Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Treatment

ஒண்டிப்புதூர் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய டிசைன்களை இறுதி செய்ய மாநகராட்சி தீவிரம்

Print PDF
தினமணி         02.05.2013

ஒண்டிப்புதூர் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய டிசைன்களை  இறுதி செய்ய மாநகராட்சி தீவிரம்


கோவை மாநகராட்சியின் சார்பில் ஒண்டிப்புதூரில் கட்டப்பட உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் டிசைன்களை இறுதி செய்வதற்கான பணிகளில் மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது.

இதற்காக அரசு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்களிடம் மாநகராட்சி ஆலோசனை செய்து வருகிறது.

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் உள்ள சுமார் 2 லட்சம் வீடுகளிலிருந்து கழிவு நீர், ஒண்டிப்புதூரில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்படும்.

சுற்றுச் சூழலைப் பாதிக்காத வகையில் ஒண்டிப்புதூரில் நவீன முறையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

தொழில்நுட்பக் குழுவுக்கு ரூ.38 லட்சத்தை ஜவாஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

ஒண்டிப்புதூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி

Print PDF
தினமணி      05.04.2013

ஒண்டிப்புதூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி


கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட ஒண்டிப்புதூரில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, மாநகராட்சிக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின்கீழ் ஒண்டிப்புதூரில் பட்டணம் இட்டேரி சாலையில் 60 எம்.எல்.டி. கழிவு நீரைச் சுத்திகரிக்க ரூ.62.82 கோடி செலவில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டது.

இதற்காக கடந்த ஆண்டு மே 5-ஆம் தேதி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் சுத்திகரிப்பு நிலையக் கட்டுமானப் பணிகளைத் துவக்க மாநகராட்சி நிர்வாகம் அனுமதி கேட்டது. ஆனால், சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவுள்ள இடம் தொடர்பான ஆவணங்களை மாநகராட்சி வழங்காததால் அனுமதி அளிக்க காலதாமதம் ஆனதாகக் கூறப்படுகிறது. இந் நிலையில், கடந்த மார்ச் 18-ஆம் தேதி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதியளித்தது.

குடியிருப்புப் பகுதியில் இருந்து 500 மீட்டர் தொலைவில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் அனைத்து நெறிமுறைகளையும் மாநகராட்சி கடைப்பிடித்துள்ளது. இதையடுத்து, சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளுக்குள் சுத்திகரிப்பு நிலையத்தை மாநகராட்சி அமைக்க வேண்டும்.

அப்படி அமைக்காவிட்டால் மீண்டும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும். இக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்காக 14.34 ஏக்கர் நிலத்தை மாநகராட்சி கையகப்படுத்தியுள்ளது.

ஒண்டிப்புதூரில் அமைய உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கிழக்கு மற்றும் வடக்கு மண்டலப் பகுதிகளின் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட உள்ளது.

கணபதி, பீளமேடு, ஆவாரம்பாளையம் மற்றும் சிங்காநல்லூர் பகுதிகளில் பாதாளச் சாக்கடைத் திட்டம் முடிந்தவுடன் இப் பகுதிகளில் சேரும் கழிவு நீர் முழுமையாக ஒண்டிப்புதூர் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்பட உள்ளது. உக்கடம் பகுதியில் 20 எம்.எல்.டி. கழிவு நீரைச் சுத்திகரிக்கும் நிலையம் செயல்படுகிறது. நஞ்சுண்டாபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் சுத்திகரிப்பு நிலையத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இத் தடையை நீதிமன்றத்தில் விரைவில் நீக்கி மீண்டும் பணிகளைத் துவக்க உள்ளதாக மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 

பள்ளபட்டி பேரூராட்சி 18 வார்டுகளில் குடிநீருக்காக ரூ. 40 லட்சத்தில் ஆழ்குழாய் கிணறு மற்றும் மோட்டார் பம்புகள் அமைப்பு

Print PDF
தினமணி         26.03.2013

பள்ளபட்டி பேரூராட்சி 18 வார்டுகளில் குடிநீருக்காக ரூ. 40 லட்சத்தில்  ஆழ்குழாய் கிணறு மற்றும் மோட்டார் பம்புகள் அமைப்பு


கடந்த ஒன்னரை ஆண்டுகளில் பள்ளபட்டி பேரூராட்சியில் குடிநீர் திட்ட பணிக்காக ரூ. 40 லட்சத்தில் ஆழ்குழாய் கிணறு மற்றும் மோட்டார் பம்புகள் அமைக்கப்பட்டுள்ளது என்றார் பேரூராட்சி தலைவர் சி.ஏ.சையது இப்ராஹீம்.

மேலும், இது தொடர்பாக பேரூராட்சி தலைவர் சி.ஏ.சையது இப்ராஹீம் கூறியதாவது, கரூர் மாவட்டம் பள்ளபட்டி பேரூராட்சியில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு மக்களின் நலன் கருதி தமிழகத்தை ஆட்சி செய்யும் அதிமுக அரசு பேரூராட்சிக்கு பல்வேறு திட்டங்களுக்காக நிதி ஒதுக்கி வருகின்றது.

இதை பயன்படுத்தி பள்ளபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் வகையில் நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொறுப்பேற்ற ஒன்னரை ஆண்டுகளில் குடிநீர் தேவைக்கு முக்கியத்துவம் அளித்து ஆழ்குழாய் கிணறு, சின்டெக்ஸ் தொட்டி மற்றும் மின்மோட்டார் வைத்து தண்ணீர் எடுப்பதற்காக ரூ. 40 லட்சம் செலவிடப்பட்டுள்ளது என்றார்.

இதைதொடர்ந்து 14வது வார்டு, 6வது வார்டு, 13வது வார்டு, 7வது வார்டு போன்ற பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய சின்டெக்ஸ் தொட்டியில் மற்றும் மின்மோட்டார் வைத்து தண்ணீர் எடுப்பதை மக்கள் சேவைக்காக பேரூராட்சி தலைவர் சி.ஏ.சையது இப்ராஹீம் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் கிருஸ்ணசாமி, உறுப்பினர்கள் ஓ.எம்.முபாரக்அலி, லியாகத்அலி, சர்மிளா, ஜாஹீர் அபுதாஹீர் மற்றும் அன்வர்அலி, தங்கராஜ், வீராச்சாமி, மன்சூர்அலி, பி.எஸ்.காஜாமைதீன், அகமது சரீப், சேட், ஜெயசுதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 


Page 4 of 28