Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

கோபி பஸ்நிலையத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்த கடைகள் அகற்றம்

Print PDF

தினத்தந்தி           20.11.2013

கோபி பஸ்நிலையத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்த கடைகள் அகற்றம்

கோபி பஸ்நிலையத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்த கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உதவிகலெக்டர் சந்திரசேகரசாகமுரி மற்றும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தநிலையில், கோபி பஸ் நிலையத்தில் பூக்கடைகள் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கோபிசெட்டிபாளையம் உதவிகலெக்டர் சந்திரசேகரசாகமுரியிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, பஸ் நிலையத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு உள்ள கடைகளை அகற்றுமாறு நகராட்சி அதிகாரிகளுக்கு உதவி கலெக்டர் சந்திரசேகரசாகமுரி உத்தரவிட்டார்.

அவருடைய உத்தரவின் பேரில் நகராட்சி அதிகாரிகள் நேற்று காலை கோபிசெட்டிபாளையம் பஸ்நிலையத்துக்கு சென்றனர். அங்கு, சிறிய பஸ் நிற்கும் பகுதியில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்த பூக்கடைகள், வெற்றிலைக் கடைகள், டீக்கடைகள் ஆகியவற்றை அகற்ற கடைக்காரர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதன்படி சிலர் ஆக்கிரமித்து இருந்த கடைகளை அவர்களாகவே அகற்றினார்கள்.

இடமாற்றம்

அகற்றப்படாத சிலகடைகள் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டன. மேலும், சில கடைகளை கிரேன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு நகராட்சி லாரிகளில் ஏற்றிச் செல்லப்பட்டன. இதேபோல், பஸ்நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே வரும் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த அரசு போக்குவரத்து கழக முன்பதிவு மையம் மற்றும் அம்மா குடிநீர் விற்பனை நிலையம் ஆகியவை சிறிய பஸ்கள் நிற்கும் இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டன.

பஸ்நிலையத்தில் பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதை, நிற்கும் இடங்கள் ஆகியவற்றில் ஆக்கிரமித்து கடைகளை அமைக்கக் கூடாது. அவ்வாறு தடையை மீறி கடைகளை அமைத்தால் அவர்கள் மீது நகராட்சி நிர்வாகம் சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். பஸ்நிலையத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்த கடைகள் அகற்றப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

திருப்பூர் குமரன் நினைவகத்தை சுற்றியிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினத்தந்தி            07.11.2013

திருப்பூர் குமரன் நினைவகத்தை சுற்றியிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருப்பூர் குமரன் நினை வகத்தை சுற்றியிருந்த ஆக்கிரமிப்புகளை மாநக ராட்சி அதிகாரிகள் நேற்று அதிரடியாக அகற்றினார்கள்.

திருப்பூர் குமரன் நினைவகம்

திருப்பூர் ரெயில் நிலையம் முன் சுதந்திர போராட்ட தியாகி திருப்பூர் குமரன் நினைவகம் உள்ளது.

இந்த நினைவகத்தில் குமர னின் வர லாற்றை சித்தரிக்கும் விளக்க படங்கள், நூலகம் ஆகியவை அமைந்துள்ளன. குமரனின் தியாகத்துக்கு அடையாள மாக விளங்கி நிற்கும் இந்த நினைவகத்தை சுற்றி நடை பாதைகள் அமைக் கப்பட்டு இருக்கிறது.

ஆனால் குமரன் நினை வகத்தை சுற்றி இருக்கும் நடைபாதைகளை ஆக்கிர மித்து தள்ளுவண்டி கடைகள், பழ கடைகள், கார், ஆட்டோ ஓட்டுனர்கள் ஓலை குடிசை அமைத்து ஆக்கிரமித்து வைத் திருந்தனர். இதனால் குமரன் நினைவகத்தை சுற்றிலும் அதிகப்படியான ஆக்கிர மிப்புகள் காணப்பட்டன.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இதுகுறித்து திருப்பூர் மாநக ராட்சி கமிஷனர் செல்வ ராஜூக்கு புகார் தெரிவிக்கப் பட்டது. மாநகராட்சி கமிஷன ரின் உத்தரவின் பேரில் 4-வது மண்டல உதவி கமிஷனர் செல்வநாயகம் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று காலை குமரன் நினை வகத்தை சுற்றி உள்ள ஆக் கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினார்கள். குறிப்பாக குமரன் நினைவகத்தின் பின் பகுதியில் இருந்த ஆட்டோ, கார் ஓட்டுனர்களால் அமைக் கப்பட்ட ஓலைக்குடிசை தாழ் வாரம், தள்ளுவண்டி கடை கள் உள்ளிட்டவற்றை பொக் லைன் எந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தினார்கள்.

எந்தவித பிரச்சினைகளும் ஏற்படாமல் இருப்பதற்காக திருப்பூர் வடக்கு போக்கு வரத்து போலீஸ் இன்ஸ்பெக் டர் பதி தலைமையில் போலீ சார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். திருப்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து வெளிவரும் பகுதி, காதர் பேட்டை செல்லும் ரோடு, ஜெய்வாபாய் பள்ளிக்கு செல்லும் ரோடு பகுதிகளில் ரோட்டோரம் உள்ள ஆக் கிரமிப்புகளையும் மாநக ராட்சி அதிகாரிகள் முற்றிலும் அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

வேலூர் நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமணி            07.11.2013

வேலூர் நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வேலூர் ஆபிசர்ஸ் லைனில் மாநகராட்சிக்கு சொந்தமான சாரதி மாளிகை முன்புறம் ஆக்கிரமித்திருந்த கடைகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

சாரதி மாளிகை வளாகத்தில் 70-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இவற்றுக்கு செல்லும் பாதைகள் அனைத்தும் அடைபடும் அளவுக்கு சாலையோர கடைகள் 30-க்கும் மேற்பட்டவை ஆக்கிரமித்திருந்தன.

 இது தொடர்பாக வணிகர்கள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார் தெரிவித்தவண்ணம் இருந்தனர். இதையடுத்து மாநகராட்சி பணியாளர்கள் புதன்கிழமை காலை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு அக்கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்புறப்படுத்தப்பட்ட தளவாடங்கள் அனைத்தும் லாரியில் ஏற்றப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டன.

 


Page 5 of 204