Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

பெயர்ப் பலகைகள் அகற்றம்

Print PDF

தினமணி               19.06.2013

பெயர்ப் பலகைகள் அகற்றம்

பழங்காநத்தம் பகுதியில் விதிமீறி அமைக்கப்பட்ட பெயர்ப் பலகைகளை அகற்றச் சென்ற மாநகராட்சி அதிகாரிகள் மிரட்டப்பட்டதாக செவ்வாய்க்கிழமை புகார் எழுந்தது.

 மாநகராட்சி 4 மண்டலங்களிலும் இப்பணி நடந்து வருகிறது. தெற்கு மண்டலப் பகுதிகளில் மாநகராட்சி உதவி ஆணையர் ஆ.தேவதாஸ் தலைமையில் அனுமதியற்ற பெயர்ப் பலகைகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.

 பழங்காநத்தம் பகுதியில்  பெயர்ப்பலகைகளை அகற்றும் பணியில்  வட்டாட்சியர் கங்காதரன் முன்னிலையில், மாநகராட்சியினர் ஈடுபட்டனர். தனியார் மருத்துவமனை பலகையை அகற்ற முயன்றபோது,    சிலர்,  அதிகாரிகளை மிரட்டியதுடன், மாநகராட்சி ஜீப் ஓட்டுநர் நவாப் ஜானையும் தாக்கினர்.   இதுகுறித்து புகாரின் பேரில்  சுப்பிரமணியபுரம்   போலீஸ்   விசாரணை நடத்தினர்.

  மாவட்டம் முழுவதும் 938 அனுமதி பெறாத விளம்பரப் பலகைகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.

 

அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர போர்டுகள் அகற்றம்

Print PDF

தினகரன்                 18.06.2013 

அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர போர்டுகள் அகற்றம்

மதுரை, : மதுரை மாநகராட்சி பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர போர்டுகள், டிஜிட்டல் பேனர்கள் நேற்று அகற்றப்பட்டன.

மதுரை மாநகராட்சி பகுதியில் அனுமதியின்றி மெகா சைஸ் விளம்பர போர்டுகள், அரசியல் கட்சியினரின் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. இவற்றில் பெரும்பாலானவை நகரின் முக்கிய பகுதிகளில் வைக்கப்பட்டிருந்தன. இதனால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு பல்வேறு புகார்கள் சென்றன.

இதையடுத்து கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, நகரில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர போர்டுகளை அகற்றும்படி உத்தரவிட்டார். தாசில்தார்கள் கங்காதரன், வின்சென்ட் சேவியர், துணை தாசில்தார் ரவி மற்றும் வருவாய் அலுவலர்கள், மாநகராட்சி உதவி பொறியாளர் சேகர், மின்வாரிய அதிகாரி நாகராஜன் உள்ளிட்டோர் கொண்ட 8 குழுக்கள் அமைக்கப்பட்டன. மதுரை நகரில் உள்ள நான்கு மண்டலங்களிலும், ஒரு மண்டலத்துக்கு 2 குழுவினர் வீதம் சென்று அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர போர்டுகளை அதிரடியாக அகற்றினர்.

மெயின் ரோடுகளிலும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட விளம்பர பலகைகள் நேற்று ஒரே நாளில் அகற்றப்பட்டன. அனுமதி பெற்று விளம்பர போர்டுகள் வைத்துள்ளவர்கள், அதற்கான அத்தாட்சியை காண்பித்ததால் அந்த போர்டுகள் அகற்றப்படவில்லை.

 

மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 812 அனுமதி பெறாத விளம்பரப் பலகைகள் அகற்றம்

Print PDF

தினமணி               18.06.2013

மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 812 அனுமதி பெறாத விளம்பரப் பலகைகள் அகற்றம்

மதுரை மாநகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் திங்கள்கிழமை ஒரே நாளில் அனுமதி பெறாத 821 விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டன.

 விளம்பரப் பலகைகள், டிஜிட்டல் பேனர் போன்றவற்றை வைக்க அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக, உரிய கட்டணம் செலுத்த ஆட்சியர் தலைமையிலான  குழுவிடம் அனுமதி பெற வேண்டும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தரப்பில் ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இருப்பினும், பல இடங்களில் அனுமதி பெறாத விளம்பரப் பலகைகள் தொடர்ந்து வைக்கப்பட்டிருந்தன.

 அதையடுத்து, மாவட்டம் முழுவதும் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் அகற்ற ஆட்சியர் அன்சுல்மிஸ்ரா உத்தரவிட்டார். இதன்படி,  முதல்கட்டமாக மாநகராட்சி மற்றும் மாவட்டத்தில் அனைத்து பேரூராட்சிப் பகுதிகளிலும் அனுமதி பெறாத விளம்பரப் பலகைகளை அகற்றும் பணி திங்கள்கிழமை துவங்கியது.

 இப் பணிக்கென மாநகராட்சிப் பகுதியில் 8 குழுக்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும், தலா ஒரு வட்டாட்சியர் தலைமையில் வருவாய்த் துறையினர் 7 பேர்,  மாநகராட்சி உதவிப் பொறியாளர் தலைமையில் 8 பேர் இடம் பெற்றிருந்தனர்.

  இக் குழுவினர் திங்கள்கிழமை ஒரே நாளில், மதுரை நகரின் பல்வேறு இடங்களிலும்  அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த 798 விளம்பரப் பலகைகளை அப்புறப்படுத்தினர்.

 பேரூராட்சிப் பகுதிகளில் 14 விளம்பரப் பலகைகள் அப்புறப்படுத்தப்பட்டன.

 இப்பணி இன்னும் ஒரு வாரத்துக்கு தொடர்ந்து நடைபெறும் என்றும், நகராட்சிப் பகுதிகளில் அனுமதியற்ற விளம்பரப் பலகைகள் அப்புறப்படுத்தும் பணி செவ்வாய்க்கிழமை துவங்குகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


Page 12 of 204