Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Poverty Alleviation

ஏழைகளுக்கான வீட்டு வசதி திட்டம்: தில்லி அரசு முடிவு

Print PDF

தினமணி                   23.11.2010

ஏழைகளுக்கான வீட்டு வசதி திட்டம்: தில்லி அரசு முடிவு

புதுதில்லி, நவ.22- ஏழைகளுக்கு குறைந்த செலவில் வீடுகள் கட்டித் தருவதற்கான திட்டம் குறித்து ஆராய உயர்மட்டக் குழு ஒன்றை தில்லி மாநில அரசு நியமித்துள்ளது.

முதல்வர் ஷீலா தீட்சித் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. நிதியமைச்சர் ஏ.கே. வாலியா, பொதுப்பணித்துறை அமைச்சர் ராஜ்குமார் செளஹான், சமூக நலத்துறை அமைச்சர் மங்கத் ராம் சிங்கல் ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

வீடு இல்லாதவர்களுக்கும் குடிசைகளில் வாழ்பவர்களுக்கும் குறைந்த செலவில் வீடுகள் கட்டித் தருவது குறித்து இந்த குழு விரைவில் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும். அதன் அடிப்படையில், தில்லியில் ஏழைகளுக்காக சுமார் 9000 வீடுகள் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் கிழக்கு தில்லியில் 4 மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில், சுமார் 70 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, மேற்கண்ட அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

 

வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன்: வீட்டு வசதி வாரியம் ஏற்பாடு

Print PDF

தினமணி            19.11.2010

வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன்: வீட்டு வசதி வாரியம் ஏற்பாடு

தேனி, நவ. 18: நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் வசித்துவரும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வீடு கட்டுவதற்காக வீட்டு வசதி வாரியம் மூலம் வங்கிக் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

÷இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

÷இந்தத் திட்டத்தில் மாத வருமானம் ரூ 5 ஆயிரம் வரை உள்ள பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு 25 சதுர மீட்டர் பரப்பளவில் வீடு கட்டுவதற்கு ரூ 1 லட்சம், ரூ 5 ஆயிரம் முதல் ரூ 10 ஆயிரம் வரையுள்ள வருவாய் பிரிவினருக்கு 40 சதுர மீட்டர் பரப்பளவில் வீடு கட்டுவதற்கு ரூ 1.6 லட்சம் வரை வங்கிக் கடன் வழங்கப்படுகிறது.

÷இந்தக் கடன் தொகையை 15 முதல் 20 ஆண்டுகளுக்குள் திரும்பச் செலுத்த வேண்டும். கடனுக்குரிய வட்டியில் 5 சதவீதம் மானியம் வழங்கப்படும். கூடுதல் கடன் தேவைப்படுபவர்களுக்கு தொகைக்கு ஏற்ப சாதாரண வட்டி வசூலிக்கப்படும். ÷சொந்த வீடு இல்லாதவர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். வீட்டுமனைப் பட்டா வைத்திருப்போர், அரசு இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றுள்ளவர்கள் இந்தத் திட்டத்தில் கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

÷மேலும் விவரங்களுக்கு, மதுரை எல்லீஸ் நகரில் உள்ள வீட்டு வசதிப் பிரிவு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் அலுவலகம், நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களை பொதுமக்கள் அணுகலாம் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated on Friday, 19 November 2010 11:24
 

நகர்புற ஏழை மக்கள் வீடு கட்ட வங்கி கடனுதவி பெறலாம்

Print PDF

தினகரன்                  19.11.2010

நகர்புற ஏழை மக்கள் வீடு கட்ட வங்கி கடனுதவி பெறலாம்

ஊட்டி, நவ. 19: நகர்புற ஏழைகள் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் வீடு கட்டிக்கொள்ள வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது.

நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்கள் பயனடையும் வகையில் வீடு கட்டி கொள்ள வங்கி மூலம் கடனுதவி வழங்கும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இதனை செயல்படுத்தும் முறை மற்றும் பொதுமக்களுக்கு நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் மூலம் மேற்கொள்ள வேண்டிய பணிகள், பயன்கள் குறித்து எடுத்துரைக்கும் ஆய்வு கூட்டம் ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட அரங்கில் நடந்தது.

கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். கோவை வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் ராமமூர்த்தி கலந்துக் கொண்டு பேசுகையில், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் வீடு கட்டிக்கொள்ள அரசு உதவி செய்ய திட்டம் வகுத்துள்ளது. இதன்படி நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு நகர்புற ஏழைகள் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வங்கி மூலம் கடனுதவி வழங்கப்பட உள்ளது.

வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு ரூ.1 லட்சமும், குறைந்த வருவாய் பிரிவினருக்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரமும் கடனுதவிகள் வங்கி மூலம் வழங்கப்படும். இத்திட்டம் சிறப்பாக நடந்திட சம்பந்தப்பட்ட நகராட்சி தலைவர்கள், அலுவலர்கள் மற்றும் பேரூராட்சி தலைவர்கள் மற்றும் அலுவலர்கள் பொதுமக்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

இத்திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் விழிப்புணர்வு கூட்டங்கள் மற்றும் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசின் நகர்புற ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டம் சிறந்த முறையில் மாவட்டத்தில் நடந்திட மாவட்ட நிர்வாகம், நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் உதவிட வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குப்புசாமி, மகளிர் மேம்பாட்டு திட்ட அலுவலர் பங்கேற்று உறுப்பினர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தனர். நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர். இத்திட்டம் குறித்து பொதுமக்களிடையே தேவையான அறிவிப்புகளை வழங்கி திட்டத்தை சீரிய முறையில் செயலாக்க அனைத்து உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளும் உதவிட வேண்டும் என்று கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் கேட்டு கொண் டார்.

 


Page 4 of 34