Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

மாநகராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி

Print PDF

தினமலர்           27.09.2013

மாநகராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி

மதுரை:மதுரை மாநகராட்சியில், நீண்ட இடைவெளிக்கு பின், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி, நேற்று நடந்தது. வெளிநாடு பயணம் ரத்தான பின், சென்னையிலிருந்து நேற்று முன்தினம் மாலை மதுரை வந்த கமிஷனர் நந்தகோபால், அன்றிரவே, டவுன்ஹால் ரோடு பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

நேற்று காலையும் பணி தொடர்ந்த, வடக்கு ஆவணி மூலவீதி, பழைய சென்ட்ரல் மார்க்கெட் பகுதிக்கு வந்த கமிஷனர், அங்கு 250 ச.மீ., பரப்பில் ஆக்கிரமித்து கட்டியிருந்த தகர "ஷெட்' கடைகளை அகற்ற உத்தவிட்டார்.

அங்கு வந்த பி.எஸ்.கணேசன் என்பவர், ""நான் "ஸ்டே' வாங்கியிருக்கிறேன். யாரும் இடிக்க முடியாது,'' என, வாதிட்டார். ""கமிஷனர் பெயரில் இருக்கும் இடத்திற்கு, நீங்கள் எப்படி "ஸ்டே' வாங்குவீர்கள்?; போலியான ஆவணங்களை காட்டி, உங்கள் குழந்தைகள் பெயரில் மோசடியாக கட்டட அனுமதி பெற்றிருக்கீறீர்கள்'' எனக்கூறிய கமிஷனர், ஆக்கிரமிப்பை அகற்ற, உத்தரவிட்டார்.

தகர கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டன. அப்போது, வாகனம் முன்பு வந்து நின்ற கணேசன், ""என்னை கொன்றுவிட்டு, ஆக்கிரமிப்பை எடுங்கள்,'' என்றார். அவரை அங்கிருந்து நகர்த்திய அதிகாரிகள், ஆக்கிரமிப்பு "ஷெட்'டுகளை அப்புறப்படுத்தினார்.

மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்ததாக கணேசன் மீது, புகார் அளிக்க கமிஷனர் உத்தரவிட்டார். நீண்ட இடைவெளிக்கு பின் தொடங்கியுள்ள இப்பணியை, மாநகராட்சி தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

 

வேலூரில் கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினத்தந்தி            30.08.2013

வேலூரில் கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

 

 

 

 

 

 

வேலூரில் கடைகள் முன்பு இருந்த மேற்கூரைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினார்கள்.

ஆக்கிரமிப்புகள்

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள கடைகள் முன்பு ஆக்கிரமிப்புகள், மேற்கூரைகள், விளம்பர பலகைகள் அமைத்துள்ளதால் போக்குவரத்து நெரிசல், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

அதைத்தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் ஜானகி உத்தரவின் பேரில் நேற்று வேலூர் காட்பாடி சாலை, அண்ணா சாலை, பழைய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினர்.

பொக்லைன் எந்திரம் மூலம்

நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் பாஸ்கரன் தலைமையில் நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் வேலூர் கிரீன் சர்க்கிள் முதல் பாகாயம் வரையில் உள்ள காட்பாடி சாலை, ஆரணி ரோடு, அண்ணா சாலை ஆகிய இடங்களில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

இதில் கடைகள் முன்பு கால்வாய் மேல் கட்டப்பட்டு இருந்த தரைகள், படிக்கட்டுகள், மேற்கூரைகள், விளம்பர பலகைகள் ஆகியவற்றை அகற்றினர். ஒருசிலர் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு முன்பே தாங்களாகவே ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கூரைகள், பலகைகளை அகற்றி விட்டனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

பரமக்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமணி                17.08.2013

பரமக்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலை மற்றும் நெடுஞ்சாலைப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வெள்ளிக்கிழமை கோட்டாட்சியர் ஆர். குணாளன் தலைமையில் நடைபெற்றது.

 பரமக்குடி கோட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகள், சமுதாய கொடிகள், பேனர்கள் உள்ளிட்ட அனைத்தையும் அகற்ற மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

 அதன்பேரில் பரமக்குடி நகராட்சி பகுதியில் ஒருசிலர் தானாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டனர். இந்நிலையில் கோட்டாட்சியர் ஆர். குணாளன் தலைமையில் காவல் துணை கண்காணிப்பாளர் வி. வினோத் சாந்தாராம், வட்டாட்சியர் பா. வேணுகோபால், நகராட்சி ஆணையாளர் பொ. தங்கப்பாண்டி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர், மின்வாரிய ஊழியர்களுடன் சென்று ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

 பரமக்குடி ஓட்டப்பாலம் பகுதியில் தொடங்கி வசந்தபுரம், பாரதிநகர், ஐந்துமுனை சந்திப்பு, ஆர்ச் பகுதி, பேருந்து நிலையம், தீயணைப்பு நிலையம் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் ஒரு பிரிவாகவும், அதே ஓட்டப்பாலம் பகுதியிலிருந்து திரெüபதி அம்மன் கோயில், வட்டாட்சியர் அலுவலகம், வைகை ஆற்றுப்பாலம், வைகை நகர், தர்மராஜபுரம் ஆகிய நெடுஞ்சாலைப் பகுதியில் மற்றொரு பிரிவாகவும் சென்று ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

 இதில் வருவாய்த்துறை, காவல்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி, மின்வாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் காலை 8.00 முதல் மாலை 6.00 மணிவரை ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆக்கிரமிப்பை அகற்றிய பின்பு மீண்டும் ஆக்கிரமிப்போர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோட்டாட்சியர் தெரிவித்தார்.

 


Page 8 of 204