Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Treatment

மாணவ, மாணவிகளின் நலன் கருதி பள்ளி குடிநீர் சுத்திகரிப்பு திட்டம்

Print PDF

தினகரன் 24.08.2010

மாணவ, மாணவிகளின் நலன் கருதி பள்ளி குடிநீர் சுத்திகரிப்பு திட்டம்

புனே, ஆக. 24: மாணவ, மாணவிகளின் நலன் கருதி, குடிநீரை சுத்தம் செய்ய பள்ளிகளுக்கு சோடியம் ஹைபோகுளோரைட் கிரேடு 1’ திரவத்தை வழங்க மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.

பள்ளிகளில் தொட்டியில் சேமித்து வைக்கப்படும் குடிநீரைதான் மாணவ, மாணவிகள் பருகி வருகின் றனர். தொட்டியில் சேமிக்கப் படும் குடிநீரில் கிருமிகள் மற்றும் நுண்ணுயிர்கள் இருக்க கூடும். இதை பருகும் மாணவ, மாணவிகளுக்கு குடிநீர் தொடர்பான நோய் கள் தாக்க வாய்ப்பிருக் கிறது.

இதை கருத்தில் கொண்டு மாணவ, மாணவிகளின் நலன் கருதி குடிநீரை சுத்தம் செய்ய பள்ளிகளுக்கு சுத்தி கரிப்பு திரவத்தை வழங்க மாநில அரசு முடிவு செய்து ள்ளது. சோடியம் ஹைபோகு ளோரைட் கிரேடு 1 (மெடி&குளோர் எம்) என் னும் திரவத்தை கலப்பதின் மூலம், குடிநீரில் உள்ள கிரு மிகள் மற்றும் நுண்ணுயிரிகள் அழிந்துவிடும்.

மேலும் இத்திரவம் குடிநீரை சுத்தம் செய்யுமே தவிர பக்க விளைவுகள் எதையும் ஏற்படுத்தாது. இந்த திரவத்தை அனைத்து பள்ளிகளுக்கு வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளுக்கு திரவத்தை வினியோகம் செய்வது மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு குறித்து எடுத்துரைப்பதற் காக, புனே பள்ளி கல்வி இயக்குனரை(ஆரம்ப கல்வி) இத்திட்டத்தின் ஒருங் கிணைப்பு ஆணையாளராக அரசு நியமித்துள்ளது. 100 மில்லி திரவம் அடங்கிய குப்பிகள் பள்ளிகளுக்கு வழங்கப்பட இருக்கிறது. அடுத்த 10 நாட்களில் குப்பிகள் பள்ளிகளுக்கு வினியோகம் செய்யப்படும்.

பள்ளி குடிநீர் சுத்திகரிப்பு திட்டத்துக்காக மாநில அரசு ரூ2.32 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த நிதியை கொண்டு சுமார் 14.09 லட்சம் திரவ குப்பிகள் வாங்கப்படும். மகாராஷ்டிரா சிறுதொழில் நிறுவனம் மேம்பாட்டு கழகத்தின் அங்கீகரிக்கப் பட்ட ஏஜென்டிடம் இருந்து திரவ குப்பிகள் ஒப்பந்த அடிப்படையில் வாங்கப்பட இருக்கிறது. மேலும் பள்ளி குடிநீர் சுத்திகரிப்பு திட்டம் குறித்து மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட நிர்வாகத்துக்கு அரசாணை அனுப்பி வைக்கப்பட் டுள்ளது.

 

தினமும் 10 கோடி லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட கடல்நீர் வினியோகம் தொடக்கம்!

Print PDF

தினமலர் 24.08.2010

தினமும் 10 கோடி லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட கடல்நீர் வினியோகம் தொடக்கம்!

சென்னை : மீஞ்சூரில் நடைமுறைக்கு வந்துள்ள கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் தினமும் 10 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கிறது. குடிநீர் தூய்மை குறித்த ஆய்வுப் பணிகள் முடிந்து, ஒரு வாரமாக சென்னை, புறநகர் பகுதிகளிலும் வினியோகம் நடந்து வருகிறது. சென்னையில் நிலத்தடி நீர் மாசுபட்டு விட்டதால், மக்கள் "மெட்ரோ' குடிநீரைத்தான் நம்பியுள்ளனர். ஆனால், கிடைக்கும் குடிநீர் போதுமானதாக இல்லை. இதை கருத்தில் கொண்டு, மீஞ்சூரில் 600 கோடி ரூபாயில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை ஜூலை 31ல், முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் தினமும் 10 கோடி லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கிறது. இதற்காக அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்களில் தூசி படிந்திருந்ததால், குடிநீர் வினியோகம் உடனடியாக செய்ய முடியாத நிலை இருந்தது.

மீஞ்சூரிலிருந்து மணலி, மாதவரம், செங்குன்றம் வரையில் அமைக்கப்பட்ட 37 கி.மீ., குழாய்களை சுத்தம் செய்யும் பணி நடந்தது. மீஞ்சூரிலிருந்து கிடைக்கும் குடிநீரின் தன்மையும், பம்பிங் ஸ்டேஷன்களில் வந்து சேரும் குடிநீரின் தன்மையும் பரிசோதனை செய்யப்பட்டது. தூய்மைப் பரிசோதனை முடிந்து, கடந்த ஒரு வாரமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட கடல் நீர் குடிநீராக வினியோகம் செய்யப்படுகிறது.

தினமும் கிடைக்கும் 10 கோடி லிட்டரில் மணலிக்கு வந்து சேரும் 1.5 கோடி லிட்டர் மணலி, திருவொற்றியூர், எண்ணூர் நகராட்சி பகுதிகளுக்கும், மாதவரத்திற்கு வந்து சேரும் மூன்று கோடி லிட்டர், வடசென்னை பகுதிகளுக்கும் வினியோகம் செய்யப்படுகிறது. செங்குன்றம் பம்பிங் ஸ்டேஷனுக்கு தினமும் 5.5 கோடி லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட கடல் நீர் வருகிறது. இங்கிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறுகையில்,"பலகட்ட சோதனைகளுக்குப்பின், சுத்திகரிக்கப்பட்ட கடல் நீர் வினியோகம் துவங்கியுள்ளது. 10 கோடி லிட்டர், மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது. நெம்மேலியில் துவக்கப்பட உள்ள, கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம், மேலும் 10 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கும் என்பதால், சென்னையின் குடிநீர் தேவை பெருமளவு நிறைவடையும்' என்றனர்.

 

காஞ்சியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

Print PDF

தினமலர் 19.08.2010

காஞ்சியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் நகரில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, 10 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு தயார் செய்து, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என நகராட்சி தலைவர் ராஜேந்திரன்தெரிவித்தார்.பாலாற்றில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதால் காஞ்சிபுரம் நகரில் பெரும்பாலான பகுதி மக்களுக்கு திருப்பாற்கடல் பகுதியிலிருந்து வரும் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்நீர் சுவையற்றதாக உள்ளது.இந்நீரை சுத்திகரித்து வழங்க வேண்டும் அல்லது பாலாற்று குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரி வருகின்றனர். இது குறித்து நகராட்சி தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:திருப்பாற்கடல் தண்ணீரை சுத்திகரித்து வழங்குவதற்காக சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 10 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசு அனுமதி கிடைத்தவுடன் பணி துவக்கப்படும்.பஸ் நிலையத்தை தேசிய நெடுஞ்சாலைக்கு மாற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.நகராட்சியில் துப்புரவுப் பணியாளர்கள் போதுமான அளவு இல்லை. எனவே குப்பைகளை அகற்றும் பணி குறிப்பிட்ட பகுதிகளில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.அவர்கள் முறையாக பணிபுரியாததால் இரண்டு முறை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களை கண்காணித்து வருகிறோம். நகராட்சிக்கு தேவையான ஊழியர்களை நியமிக்க அரசிடம் அனுமதி கோரியுள்ளோம்.இவ்வாறு ராஜேந்திரன் தெரிவித்தார்.

Last Updated on Thursday, 19 August 2010 08:35
 


Page 12 of 28