நாமக்கல் நகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊராட்சிகளுக்கு புதிய குடிநீர்த் திட்டம்
Thursday, 23 January 2014 00:00
administrator
நாளிதழ்௧ள் -
குடீநீர் வழங்௧ல்
தினமணி 23.01.2014 நாமக்கல் நகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊராட்சிகளுக்கு புதிய குடிநீர்த் திட்டம்
நாமக்கல் நகராட்சியுடன் இணைக்கப்பட்ட 9 ஊராட்சிப் பகுதி மக்களுக்காக ரூ.161.15 கோடியில் புதிய குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு குடிநீர் வடிகால் வாரியத்தின் மாநில அளவிலான தொழில்நுட்பக் குழு கடந்த 17-ஆம் தேதி ஒப்புதல் அளித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.
நாமக்கல் நகராட்சி அருகேயுள்ள கொண்டிச்செட்டிப்பட்டி, கொசவம்பட்டி, பெரியபட்டி, காவேட்டிப்பட்டி, நல்லிபாளையம், அய்யம்பாளையம், தும்மங்குறிச்சி, முதலைப்பட்டி, சின்னமுதலைப்பட்டி ஆகிய 9 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு 2011-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக நகராட்சியின் எல்லைகள் விரிவாக்கம் செய்யப்பட்டன. தற்போது 39 வார்டுகளுடன் நகராட்சி செயல்படுகிறது.
ஏற்கெனவே இருந்த 30 வார்டு பகுதிகளில் மட்டும் தினமும் நபருக்கு 135 லிட்டர் காவிரிக் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. ஆனால், இணைக்கப்பட்ட 9 ஊராட்சிப் பகுதி மக்களுக்கு தினமும் ஒரு நபருக்கு 45 லிட்டர் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால், அந்தப் பகுதியில் ஏற்பட்டு வரும் குடிநீர் பற்றாக்குறையைச் சமாளிக்க இணைக்கப்பட்ட 9 ஊராட்சிப் பகுதிகளுக்காக மட்டும் ரூ.161.15 கோடி மதிப்பீட்டில் புதிதாக ஜேடர்பாளையம் - நாமக்கல் குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்த நாமக்கல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதற்கு குடிநீர் வடிகால் வாரியத்தின் மாநில அளவிலான தொழில்நுட்பக் குழு கடந்த 17-ஆம் தேதி ஒப்புதல் அளித்திருப்பதாக ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியது:
புதிய குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் அரசிடம் இருந்து நிதி பெறப்பட்டு குடிநீர் திட்டப் பணிகள் தொடங்கப்பட உள்ளது.
இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, நாமக்கல் நகராட்சிக்கு தினமும் கூடுதலாக 309 லட்சம் லிட்டர் குடிநீர் கொண்டு வர முடியும். இதன்மூலம் இணைக்கப்பட்ட 9 ஊராட்சிப் பகுதியில் தினசரி நபருக்கு 135 லிட்டர் காவிரி குடிநீர் வழங்கப்படும்.
இந்த குடிநீர்த் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் வரை இடைப்பட்ட வறட்சிக் காலத்தில் சீரானக் குடிநீர் விநியோகம் செய்ய மோகனூர் நீரேற்று நிலையம், அணியாபுரம் நீருந்து நிலையம் ஆகியவற்றில் ரூ.1.78 கோடியில் புதிய மோட்டார்கள் அமைக்கவும், இதுவரை பெறப்படும் குடிநீரைத் தேக்குவதற்கு ரூ.50 லட்சம் செலவில் 1.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைத் தள தொட்டிகள் 5 இடங்களில் அமைத்து மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யவும், பெறப்படும் குடிநீர் அளவுகளைக் கண்காணிக்க நாமக்கல் நகராட்சி வளாகத்திலுள்ள பிரதானக் குடிநீர் தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பில் கருவி பொருத்தப்படும் என மொத்தம் ரூ.3.03 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றார் அவர்.
நாமக்கல் நகர்மன்றத் தலைவர் ஆர்.கரிகாலன், ஆணையாளர் (பொறுப்பு) கமலநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
|
திருப்பூர் மாநகராட்சி குடிநீர் மேம்பாட்டுப் பணிக்கு ரூ. 45 கோடி
Tuesday, 21 January 2014 00:00
administrator
நாளிதழ்௧ள் -
குடீநீர் வழங்௧ல்
தினமணி 21.01.2014 திருப்பூர் மாநகராட்சி குடிநீர் மேம்பாட்டுப் பணிக்கு ரூ. 45 கோடி
திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ. 45 கோடி ஒதுக்கீடு செய்ததற்காக மாமன்றக் கூட்டத்தில் தமிழக முதல்வருக்கு மேயர் அ.விசாலாட்சி நன்றி தெரிவித்தார்.
திருப்பூர் மாநகராட்சியின் அவசரக் கூட்டம் மேயர் அ.விசாலாட்சி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. துணை மேயர் சு.குணசேகரன், ஆணையர் கே.ஆர்.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மேயர் அ.விசாலாட்சி பேசியது:
திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் விநியோகப் பணிகளை சீரமைப்பதற்காக தமிழக முதல்வர் ரூ. 45 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்காக திட்ட அறிக்கையில் கேட்டபடி, இத் தொகையை முதல்வர் ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளார்.
இதற்காக முதல்வருக்கு திருப்பூர் மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இதற்கான பணிகளை செய்வதற்கு மாமன்றக் கூட்டத்தின் அனுமதி பெறுவதற்காக அவசரக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. கவுன்சிலர்கள் இதற்கு முழு ஒத்துழைப்புத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
முருகசாமி (அ.தி.மு.க): திருப்பூர் மாநகராட்சியின் ஒருங்கிணைந்த பகுதிகளில் குடிநீர் பிரச்னையைத் தீர்ப்பதற்காக ரூ. 45 கோடி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கு மாமன்றத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதற்கு உதவியாக இருந்த உள்ளாட்சித் துறை அமைச்சர், வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், ஆகியோருக்கும் இதற்கானப் பணிகளுக்கு உடனடியாக திட்ட அறிக்கை தயாரித்த மாநகராட்சி அதிகாரிகளுக்கும் பாராட்டும், நன்றியும் தெரிவிக்கிறேன்.
சுப்பிரமணியம் (தி.மு.க): மாநகரில் கொசுத்தொல்லையால் மக்கள் அவதிப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாளையக்காடு பகுதியில் பள்ளிக்குழந்தை சாலையை கடந்து செல்வதற்கு வசதியாக நடை மேம்பாலம் அமைத்துத் தர வேண்டும். நகரில் ஆம்னி பஸ்களுக்கு என தனியாக பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும்.
கோவிந்தராஜ் (தே.மு.தி.க): குப்பைப் பிரச்னை தீர்க்கும் வகையில் திருப்பூர் தொழிலதிபர்கள் ஏற்படுத்தி இருக்கும் ஸ்ரீ புரம் அறக்கட்டளை சார்பில், தனியார் அமைப்பு மூலமாக நகரில் உள்ள குப்பை பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில் ஆலோசனையும், அது தொடர்பான விளக்க காட்சிகளும் காண்பிக்கப்பட்டது. அவர்களுடன் மாநகராட்சியும் சேர்ந்து குப்பை பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும்.
மேயர் அ.விசாலாட்சி: இது தொடர்பாக, அந்த அமைப்பினரை அழைத்து, குப்பை தொடர்பான பிரச்னையை தீர்க்கும் வழிமுறைகள் குறித்த விளக்கக் காட்சிகளையும், ஆலோசனையையும் பெற்று, ஏற்கத்தக்க வகையில் இருப்பின் அது குறித்து பரிசீலிக்கப்படும்.
கூட்டத்திற்கு பின், மேயர் அ.விசலாட்சி, ஆணையர் கே.ஆர். செல்வராஜ் செய்தியாளர்களிடம் கூறியது:
ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ. 32 கோடி, உள் கட்டமைப்பு இடைவெளி நிரப்புதல் திட்டத்தின் கீழ் ரூ. 13 கோடி என மாநகராட்சி பகுதியில் குடிநீர் விஸ்தரிப்புப் பணிகளுக்காக மொத்தம் ரூ. 45 கோடி தமிழக அரசு வழங்கி உள்ளது. இதில், முதலாவது மண்டலத்தில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்படும். 3 இடங்களில் நில மட்ட நீர்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்படும்.
மாநகராட்சியுடன் ஒருங்கிணைக்கப்பட்ட பகுதிகளில், ஏற்கனவே உள்ள குடிநீர் விநியோகக் குழாய்களை அகற்றி, அதற்கு பதிலாக 4 இஞ்ச், 8 இஞ்ச் விட்டமுள்ள குடிநீர் விநியோகக் குழாய்கள் பதிக்கப்படும். இதன் மூலமாக, 6 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கும் நிலை மாறி, 2 நாள்களுக்கு ஒருமுறை அல்லது தினமும் குடிநீர் விநியோகிக்க வழிவகை ஏற்படும்.
குடிநீர் குழாய்கள் மாற்றியமைக்கும் இப் பணிகள் திட்டத்தின் ஒரு பகுதி தான். விடுபட்ட பகுதிகளிலும் இப் பணிகள் செய்வதற்கு திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ரூ. 45 கோடி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகள் வரும் 3 மாத காலத்திற்குள் நிறைவு செய்யப்படும். இதில், மேல்நிலைக்குடிநீர் தொட்டி கட்டும் பணி மட்டும் 6 மாத அவகாசத்தில் செய்து முடிக்கப்படும் என்றனர்.
விவசாய கிணறுகளை வாடகைக்கு எடுத்து சென்னைக்கு 2 கோடி லிட்டர் குடிநீர் லாரி மூலம் வினியோகம்
Thursday, 09 January 2014 09:24
administrator
நாளிதழ்௧ள் -
குடீநீர் வழங்௧ல்
மாலை மலர் 09.01.2014
விவசாய கிணறுகளை வாடகைக்கு எடுத்து சென்னைக்கு 2 கோடி லிட்டர் குடிநீர் லாரி மூலம் வினியோகம்
சென்னை, ஜன.9 - பருவமழை ஆய்வு குறித்த
கருத்தரங்கம் சென்னை வானிலை ஆய்வு மையத்தில் நடந்தது. இதில் சென்னையின்
குடிநீர் நிலவரம் குறித்து சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர்
சந்திரமோகன் பேசியதாவது:– சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் தற்போது நீர் இருப்பு குறைவாக உள்ளது. ஆனாலும்
வீராணம் எரியில் இருந்து தினமும் 18 கோடி லிட்டர், மீஞ்சூர், நெம்மேலியில்
அமைக்கப்பட்டுள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து தினமும்
18 கோடி லிட்டர் குடிநீர் கிடைப்பதால் நிலைமையை சமாளித்து வருகிறோம். மொத்த குடிநீர் தேவையில் 60 சதவீதம் இந்த இரண்டு நீர் ஆதாரங்களில் இருந்து பெறப்படுகிறது. தற்போது
குடிநீர் வழங்கும் நான்கு ஏரிகள், கண்டலேறு அணை, வீராணம் ஏரி, கடல்நீரை
குடிநீராக்கும் திட்டம் மூலம் தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீரை
வினியோகிக்கலாம். ஆனால் இந்த ஆண்டு சென்னை குடிநீர் தேவையை பூர்த்தி
செய்வதற்காக திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம், மீஞ்சூர், பஞ்சட்டி ஆகிய
இடங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் தினமும் 2 கோடி லிட்டர் தண்ணீரை
லாரிகள் மூலம் சென்னைக்கு கொண்டு வர ஏற்பாடு செய்துள்ளோம். விவசாய
கிணறுகளை வாடகைக்கு எடுத்து தினமும் 4 கோடி லிட்டர் பெறவும், நெய்வேலியில்
கூடுதலாக 10 ஆழ்துளை கிணறுகளை அமைக்கவும் திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறி னார். கருத்தரங்கில்
வானிலை ஆய்வு மையத்தின் துணைத் தலைமை இயக்குனர் ஒய்.எ.ராஜ், வருவாய்
நிர்வாக ஆணையர் ஸ்ரீதர்ட, வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் உள்பட பலர்
கலந்து கொண்டனர்.
|
|
|
|
Page 16 of 390 |