தினமணி 08.04.2013
சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு
திருப்பாதிரிப்புலியூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை 4 நாள்களுக்குள் அகற்றிக் கொள்ள வேண்டும் என கோட்டாட்சியர் ரா.லலிதா உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் கோட்டாட்சியர் ரா.லலிதா, திருவந்திபுரம் சாலையில் திருப்பாதிரிப்புலியூரில் இருந்து கூத்தப்பாக்கம், பாதிரிக்குப்பம் வரை சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
அப்பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் 4 நாள்களுக்குள் ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும். தவறினால் நெடுஞ்சாலை மற்றும் வருவாய்த் துறைப் பணியாளர்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு
திருப்பாதிரிப்புலியூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை 4 நாள்களுக்குள் அகற்றிக் கொள்ள வேண்டும் என கோட்டாட்சியர் ரா.லலிதா உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் கோட்டாட்சியர் ரா.லலிதா, திருவந்திபுரம் சாலையில் திருப்பாதிரிப்புலியூரில் இருந்து கூத்தப்பாக்கம், பாதிரிக்குப்பம் வரை சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
அப்பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் 4 நாள்களுக்குள் ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும். தவறினால் நெடுஞ்சாலை மற்றும் வருவாய்த் துறைப் பணியாளர்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றும் தெரிவித்தார்.