Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Treatment

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: மாமல்லபுரம் அருகே பணிகள் துவக்கம்

Print PDF

தினமலர் 20.02.2010

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: மாமல்லபுரம் அருகே பணிகள் துவக்கம்

மாமல்லபுரம்:மாமல்லபுரம் அருகே கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ஆரம்பப் பணி துவங்கியது.சென்னை நகர மக்களுக்கு சென்னை குடிநீர் வாரியம் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. தினமும் 600 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் ஆதாரங்களில் கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி முக்கியமானது. ஏரியில் கொண்டு வரப்படும் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்ட பின் மக்களுக்கு வழங்கப்படுகிறது.

தற்போது, கடல்நீரை குடிநீராக்கி வழங்கும் திட்டத்தை வாரியம் செயல்படுத்துகிறது. சென்னை அடுத்த மீஞ்சூரில் தனியாருடன் வாரியம் இணைந்து ஒப்பந்த அடிப்படை யில் செயல்படுத்தும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் பணிகள் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது.இத்திட்டம் மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி கிராமத்திலும் செயல்படுத்தப்படும் எனத் தமி ழக துணை முதல்வர் ஸ்டாலின் 2007ம் ஆண்டு அறிவித்தார்.இத்திட்டத்தை சென்னை குடிநீர் வாரியம் 908.28 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்து கிறது.

இதற்காக, மத்திய அரசு 871.24 கோடி ரூபாயை முழு மானியமாக வழங்குகிறது. இதில், 300 கோடி ரூபாய் வழங்கப் பட்டுள்ளது.நெம்மேலி கடல்நீர் குடிநீராக்கும் திட்டம் என்ற பெயரில் இயங்கும் இத்திட்டத் திற்கு மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி கிராமத்தில் ஆளவந் தார் நாயகர் அறக்கட்டளைக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலம் நீண்டகால குத்தகை அடிப் படையில் வழங்கப்பட்டுள்ளது. இங்கு அமைக்கப்படும் தொழிற்சாலையில் தினமும் 100 மில்லியன் லிட்டர் கடல்நீர் எடுத்து நவீன முறையில் சுத்திகரித்து குடிநீராக மாற்றி திருவான்மியூர், வேளச்சேரி, பள்ளிப் பட்டு, கேளம்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள சேகரிப்பு மையங்களுக்கு குழாய் மூலம் கொண்டு செல்லப்படும்.துணை முதல்வர் ஸ்டாலின் 2008ம் ஆண்டு மாமல்லபுரம் நாட்டிய விழாவிற்கு வந்தபோது இவ்விடத்தை பார்வையிட்டார். தற்போது, திட்டப் பணியை துவக்க ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நெம்மேலியிலிருந்து குடிநீர் சேகரிப்பு மையங்களுக்கு கொண்டு செல்ல கிழக்கு கடற் கரை சாலையோரமாக குழாய் கள் புதைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. நெம்மேலியிலும் புல்டோசர் மூலம் நிலம் சமன் செய்யப்படுகிறது.வாரிய அதிகாரிகளும் முற்றுகையிட்டு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.துணை முதல்வர் ஸ்டாலின் சில நாட்களில் அடிக்கல் நாட்டுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Last Updated on Saturday, 20 February 2010 06:58
 

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மார்ச் இறுதியில் அமல்

Print PDF

தினமணி 16.02.2010

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மார்ச் இறுதியில் அமல்

சென்னை, பிப். 15: தொடர்ந்து தாமதமாகி வந்த கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மார்ச் இறுதியில் அமலுக்கு வருகிறது.

÷மார்ச் இரண்டாவது வாரத்தில் சோதனை ஆய்வு நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
÷
கோடை காலத்தில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், சென்னை மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

÷சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் இந்தத் திட்டத்தை, "வடிவமைத்தல், கட்டுதல், பராமரித்தல், திரும்ப ஒப்படைத்தல்' என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் சென்னை கடல்நீரை குடிநீராக்கும் நிறுவனம் (சி.டபிள்யு.டி.எல்.) மேற்கொண்டு வருகிறது.

÷.வி.ஆர்.சி.எல். உள்கட்டமைப்பு மற்றும் திட்ட நிறுவனமும், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெபசா கட்டுமான நிறுவனமும் இணைந்து "சென்னை கடல்நீரை குடிநீராக்கும் நிறுவனம்' என்ற பெயரில் இத்திட்டத்தை நிறைவேற்றி வருகின்றன.

÷ஒப்பந்தத்தின்படி, இந்த நிறுவனத்திடமிருந்து 25 ஆண்டுகளுக்கு குடிநீரை சென்னை குடிநீர் வாரியம் விலைக்கு வாங்கிக் கொள்ளும்.

÷2006 அக்டோபர் 16-ம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இத்திட்டம் தீர்மானிக்கப்பட்டு, 2007 பிப்ரவரி 25-ல் காட்டுப்பள்ளியில் அடிக்கல் நாட்டப்பட்டு பணி தொடங்கப்பட்டது.

÷2008 ஜூன் மாதம் இத்திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு, அடுத்த மூன்று மாதங்களில் நாள் ஒன்றுக்கு 10 கோடி லிட்டர் குடிநீரை சென்னை குடிநீர் வாரியத்துக்கு வழங்கும் பணி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

÷ஆனால் பல்வேறு தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக ஒன்றரை ஆண்டுகளாக திட்டம் தாமதமாகி வருகிறது. இதனால் இத்திட்டம் நிறைவேறுமா என்ற சந்தேகம் சென்னை மக்களிடையே எழுந்துள்ளது.

÷இதுகுறித்து சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய நிர்வாக இயக்குநர் சிவ்தாஸ் மீனா கூறியதாவது:

÷கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் இருந்த சிக்கல்கள் நீக்கப்பட்டு, 98 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. விரைவில் திட்டம் நடைமுறைக்கு வரும் என்றார்.

÷சிக்கலுக்கு காரணம் என்ன? சிக்கலுக்கான காரணம் குறித்து சி.டபிள்யு.டி.எல். உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

÷சென்னை கடல் பகுதியில் கடல் சீற்றமும், சுழலும் அதிக அளவில் காணப்படுகிறது. ஓராண்டில் 45 நாள்கள் மட்டுமே சாதகமான சூழ்நிலை காணப்படும்.

÷இந்த 45 நாள்களிலும் குறிப்பிட்ட சில நாள்களில் மட்டுமே கடலுக்கு அடியில் பைப்புகளை பொருத்த முடியும். இதைத் தவறவிட்டால், அடுத்த ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்.

÷இந்த காரணத்தால் கடல் நீரை ஆலைக்குள் செலுத்தும் குழாய் மற்றும் கழிவு நீரை வெளியேற்றும் குழாய்களை, கடல் மட்டத்திலிருந்து 10 மீட்டர் ஆழத்தில் பொருத்துவதில் சிரமம் ஏற்பட்டது. ஒன்றரை ஆண்டுகள் தாமதத்துக்கு இதுதான் காரணம்.

÷கடந்த ஜனவரி, பிப்ரவரியில்தான் கடலுக்கு அடியில் சாதகமான சூழ்நிலை நிலவியது. ÷ஆலைக்குள் ஒருசில இணைப்புகள் கொடுக்கும் பணிகள் மட்டுமே இப்போது வேகமாக நடைபெற்று வருகின்றன.

÷மார்ச் இறுதியில் அமல்: எனவே மார்ச் இரண்டாவது வாரத்திலேயே சோதனை ஆய்வு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் திட்டம் முழு அளவில் அமலுக்கு வரும் என்றார்.

Last Updated on Tuesday, 16 February 2010 05:33
 

கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் அடுத்த மாதம் முடியும்

Print PDF

தினமலர் 12.02.2010

கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் அடுத்த மாதம் முடியும்

மதுரை : மதுரை அவனியாபுரம் மற்றும் சக்கிமங்கலத்தில் நடக்கும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணிகள் அடுத்த மாதம் முடியும், என எதிர் பார்க்கப்படுகிறது.

மதுரையில் உள்ள 72 வார்டுகளில், 1 முதல் 21 வரை வைகை ஆற்றின் வடகரையிலும், 22 முதல் 72 வரை தெற்கு கரையிலும் அமைந்துள்ளன. மாநகராட்சி மொத்த பரப்பளவு 51.96 சதுர கி.மீ., 2001 கணக்கெடுப்பின்படி, மக்கள் தொகை 9 லட்சத்து 28 ஆயிரத்து 869. வடக்கு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சேகரிக்க சக்கிமங்கலத்திலும் தெற்கு பகுதியில் வெளியேறும் கழிவு நீரை சேகரிக்க அவனியாபுரத்திலும் பண்ணைகள் உள்ளன. அவனியாபுரம் பண்ணை 380 ஏக்கர் பரப்பிலும், சக்கிமங்கலம் பண்ணை 135.95 ஏக்கர் பரப்பிலும் அமைந் துள்ளன.

தற்போதுள்ள மக்கள் தொகைக்கு ஏற்றவாறு கழிவுநீர் பண்ணைகளில் சுத்திகரிப்பு அமைப்புகள் போதுமானதாக இல்லை. எனவே, அவனியாபுரத்தில் ஒரு நாளைக்கு 125 மில்லியன் லிட்டர் (எம்.எல்.டி.,) கழிவு நீரையும், சக்கிமங்கலத்தில் 45.7 எம்.எல்.டி., கழிவு நீரையும் சுத்தப்படுத்தும் நிலையம் கட்டப்படுகிறது.

இதற்காக அவனியாபுரத்தில் 76.08 கோடி ரூபாய் செலவிலும், சக்கிமங்கலத்தில் 36.50 கோடி ரூபாய் செலவிலும் கழிவு நீரை சுத்திகரிக்கும் நிலையம் அமைகிறது. இக்கட்டுமான பணிகள், அடுத்த மாத இறுதிக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று இப்பணிகளை தலைமை செயலர் ஸ்ரீபதி பார்வையிட்டார். மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின், தலைமை பொறியாளர் சக்திவேல், பொறியாளர்கள் விஜயகுமார், மதுரம், மக்கள் தொடர்பு அலுவலர்கள் சரவணன், ஆர்.பாஸ்கரன் உடன் இருந்தனர்.

Last Updated on Friday, 12 February 2010 07:28
 


Page 23 of 28