Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

விளம்பர பலகைகளை அகற்ற கலெக்டர் உத்தரவு அரசியல் கட்சி விளம்பரங்களை அகற்ற அதிகாரிகள் தயக்கம்

Print PDF
தினமலர்                06.05.2013

விளம்பர பலகைகளை அகற்ற கலெக்டர் உத்தரவு அரசியல் கட்சி விளம்பரங்களை அகற்ற அதிகாரிகள் தயக்கம்


தாம்பரம்: கலெக்டரின் உத்தரவை தொடர்ந்து, முக்கிய சாலைகளில் உள்ள விளம்பர பலகைகளை அகற்றும் பணியில்,பேரூராட்சி நிர்வாகங்கள் ஈடுபட்டு உள்ளன. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, தாம்பரம் - வேளச்சேரி சாலை, ராஜிவ்காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட, முக்கிய சாலைகளின் பராமரிப்பு குறித்த கூட்டம், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் சித்ரசேனன் தலைமையில் நடந்தது.

இதில், சிட்லபாக்கம், பீர்க்கண்காரணை, பெருங்களத்தூர், செம்பாக்கம், மாடம்பாக்கம் பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள், ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், முக்கிய சாலைகளின் இருபுறத்திலும் குப்பை, பிளாஸ்டிக் கொட்டுவதை தடுக்க வேண்டும். மாடு, நாய்கள் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்த வேண்டும்.

இருபுறத்திலும் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும் என,உத்தரவிடப்பட்டது. கலெக்டரின் இந்த உத்தரவை தொடர்ந்து, முக்கிய சாலைகளில், அனுமதியின்றி வைக்கப்பட்டு உள்ள, விளம்பர பலகைகளை அகற்றும் பணியில், பேரூராட்சி நிர்வாகங்கள் ஈடுபட்டு உள்ளன. செம்பாக்கம் பேரூராட்சியில், அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்த விளம்பர பலகைகளை, பேரூராட்சி அதிகாரிகள் அகற்றினர். சில பலகைகளுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால், அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்ற, அதிகாரிகள் தயக்கம் காட்டிவருகின்றனர்.
 

மே 8 பழனியில் மீண்டும் ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF
தினமணி       02.05.2013

மே 8 பழனியில் மீண்டும் ஆக்கிரமிப்பு அகற்றம்


பழனியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில் வரும் மே 8ஆம் தேதி மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெறவுள்ளது.

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு கடந்த சிலவாரங்களுக்கு முன்னதாக ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. பேருந்து நிலையத்தில் இருந்து அடிவாரம் செல்லும் வழி, கிரிவீதி, சன்னதி ரோடு உள்ளிட்ட பல இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து திருவிழா நிறைவு பெற்ற நிலையில், தற்போது மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியருக்கு வந்த புகாரைத் தொடர்ந்து, பழனி கோட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், வட்டாட்சியர் இதயத்துல்லாகான், டிஎஸ்பி., குப்புராஜ், நகராட்சி ஆணையர் பாலகிருஷ்ணன், பழனிக்கோயில் துணை ஆணையர் இராஜமாணிக்கம், நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப் பொறியாளர் சங்கர், வருவாய் அலுவலர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் வரும் மே 8ஆம் தேதி அனைத்துத் துறைகளும் பங்கேற்கும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இந்த முறை பழனி அடிவாரம் மட்டுமன்றி பழனி காந்திரோடு, ஆர்.எப்.ரோடு, புதுதாராபுரம் ரோடு என நகரின் அனைத்துப் பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

பல்லடத்தில், வீட்டு வசதி வாரிய இடத்தில் இருந்த கோவில் இடித்து அகற்றம்

Print PDF

தினத்தந்தி              29.04.2013

பல்லடத்தில், வீட்டு வசதி வாரிய இடத்தில் இருந்த கோவில் இடித்து அகற்றம்

பல்லடத்தில் வீட்டு வசதி வாரிய இடத்தில் இருந்த விநாயகர் கோவில் இடித்து அகற் றப்பட்டது.

விநாயகர் கோவில்

பல்லடம் செட்டிப்பாளை யம் ரோட்டில் சி.டி.சி. டெப்போ அருகில் வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்த மான 5.14 ஏக்கர் நிலத்தில் கடந்த 1995, 96, 97-ம் ஆண்டு களில் 69 வீடுகள் கட்டப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக் கப்பட்டது. மீதம் உள்ள 1.47 ஏக்கர் நிலம் காலியாக இருந்து வருகிறது. அந்த காலியிடத்தின் ஒரு பகுதியில் கடந்த 1Ñ ஆண்டுகளுக்கு முன் சிலர் விநாயகர் கோயில் கட்டி வழிபட்டு வந்தனர்.

தற்போது அரசுக்கு சொந்த மான இடங்களை அந்தந்த துறையினர் உரிய பயன் பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் என்று உயர் அதி காரிகள் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து வீட்டு வசதி துறை அதிகாரிகள் பல் லடத்தில் வீட்டு வசதி துறைக்கு சொந்தமான இடத் தில் உள்ள விநாயகர் கோவிலை அகற்ற முடிவு செய்தனர். இதற்காக சம்பந் தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

சாமி சிலைகள் அகற்றம்

இந்த நிலையில் நேற்று காலை 9Ñ மணி அளவில் விநாயகர் கோவிலை அகற்ற வீட்டு வசதி வாரிய துறை மேற்பார்வை பொறியாளர் சாரங்கபாணி, செயற்பொறி யாளர் சங்கர் லால், உதவி செயற்பொறியாளர் சாந்தி மற்றும் பொறியாளர்கள், பல் லடம் தாசில்தார் நல்லசாமி, பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் அந்த இடத்தில் குவிந்தனர். கொசவம்பாளை யம் பகுதி மக்களும் அங்கு வந்தனர்.

முதலில் விநாயகர் சிலையை எடுக்க முடிவு செய்யப்பட்டது. அப்போது பொதுமக்கள் அங்கு வந்து விநாயகர் சிலைகளை தாங் களே எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர். அதிகாரிகள் ஒத்துக் கொண்டதால் விநா யகர் சிலை, நந்தி சிலையை பொதுமக்கள் பாதுகாப்பாக எடுத்து வேனில் ஏற்றி அருகில் உள்ள கருப்பராயன் கோவி லில் வைத்தனர். பின்பு பொக் லைன் எந்திரம் மூலமாக கோவில் இடித்து தரைமட்டம் செய்யப்பட்டது. வீட்டு வசதி வாரிய துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட காலி இடத்தை சுற்றி கம்பி வேலி அமைக்கும் பணியில் ஈடு பட்டனர்.

கோவிலுக்கு செல்ல வழி

அப்போது கொசவம்பாளை யம் பகுதி மக்கள், தாங்கள் கருப்பராயன் கோவிலுக்கு செல்வதற்கு அந்த இடத்தில் வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றனர். இதற்கு அதிகாரிகள் முதலில் மறுத்தனர். இதனால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் கோவிலுக்கு செல்வதற்கு வழி வசதி ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் மனு தங்களுக்கு கொடுக்கு மாறும், அதன்பிறகு பாதை ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் அதிகாரிகள் கூறினார்கள். இதை பொதுமக்கள் ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து பாதைக்கு இடம் விட்டு கம்பி வேலி அமைக்கும் பணி நடைபெற்றது.

Last Updated on Monday, 29 April 2013 10:25
 


Page 15 of 204