Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Poverty Alleviation

வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு கட்டுமானப் பயிற்சி

Print PDF

தினமணி 30.06.2010

வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு கட்டுமானப் பயிற்சி

திருவள்ளூர், ஜூன் 29: திருவள்ளூர் மாவட்டத்தில் பேரூராட்சி பகுதியில் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்களில் வேலை வாய்ப்பற்றவர்களுக்கு எல் அண்டு டி நிறுவனம் சார்பில் கட்டுமானப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதில் சாரம் அமைத்தல், ஷட்டரில் கம்பி வளைத்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. 5-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்களும், ஐடிஐ முடித்தவர்களும் இந்த பயிற்சியில் பங்கேற்கலாம்.

இப்பயிற்சியில் சேர விரும்புவோர் சம்மந்தப்பட்ட பேரூராட்சியில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளோர் பட்டியலை சரிபாத்து அங்குள்ள செயல் அலுவலரிடம் தங்களது விண்ணப்பத்தை வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

வீடு கட்ட ரூ.1 லட்சம் கடன் நகராட்சி சேர்மன் தகவல்

Print PDF

தினமலர்   21.06.2010

வீடு கட்ட ரூ.1 லட்சம் கடன் நகராட்சி சேர்மன் தகவல்

திருச்செங்கோடு: "வீடு கட்ட வசதியில்லாத நகர்புற மக்களுக்கு ஹட்கோ மூலம் ஒரு லட்சம் ரூபாய் கடன் உதவி வழங்கப்படும்' என, நகராட்சி சேர்மன் நடேசன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை: வீடு கட்ட வசதியில்லாத ஏழை, எளிய மக்கள் வீடு கட்ட ஹட்கோ நிறுவனம் மூலம் ஒரு லட்சம் ரூபாய் கடன் உதவி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதற்கு ஐந்து சதவீத வட்டி சலுகை வழங்கப்படுகிறது. இந்த கடனுதவியை பெற விரும்புவோர் நிலத்தின் பட்டா நகலுடன் நகராட்சிக்கு விண்ணப்பம் செய்யலாம். தகுதியுள்ள மனுக்களுக்கு கடனுதவி வழங்க நகராட்சி நிர்வாகம் பரிந்துரை செய்யும். இதை சம்மந்தப்பட்ட மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆக்கிரமிப்பு இடத்திலிருந்த கோவில்கள் இடிப்பு தொடரும் : திருச்சி மாநகராட்சியின் நடவடிக்கை

Print PDF

தினமலர் 17.06.2010

ஆக்கிரமிப்பு இடத்திலிருந்த கோவில்கள் இடிப்பு தொடரும் : திருச்சி மாநகராட்சியின் நடவடிக்கை

திருச்சி: திருச்சி கே.கே.நகரில் ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டிருந்த இரண்டு இந்து கோவில்கள் மாநகராட்சியால் இடிக்கப்பட்டது.

திருச்சி மாநகரின் வளர்ச்சி திட்டப்பணிகளுக்காக மத்திய அரசு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளது. அந்நிதி மூலம் மாநகரில் நெருக்கடியில்லாமல் அகலமான சாலை வசதிகளை ஏற்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு சய்துள்ளது. அதற்காக மாநகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மாநகராட்சி நிர்வாகம் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பில் உள்ள இந்து, முஸ்லீம் மதங்களின் கோவில்களை இடிக்க மாநகராட்சியால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போதெல்லாம் அம்மதத்தை சேர்ந்தோரிமிடமிருந்து எதிர்ப்பு கிளம்பவே ஆக்கிரமிப்புகள் அகற்ற முடியாமல் போனது. மாநகரை விரிவுபடுத்த தேவையான நிதி மத்திய அரசு ஒதுக்கவுள்ள நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றியாக வேண்டிய கட்டாயத்தில் மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

இதனால், திருச்சி மாநகரில் தற்போது மாநகராட்சியால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் கோட்டை மற்றும் காந்தி மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டிருந்த இந்து கோவில்கள் இடிக்கப்பட்டது. இதற்கு பாரதிய ஜனதாக்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்புகளை கண்டு கொள்ளாமல் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டிருந்த கோவில்கள் இடிக்கப்பட்டது. நேற்று முன்தினம் மலைக்கோட்டை வாசல் அருகேவுள்ள தர்காவும், மரக்கடை பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த தர்காவும் இடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, நேற்று கே.கே.நகர் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. சுந்தர் நகரிலுள்ள சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் இடிக்கப்பட்டது.

கோவிலை இடிப்பதால் ஏதாவது பிரச்னைகள் ஏற்படாமலிருக்க சம்பவ இடத்துக்கு மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) தட்சிணாமூர்த்தி, மாநகராட்சி கமிஷனர் பால்சாமி, போலீஸ் ஏ.சி.,க்கள் ராஜசேகரன், பழனிச்சாமி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். பாதுகாப்புக்காக 50க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அதே பகுதியில் கட்டப்பட்டிருந்த ஒண்டிகருப்பண்ணசுவாமி கோவிலும் ஆக்கிரமிப்பில் இருந்ததால் நேற்று இடிக்கப்பட்டது.

 


Page 17 of 34