தினமணி 9.09.2009
மகளிர் குழுவினருக்கு மானியத்துடன் சுழல்நிதி
திருப்பூர், செப்.8: நல்லூர் நகராட்சி பகுதியில் 80 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இக்குழுவினருக்கு சுழல்நிதி வழங்கும் நிகழ்ச்சி நல்லூர் நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடந்தது.
இதில் 7 குழுக்களைச் சேர்ந்த 87 உறுப்பினர்களுக்கு தலா ரூ.1000 மானியத்துடன் கூடிய சுழல்நிதி வழங்கப்பட்டது.
நகராட்சி தலைவி விஜயலட்சுமி சுழல் நிதியை வழங்கினார். செயல்அலுவலர் அண்ணாமலை, மகளிர் உதவித்திட்ட அலுவலர் மீனா, கவுன்சிலர்கள் நல்லி சண்முகசுந்தரம், சுப்பிரமணியம், நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்