தினமணி 31.12.2013
பள்ளபட்டியில் குடிநீர் தொட்டிகள் திறப்பு
பள்ளபட்டி பேரூராட்சியில் சட்டப்பேரவை தொகுதி நிதி ரூ. 9.60 லட்சத்தில் 4 இடங்களில் கட்டி முடிக்கப்பட்ட சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகளை எம்எல்ஏ கே.சி. பழனிசாமி அண்மையில் திறந்து வைத்தார்.
பொதுமக்களின் கோரிக்கையையடுத்து தனது தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து 4 வார்டுகளில் தலா ரூ 2.40 லட்சத்தில் மின்பவர் பம்ப், ஆழ்குழாய் கிணறு மற்றும் சின்டெக்ஸ்கள் அமைக்க மொத்தம் ரூ. 9.60 லட்சத்தை வழங்கினார்.
ஐவர் கால்பந்து : கரூர் முதலிடம்கரூர், டிச. 30: கரூரில் நடந்த மாநில அளவிலான ஐவர் கால்பந்துப் போட்டியில் கரூர் புலியூர் நெல்சன் அணி முதல் பரிசை வென்றது.
கரூர் புலியூர் நெல்சன் விளையாட்டுக் குழு சார்பில் புலியூர் ராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் டிச. 28 முதல் டிச.29 வரை நடைபெற்ற போட்டிகளில் ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், நாமக்கல், சேலம், ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 16 அணிகள் கலந்து கொண்டன.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று இறுதிப் போட்டியில் புலியூர் நெல்சன் அணி 3-0 என்ற கோல் கணக்கில் புகழூர் பாரதி அணியை எளிதில் வென்று முதல் பரிசான ரூ. 7,001-ஐ தட்டிச் சென்றது. 2-ம் பரிசாக புகழூர் பாரதி அணிக்கு ரூ. 5,001 வழங்கப்பட்டது. நாமக்கல் அணியை வென்ற ராணி மெய்யம்மை பள்ளி அணிக்கு -ம் பரிசாக ரூ. 3,001 வழங்கப்பட்டது.
பரிசுகளை புலியூர் செட்டிநாடு சிமென்ட் ஆலையின் முதுநிலை துணைத் தலைவர் அ. அண்ணாதுரை வழங்கினார். இதில் நெல்சன் கால்பந்து குழுச் செயலர் மோகன்ராஜ், நெல்சன் விளையாட்டுக் குழுச் செயலர் வீர. திருப்பதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.