என்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நகராட்சி ஊழியர்களிடம் பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ள கடைகளை அகற்றும் படி உத்தரவிட்டார். அதன்பேரில் ஊழியர்கள் நேற்று காலை 11 மணி அளவில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.

அதைத்தொடர்ந்து பவானி பஸ்நிலையத்தில் பயணிகள் நிற்பதற்கும், நடந்து செல்வதற்கும் இடவசதி உள்ளதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறினர்.

 


Page 3 of 204