Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Treatment

கழிவுநீரை மறுசுழற்சி மூலம் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பம்: மாணவர்கள் சாதனை

Print PDF
தினமலர்        29.01.2015

கழிவுநீரை மறுசுழற்சி மூலம் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பம்: மாணவர்கள் சாதனை

தேவதானப்பட்டி : வீடு, ஓட்டல் , பள்ளி, கல்லூரி கேன்டீன்களில் பயன்படுத்திய நீரை மறுசுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தை தேனி மாவட்டம், பெரியகுளம்-தேவதானப்பட்டி அருகேயுள்ள வி.பி.வி., பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தண்ணீர் பிரச்னை என்பது நாட்டில் தீர்க்கப்படாத பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. கிராமங்களில் பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை. கிடைக்கின்ற நீரை பாதுகாக்கின்ற மனநிலை பொதுமக்களிடம் இல்லை. இதனால் நாள்தோறும் பல ஆயிரம் மில்லியன் குடிநீர் வீணாகி கழிவு நீரில் கலக்கிறது. ஆறுகள், குளங்கள், ஏரிகள், குட்டைகள் அனைத்திலும் கழிவு நீர் கலந்து நீலத்தடி நீர் மாசுபட்டு வருகிறது.இந்நிலையில் வி.பி.வி., பொறியியல் கல்லூரி தலைவர் ஆடிட்டர் பாண்டியன் மாணவர்களின் படிப்பு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தி வருகிறார். கல்லூரியின் செயல் இயக்குனர் வினோத் தலைமையில், கட்டடத்துறை தலைவர் ஜெகன், ஆய்வக உதவியாளர் சந்திரசேகர், கட்டடத்துறை இறுதியாண்டு மாணவர்கள் விக்னேஷ்வரன், விக்னேஷ்குமார், ரவிபாரத், சுந்தர் ஆகியோர் இணைந்து கழிவு நீர்சுத்திரிப்பு முறை என்ற திட்டத்தை ஆய்வுக்கு உட்படுத்தி வெற்றிகண்டுள்ளனர். இந்த நீரை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஆய்வுக்கூடத்தில் ஆய்வு செய்து மறுசுழற்சி முறையில் மீண்டும் நீரை பயன்படுத்த சான்று பெற்றுள்ளனர். இக்கல்லூரியில் எளிய முறையில் செலவில்லாமல் வீடுகள், ஓட்டல்கள், பள்ளி, கல்லூரி கேன்டீன்களில் வீணாகும் நீரை எவ்வாறு மறு சுழற்சியில் நீரை சுத்தம் செய்வது என்று மாதிரி அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.

சுத்தம் செய்வது எப்படி: நிலத்தின் மேலே உள்ள கலங்கலான நீர் நிலத்திற்கு அடியில் பல அடுக்குகளை கடந்து எப்படி தூய நிலத்தடி நீராக மாறுகிறதோ, இதை மூலமாக வைத்து உருவாக்கப்பட்டது தான் மறுசுழற்சி முறை. முதல் அடுக்கில் மணல் மூலம் கழிவு நீரில் உள்ள அசுத்தமுள்ள பொருட்கள் படியவைக்கப்படுகிறது. இரண்டு, மூன்றாவது அடுக்கில் செங்கல், ஜல்லிக்கற்கள் மூலம் தேவையற்ற உப்பு தாதுக்களையும், நச்சுத்தன்மைகளையும் நீக்குகிறது. கழிவு நீரில் உள்ள பாக்டீரியா, எண்ணெய் பசை மற்றும் துர்நாற்றத்தை போக்குவதற்கு கல்வாழை செடி பயன்படுத்தப்படுகிறது. மேலும் பிளீச்சிங் பவுடர் பயன்படுத்துகின்றனர். இந்த மூன்றடுக்கு முறையில் இக்கல்லூரியில் உள்ள கேன்டீனில் நாள்தோறும் பயன்படுத்தப்படும் 500 லிட்டர் நீரை மறு சுழற்சி முறையில் சுத்தம் செய்கின்றனர். இதன் மூலம் சுத்திகரிக்கப்பட்ட 400 லிட்டர் நீர் கிடைக்கிறது. இந்த நீரை கல்லூரி வளாகங்களில் உள்ள மரங்ள், பூச்செடிகளுக்கும், வாகனங்களை சுத்தம் செய்வதற்கும் பயன்படுத்துகின்றனர்.

செயல்இயக்குனர் வினோத் கூறியதாவது: தற்போது நிலவிவரும் தண்ணீர் பிரச்னைக்கு இந்த முறை ஒரு நல்ல நீர்வாக அமையும். இந்த நீரை விவசாயப் பயன்பாட்டிற்கும், கட்டடப்பயன்பாடு, வானங்களை சுத்தம் செய்யவும் பயன்படுத்தலாம். நீரில் பிளீச்சிங் பவுடர் கலந்து குடியிருப்பு, அலுவலங்கள், தொழிற்சாலைகளில் தரைகளை துடைப்பதற்கும், கிராமங்களில் உள்ள சிறிய அளவிலான குளம், குட்டைகளில் கழிவு நீரைத் தேக்கி வைத்து மறு சுழற்சி முறையில் விவாயத்திற்கும் பயன்படுத்தலாம். அரசு ஒத்துழைப்பு கொடுத்தால் கட்டடத்துறை மற்றும் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் மூலம் எங்கள் கல்லூரியை மையப்படுத்தி உள்ள கிராமங்களில் வீடுகளில் மறுசுழற்சி முறையில் நீரை மீண்டும் பயன்படுத்த கற்றுக்கொடுக்க தயாராக உள்ளோம். இதன் மூலம் கழிவு நீரால் ஏற்படும் பிரச்னைகளுக்கும், தண்ணீர் பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும். தற்போது இந்த நீரை குடிநீராக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளோம், என்றார்.

இவருடன் பேச: 81100 06600.
 

தாம்பரத்தில் ரூ21.56 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

Print PDF

தினகரன்            31.12.2013

தாம்பரத்தில் ரூ21.56 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

தாம்பரம், : தாம்பரம் நகராட்சியில் மொத்தம் 39வார்டுகள் உள்ளன. ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

தற்போது நகராட்சிக்காக தாம்பரம் கிழக்கு மேற்கை இணைத்து பாதாள சாக்கடை திட்டப்பணி ரூ. 161 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது. இந்த பணி சென்னை குடிநீர் வடிகால் வாரியம் மேற்பார்வையில் நடந்து வருகிறது.

39வார்டுகளில் சேகரமாகும் கழிவுநீரை சுத்திகரித்து அடையாறு ஆற்றில் விடும் வகையில் தாம்பரம் கன்னடபாளையம் மண்ணூரான் குளம் பகுதியில் ரூ.21.56 கோடியில் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இங்கு 300 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கும் வகையில் கட்டமைப்புகள் நடந்து வருகிறது.

தற்போது 60 சதவீதம் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

குடிசை பகு­தியில் நவீன குடிநீர் சுத்­தி­க­ரிப்பு நிலையம்முதல் முறை­யாக பம்மல் நக­ராட்­சியில் துவக்கம்

Print PDF

தினமலர்             24.07.2013

குடிசை பகு­தியில் நவீன குடிநீர் சுத்­தி­க­ரிப்பு நிலையம்முதல் முறை­யாக பம்மல் நக­ராட்­சியில் துவக்கம்


பம்மல்:பம்மல் நக­ராட்­சியில், குடிசைப் பகுதி மக்­களின் வச­திக்­காக, முதல் முறை­யாக, நவீன குடிநீர் சுத்­தி­க­ரிப்பு நிலையம் அமைக்­கப்­பட்டு உள்­ளது. இதன்­மூலம், தின­சரி, ஒரு வீட்­டிற்கு ஒரு குடம் சுத்­தி­க­ரிக்­கப்­பட்ட குடிநீர் வினி­யோகம் செய்­யப்­ப­டு­கி­றது.பம்மல் நக­ராட்­சியில், 21 வார்­டுகள் உள்­ளன. 12வது வார்டு, குடிசை பகுதி கொண்­டது. இப்­ப­கு­தியில், 2,000க்கும் மேற்­பட்ட வீடுகள் உள்­ளன. நக­ராட்சி பகு­தி­க­ளுக்கு, லாரிகள் மூல­மா­கவும், சின்டெக்ஸ் தொட்டி மூல­மா­கவும் தண்ணீர் வினி­யோகம் செய்­யப்­ப­டு­கி­றது. பாலாறு குடி­நீரும் வழங்­கப்­ப­டு­கி­றது. 250 லிட்டர்ஆழ்­துளை கிணறு மூலம் வழங்­கப்­படும் தண்ணீர், குடிப்­ப­தற்கு உகந்­த­தாக இல்லை. சமையல் செய்­வ­தற்கும், துணி துவைப்­ப­தற்கும், பாத்­திரம் கழு­வவும் மட்­டுமே பயன்­ப­டு­கி­றது.

இதனால், பணம் கொடுத்து, குடிநீர் கேன் வாங்கும் நிலை இருந்­தது.இந்த நிலையில், நக­ராட்­சி­களில் குடிநீர் சுத்­தி­க­ரிப்பு நிலையம் அமைத்து, மக்­க­ளுக்கு சுத்­த­மான குடிநீர் வினி­யோகம் செய்­யப்­படும் என, முதல்வர் ஜெய­லலிதா அறி­வித்­தி­ருந்தார். இந்த அறி­விப்பை தொடர்ந்து, தமி­ழ­கத்­தி­லேயே முதல் முறை­யாக, பம்மல் நக­ராட்­சியில், நவீன குடிநீர் சுத்­தி­க­ரிப்பு நிலையம் அமைக்கப் பட்டு உள்­ளது.முதல் கட்­ட­மாக, குடிசை பகுதி கொண்ட, பம்மல் நக­ராட்சி, 12வது வார்டில் அமைக்­கப்­பட்ட, குடிநீர் சுத்­தி­க­ரிப்புநிலை­யத்தை, எம்.எல்.ஏ., தன்சிங் திறந்து வைத்தார். நக­ராட்சி தலைவர் இளங்­கோவன் தலைமை தாங்­கினார்.

தின­சரி, ஆழ்­துளை கிணற்றில் இருந்து, சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்­திற்கு தண்ணீர் ஏற்­றப்­ப­டு­கி­றது. பின், சுத்­தி­க­ரிப்பு செய்­யப்­பட்ட குடிநீர், அரு­கே­யுள்ள தொட்­டியில் நிரப்­பப்­ப­டு­கி­றது. ஒரு மணி நேரத்­திற்கு, 250 லிட்டர் தண்ணீர் சுத்­தி­க­ரிப்பு செய்­யப்­ப­டு­கி­றது.கூடுதல் மையங்கள்இதை தொடர்ந்து, குடிநீர் வினி­யோகம் செய்­யப்­ப­டு­கி­றது. தின­சரி, ஒரு வீட்­டிற்கு, ஒரு குடம் குடிநீர் மட்­டுமே வினி­யோகம் செய்­யப்­ப­டு­கி­றது.நக­ராட்சி தலைவர் இளங்­கோவன் கூறு­கையில், ''மூவேந்தர் நகர், பாத்­திமா நகர், எம்.ஜி.ஆர்., தெரு, பொன்னி நகர் உள்­ளிட்ட ஒன்­பது இடங்­களில், மக்­களின் வச­திக்­காக, கூடு­த­லாக குடிநீர் சுத்­தி­க­ரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இதற்­கான பணிகள் நடந்துவரு­கின்­றன,'' என்றார்.

Last Updated on Wednesday, 24 July 2013 08:16
 
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  6 
  •  7 
  •  8 
  •  9 
  •  10 
  •  Next 
  •  End 
  • »


Page 1 of 28