Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

ஆழியாறு குடிநீர் வினியோகம்: பேரூராட்சிக்கு அமைச்சர் ஆலோசனை

Print PDF

தினமலர்            04.01.2014  

ஆழியாறு குடிநீர் வினியோகம்: பேரூராட்சிக்கு அமைச்சர் ஆலோசனை

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு பேரூராட்சி ஒன்றாவது வார்டு மக்களுக்கும், 15வது வார்டு பகுதி மக்களுக்கும், ஆழியார் குடிதண்ணீர் வழங்க வேண்டும். குறுகலான ரோட்டினை அகலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது.இதையடுத்து, இப்பகுதியை வேளாண்மைத்துறை அமைச்சர் தாமோதரன், செயல் அலுவலர் ரவிக்குமார், பொறியாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் பார்வையிட்டனர். அதில், மலை மேல் வசிக்கும் மக்களுக்கு மூன்று இடங்களில் தொட்டி கட்டியும், 15வது வார்டில் மேல்நிலை தொட்டியின் கீழ் நீர் தேக்கத்தொட்டி கட்டி, அதில் மோட்டார் பொருத்தி மலை மேல்பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லவும், கான்கிரீட் ரோடு அகலப்படுத்தவும், 42 லட்சம் ரூபாய் தேவைப்படும்.

இப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, வேளாண் துறை அமைச்சர், செயல் அலுவலருக்கு ஆலோசனை வழங்கினார். மேலும், 15 வார்டான தேரோடும் வீதியில், 12 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்தையும், ரேஷன் கடை அருகில் ஐந்து லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும் குழந்தைகள் அங்கன்வாடி மையம், சிவலோகநாதர் கோவில் முன்புறத்தில் இருந்து சார்பதிவாளர் அலுவலகம் வரை ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்படும் கழிவு நீர் சாக்கடையையும் பார்வையிட்டனர்.

 

வடவள்ளி, கவுண்டம்பாளையம் பகுதியில் கூடுதல் குடிநீருக்கு ரூ.42½ கோடி திட்டம்

Print PDF

தினத்தந்தி             02.01.2014

வடவள்ளி, கவுண்டம்பாளையம் பகுதியில் கூடுதல் குடிநீருக்கு ரூ.42½ கோடி திட்டம்

பில்லூர் 2-வது கட்ட குடிநீர் திட்டம், ஆழியாறு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் வடவள்ளி, வீரகேரளம், கவுண்டம்பாளையம் பகுதிகளுக்கு கூடுதல் குடிநீர் வழங்க ரூ.42½ கோடி திட்டத்தை கோவை மாநகராட்சி தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது.

குடிநீர் பிரச்சினை

கோவை வடவள்ளி, கவுண்டம்பாளையம் பகுதியில் குடியிருப்புகள் பெருகி உள்ளன, இந்த பகுதியில் நீண்ட நாட்களுக்கு முன் பதிக்கப்பட்ட சிறிய குழாய்கள் இருப்பதால் கூடுதல் குடிநீர் வழங்க முடியவில்லை. இதனால் அணைகளில் தண்ணீர் இருந்தபோதிலும் குறைந்த அளவே குடிநீர் வழங்க முடிகிறது. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக பில்லூர் 2-வது கட்ட திட்டத்தின் மூலம் வடவள்ளி, கவுண்டம்பாளையம் பகுதிகளுக்கு கூடுதல் குடிநீர் வழங்க புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாநகராட்சி தயாரித்துள்ள திட்ட விவரம் வருமாறு:-

பில்லூர், ஆழியாறு குடிநீர்

கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள பகுதிகளான கவுண்டம்பாளையம், வடவள்ளி, வீரகேரளம் பகுதிகளுக்கு கூடுதல் குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி பில்லூர் 2-வது குடிநீர் திட்டம், ஆழியாறு குடிநீர் திட்டத்துடன் குழாய் அமைத்து இணைத்தல் பகுதிகளுக்கு உத்தேச மதிப்பீடாக ரூ.16.87 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகளை 5 பிரிவுகளாக பிரித்து செயல்படுத்தவும் நகராட்சி நிர்வாக ஆணையகத்துக்கு நிர்வாக அனுமதி, தொழில்நுட்ப அனுமதி அளிக்க கோரப்பட உள்ளது.

ரூ.42½ கோடி திட்டம்

தமிழ்நாடு குடிநீர் முதலீட்டு கழகத்தின் மூலம் இந்த திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கவுண்டம்பாளையம் வார்டு எண்கள்-5, மற்றும் 6, வார்டு எண்கள்-7, 8 மற்றும் 9 ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளுக்கு ரூ.12 கோடியே 41 லட்சம் செலவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பில்லூர் 2-வது குடிநீர் திட்டம் மற்றும் ஆழியாறு குடிநீர் திட்டத்துடன் குழாய் அமைத்து இணைக்கும் பணிக்கு ரூ.8 கோடியே 74 லட்சம் செலவிடவும், வீரக்கேரளம் வார்டு எண்கள்-18, மற்றும் 19 பகுதிகளுக்கு ரூ.9 கோடியே 91 லட்சம் செலவிடவும், வடவள்ளி வார்டு எண்கள் 16 மற்றும் 17 ஆகிய பகுதிகளுக்கு ரூ.11 கோடியே 79 லட்சம் செலவிடவும் மொத்தம் ரூ.42 கோடியே 55 லட்சம் செலவில் அனைத்து பணிகளையும் முடித்து கூடுதல் குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானம் கோவை மாநகராட்சி கூட்டத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதன்பின்னர் இந்த திட்டவரைவு அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட உள்ளது.

ரூ.42½ கோடி திட்டத்தில் ரூ.11.13 கோடி மத்திய அரசின் மானியமாக கிடைக்கிறது. மீதி தொகையான ரூ.31.41 கோடியை அரசு மானியமாகவும், பொது நிதியின் மூலம் பெறவும், இந்த திட்டத்தினை திட்ட மேலாண்மை குழுவின் மூலம் பணிகள் மேற்பார்வையிட விருப்ப அறிக்கை கோரி தேர்வு செய்ய மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த திட்டத்தை விரைவில் நிறைவேற்றப்பட்டால் கவுண்டம்பாளையம், கவுண்டம்பாளைம், வீரகேரளம் பகுதிகளில் குடிநீர் பிரச்சினை தீர வாய்ப்பு ஏற்படும்.

 

மாநகராட்சி பள்ளிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கல்விக்குழு கூட்டத்தில் முடிவு

Print PDF

தினகரன்            31.12.2013

மாநகராட்சி பள்ளிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கல்விக்குழு கூட்டத்தில் முடிவு

திருச்சி, : திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி கல்விக்குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் மாநகராட்சியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க சுத்திகரிப்பு கருவி பொருத்த  முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சியின் கல்விக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கல்விக்குழு தலை வர் கவுன்சிலர் பூபதி தலைமை வகித்தார். நகரபொறியாளர் சந்திரன் முன் னிலை வகித்தார். கூட்டத் தில் திருச்சி மாநகராட்சி யில் உள்ள 79 மாநகராட்சி பள்ளிகளுக்கும் ரூ 8.48 கோடி யில் வளர்ச்சிப்பணிகள் நடைபெற்று வருகி றது. இது போல பள்ளிகள் அனைத்திற்கும் தேவை யான தீய ணைப்பு கருவிகள், பொருத்துதல், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க சுத்திகரிப்பு கருவி பொருத்துல், மாநகராட்சி பள்ளிகள் அனைத்திற்கும் துப்புரவு பணியை தனியாரிடம் ஓப்படைத்து கழிப்பிடம் பராமரிப்பு உள் ளிட்ட பணிக ளை செய்வது, இரவு நேரங்களில் பாதுகாப்பிற்கு தனியார் நிறுவனம் மூலம் காவலாளிகளை நியமிப் பது. பள்ளிக்கு அனை த்து தேவையான உபகரணங்கள் வாங்குவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டது. கல்விக்குழு கூட்டத்தில் கல்விக்குழு கூறுப்பினர்கள் முஸ்தபா, ரவிசங்கர். வனிதா அன்புலெட்சுமி, பாஸ்கர், கலைவாணன் உள்பட மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 


Page 18 of 390