Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Poverty Alleviation

ஏழைகளுக்கு வீட்டு வசதி பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தும்

Print PDF

தினகரன் 14.09.2010

ஏழைகளுக்கு வீட்டு வசதி பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தும்

ஷிமோகா, செப். 14: ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு வீட்டு வசதியை ஏற்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தி உள்ளது என்று மாநில பா..தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா கூறினார்.

ஷிமோகா அருகே உள்ள கும்பாரகுண்டியில் கர்நாடக குடிசை மாற்றுவாரியம் மற்றும் நகரசபை சார்பில் வீட்டுமனைபட்டா வழங்கும் விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட மாநில பா..தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா கூறியதாவது:

ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு அரசு வாஜ்பாய் வீட்டுவசதி திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை நடைமுறைக்கு தந்துள்ளது. இதனை தகுதியானவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். வாஜ்பாய் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் பயனாளிகள் ரூ30 ஆயிரம் வழங்க வேண்டும். அவர்களுக்கு ரூ50 ஆயிரம் வங்கியில் கடனாக கிடைக்கும். ரூ50 ஆயிரம் மானியமாக கிடைக்கும்.

கும்பாரகுண்டி மக்கள் வீட்டுமனை பட்டா இல்லாமலேயே பல வருடங்களாக இங்கு வசித்து வருகின்றனர். நாங்கள் அவர்களுக்கு கொடுத்தவாக்குறுதியின்படி பட்டா வழங்கியுள்ளோம். மேலும் இங்குள்ள ஏழைகளுக்கு ஆஷ்ரயா திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தரப்படும். அது போல நகரில் உள்ள பிற குடிசைபகுதிகளுக்கும் விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பட்டு வருகிறது. இதற்கு குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் விரைவான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

துப்புரவுப் பணியாளர்களுக்கு நகராட்சி பட்டா வழங்கக் கோரிக்கை

Print PDF

தினமணி 09.09.2010

துப்புரவுப் பணியாளர்களுக்கு நகராட்சி பட்டா வழங்கக் கோரிக்கை

பரமக்குடி, செப்.8: பரமக்குடி நகராட்சிக்குச் சொந்தமான காந்தி காலனியில் துப்புரவுப் பணியாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட குடியிருப்பு வீடுகளுக்கு அவர்களது பெயரில் பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என துப்புரவுத் தொழிலாளர் சங்கத்தினர் புதன்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து காந்தி காலனி துப்புரவுத்தொழிலாளர் சங்கத்தின் தலைவர் சி.அம்மாசி கூறியது: காந்தி காலனியில் நகராட்சியில் துப்புரவு பணி செய்யும் மற்றும் ஓய்வு பெற்றோர் என 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த காலனிப் பகுதி 1949-ம் ஆண்டு பரமக்குடி பஞ்சாயத்துத் தலைவராக இருந்த நாராயணன் என்பவர் தாண்டவராயன் செட்டியாரிடமிருந்து துப்புரவுப் பணியாளர்களுக்காக நகராட்சியின் பெயரில் வாங்கப்பட்டு, 1950-ல் 12 பயனாளிகளுக்கு மண் சுவருடன் கூடிய ஓட்டு வீடு கட்டிகொடுக்கப்பட்டது. பின்பு ஏற்பட்ட மழை வெள்ளத்தால் வீடுகள் இடிந்ததால் காமராஜர் முதல்வராக இருந்த போது 24 வீடுகளும், கருணாநிதி முதல்வராக இருந்தபோது 18 வீடுகளும் கட்டித்தரப்பட்டன. இந்த வீடுகளுக்கு நகராட்சி பெயரில் வரி விதிக்கப்பட்டு, பயனாளிகள் வாடகையாக குறிப்பிட்ட தொகை துப்புரவுப் பணியாளர் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 1979-ல் ஏற்பட்ட கலவரத்தில் இக்காலனி வீடுகள் அனைத்தும் சேதபடுத்தப்பட்டன. பின்பு அனைத்து பணியாளர்களும் தங்களது சொந்த செலவில் வீடுகள் கட்டி, தற்போது இப்பகுதியில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இதனால் இப்பகுதியில் நீண்டநாள்களாக வசிக்கும் துப்புரவுப் பணி செய்யும் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு அவரவர் வீடுகளுக்கு மனைப்பட்டா வழங்கிடவும், சொத்து வரிவிதிப்பினை அவரவர் பெயரில் ஏற்படுத்திட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

நகராட்சி காலி பணியிடங்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு உள்ளாட்சி பணியாளர்கள் கோரிக்கை

Print PDF

தினகரன் 09.09.2010

நகராட்சி காலி பணியிடங்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு உள்ளாட்சி பணியாளர்கள் கோரிக்கை

பொள்ளாச்சி, செப். 9: கோவை மாவட்ட உள்ளாட்சித் துறை பணியாளர் விடுதலை முன்னணி சார்பில் நகராட்சியில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட உள்ளாட்சித் துறை பணியாளர் விடுதலை முன்னணியின் செயற்குழு கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் மாரியப்பன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு பொதுசெயலாளர் கேசவமுருகன் முன்னிலை வகித்தார். இதில் பொள் ளாச்சி நகராட்சி பணியாளர்கள் சிண்டிகேட் வங்கி மூலம் தாமதமாக ஊதியம் வழங்கப்படுவதை தவிர்க்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், கருணை அடிப்படையில் பணி நியமனத்தில் பின்பற்றப்படும் விதிமுறைகளில் நகராட்சி ஊழியர்களின் மொத்த வருவாய் 49 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற நகராட்சி நிர்வாக ஆணையாளரின் சுற்றறிக்கையை எதிர்த்து வழக்கு தொடுப்பது, நகராட்சியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப (அனைத்து பிரிவுகளிலும்) தற்போது, பணியில் உள்ள ஊழியர்களில் தகுதியானவர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் சங்கத்தின் துணைத் தலைவர்கள் மாரிமுத்து, தங்கவேல், செயலாளர் ராமன், பொருளாளர் குமரேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 


Page 12 of 34