Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

திருச்சி ஜங்ஷன் காதிகிராப்ட் அருகில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 5 கடைகள் அகற்றம்

Print PDF
தினத்தந்தி                  24.05.2013

திருச்சி ஜங்ஷன் காதிகிராப்ட் அருகில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 5 கடைகள் அகற்றம்


திருச்சி ஜங்ஷன் காதிகிராப்ட் அருகில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 5 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக அப்புறப்படுத்தினர்.

ஆக்கிரமிப்பு அகற்றம்

திருச்சி ஜங்ஷன் காதிகிராப்ட் ராஜீவ் காந்தி சிலை அருகில் 3 கடைகள் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தன. இவற்றில் ஓட்டல்கள் இயங்கி வந்தன. இந்த ஓட்டல்களை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அதிரடியாக அகற்றினார்கள்.

போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரங்கள் மூலம் கட்டிடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதே போல் வழிவிடுவேல் முருகன் கோவில் அருகில் இருந்த இன்னொரு ஓட்டல், அதனை ஒட்டி இருந்த சாலையோர பூக்கடைகளும் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன.

அதிரடி தொடரும்

மாநகராட்சி ஆணையர் தண்டபாணி உத்தரவின்படி பொன்மலை கோட்ட உதவி ஆணையர் தனபால், உதவி வருவாய் அதிகாரி பத்மநாதன், உதவி நிர்வாக பொறியாளர் நாகேஷ், உதவி பொறியாளர் ரவீந்திரன் ஆகியோர் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்தனர்.

திருச்சி ஜங்ஷன் பகுதியில் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள கட்டிடங்களை அப்புறப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
 

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF
தினமணி        21.05.2013

ஆக்கிரமிப்புகள் அகற்றம்


செங்கம் நகரில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் திங்கள்கிழமை அகற்றப்பட்டன .

துக்காப்பேட்டையிலிருந்து போளூர் சாலை வரை சாலையின் இரு புறமும் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அண்மையில் நடைபெற்ற நகரமைப்புக் குழு கூட்டத்தில் நகர மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, பேரூராட்சி, வருவாய், காவல் உள்ளிட்ட துறைகளின் அலுவலர்கள் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
 

நடைபாதை கடைகளை அகற்றும் பணி தீவிரம்

Print PDF
தினமணி        21.05.2013

நடைபாதை கடைகளை அகற்றும் பணி தீவிரம்

சென்னையில் சாலையோரம் மற்றும் நடைபாதைகளில் உள்ள பெட்டிக் கடைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது.

சென்னையில் நடைபாதை மற்றும் சாலைகளில் உள்ள பெட்டிக் கடைகளால் போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்படுவதாக கூறி, உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சென்னையில் உள்ள பெட்டிக் கடைகளை அகற்றி, அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.

இந்த நிலையில், சென்னையில் உள்ள பெட்டிக் கடைகளை அகற்றும் பணியில் அந்தந்த மண்டல அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: நடைபாதைகளில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டிருக்கு பெட்டிக் கடைகளை அகற்றி அதன் அறிக்கையை அளிக்கவேண்டும் என்று நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.

இதன்படி, பெட்டிக் கடைகளை அகற்றி அது குறித்த விவரங்களை வருகிற புதன்கிழமைக்குள் (22-ஆம் தேதி) அளிக்க மண்டல அதிகாரிகளிடம் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இதனால், பெட்டிக் கடைகளை அகற்றும் பணி தீவிரமடைந்துள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தேனாம்பேட்டை மண்டலத்தில் 62 கடைகளும், அண்ணாநகர் மண்டலத்தில் 36 கடைகளும் அகற்றப்பட்டுள்ளன. இதேபோல, கோடம்பாக்கம் (17 கடைகள்), வளசரவாக்கம் (8 கடைகள்), திரு.வி.க. நகர் (22 கடைகள்), தண்டையார்பேட்டை (18 கடைகள்), ஆலந்தூர் (6 கடைகள்) ஆகிய மண்டலங்களிலும் கடைகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாற்றுத்திறனாளிகள் சாலையோரங்களில் பெட்டிக் கடைகள் வைத்திருக்க நீதிமன்றம் அனுமதிக்கிறது. அவற்றை அகற்ற முடியாது. இதனால் மாநகராட்சி வணிக வளாகங்களில் இடம் ஒதுக்கும்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க ஆலோசனை நடந்து வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 


Page 13 of 204