Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Women Welfare / Development

மகப்பேறு நிதியுதவி

Print PDF

தினமலர் 07.01.2010

மகப்பேறு நிதியுதவி

தஞ்சாவூர்: தஞ்சை நகராட்சியில் மகப்பேறு நிதியுதவித் திட்டத்தில் 930 பேருக்கு ரூபாய் 28 லட்சம் நிதியுதவியை நகராட்சித் தலைவர் தேன்மொழி வழங்கினார்.நிகழ்ச்சியில் ஆணையர் நடராஜன், நகராட்சி துணைத் தலைவர் சலீம், முன்னாள் கவுன்சிலர் ஜெயபால், நகர் நல அலுவலர் அர்ஜூன்குமார், டாக்டர்கள் உமா, பாலாமணி, மாலதி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்

Last Updated on Thursday, 07 January 2010 06:50
 

பெண்களுக்கு மகப்பேறு நிதி வழங்கல்

Print PDF

தினமலர் 07.01.2010

பெண்களுக்கு மகப்பேறு நிதி வழங்கல்

குடியாத்தம்:குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் 85 பெண்களுக்கு மகப்பேறு நிதி உதவியாக 5 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு, குடியாத்தம் நகராட்சி கமிஷனர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். சுகாதார அலுவலர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். பொறியாளர் உமா மகேஸ்வரி வரவேற்றார்.

மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் 85 பெண்களுக்கு மொத்தம் 5 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை நகர்மன்ற தலைவர் (பொறுப்பு) சவுந்தர்ராஜன் வழங்கினார். இதில், அரசு போக்குவரத்து கழக ஆலோசனைக்குழு உறுப்பினர் குமரன், கவுன்சிலர்கள் மோகன், யுவராஜ், சரவணன், கிருபானந்தம், சுகாதார ஆய்வாளர் சீனிவாசன், ஒப்பந்ததாரர் அரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 07 January 2010 06:40
 

நெல்லையில் 194 பெண்களுக்கு மகப்பேறு நிதியுதவி வழங்கல்

Print PDF

தினமலர் 26.12.2009

நெல்லையில் 194 பெண்களுக்கு மகப்பேறு நிதியுதவி வழங்கல்

திருநெல்வேலி:தச்சநல்லூர் மண்டலத்தில் 194 பெண்களுக்கு மகப்பேறு உதவித்தொகை 5.40 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 194 பெண்களுக்கு 5 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மகப்பேறு உதவித்தொகை வழங்கப்பட்டது.மண்டல சேர்மன் சுப்பிரமணியன் பெண்களுக்கு உதவித்தொகை வழங்கினார். கவுன்சிலர்கள் பொன். தங்கராஜ், கந்தன், டாக்டர் பிர்தவுசி, மாநகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Last Updated on Saturday, 26 December 2009 11:00
 


Page 32 of 41