Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Transportation

தாம்பரம் பேருந்து நிலையம்: முதல்வர் திறந்து வைத்தார்

Print PDF

தினபூமி           07.11.2013

தாம்பரம் பேருந்து நிலையம்: முதல்வர் திறந்து வைத்தார்

http://www.thinaboomi.com/sites/default/files/imagecache/story_thumbnail/CM-Inagurate-Thambaram-Bus-Terminal(C).jpg 

சென்னை, நவ.7 - தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று(6.11.2013) தலைமைச் செயலகத்தில், காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் நகராட்சியில் 4 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்கள். 

மேலும், பல்வேறு நகராட்சிகளில் 151 கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை திறந்து வைத்து, பாதாள சாக்கடை திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்கள். இவையன்றி, தூத்துக்குடி மாநகராட்சியில் 282 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் மேம்பாட்டு பணிகள் மற்றும் 60 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டினார்கள். 

இந்தியாவிலேயே விரைந்து நகர்மயம் ஆகி வளர்ந்து வரும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. நகரங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் வலு சேர்க்கும் இயந்திரங்கள் ஆகும்.  அதே நேரத்தில், நகர்ப்புரங்களில் மக்கள் தொகை பெருகிவருவதன் காரணமாக, அடிப்படை வசதிகளின் தேவைகள் அதிகரித்து வருகின்றன. இதனை நிறைவு செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. 

காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் நகராட்சியில் 4 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம்; கோயம்புத்தூர், தமிழ்நாடு நகரியல் பயிற்சி மையத்தில் 75 லட்சம் பொய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் விடுதி கட்டடங்கள்; நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினம் நகராட்சியில் 1 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டடம்; தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சியில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வாரச் சந்தை கட்டடம்; என மொத்தம் 7 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான புதிய கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார். 

மேலும், பெரம்பலூர் நகராட்சியில் 31 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் இராமநாதபுரம் நகராட்சியில் 31 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சியில் 14 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் திண்டுக்கல் நகராட்சியில் 46 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் தருமபுரி நகராட்சியில் 

24 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்டங்கள், என மொத்தம் 148 கோடியே 14 லட்சம் பொய் மதிப்பீட்டிலான புதிய பாதாள சாக்கடை திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாநகராட்சியில் 282 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் மேம்பாட்டு பணிகள்  மற்றும் கழிவுநீரை சுத்திகரித்து தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்காக அளித்திடும் வகையில் 60 கோடி பொய் மதிப்பீட்டில், வடிவமைத்து கட்டி பராமரித்து மாற்றுதல் (ஈடீஙூடுகிடூடீக்ஷ ஆசீடுங்சி ஊடுடூஹடூஷடீ ஞஙீடீஙுஹசிடீ ஹடூக்ஷ பஙுஹடூஙூக்டீஙு - ஈஆஊஞப) முறையில் 24 எம்எல்டி கொள்ளளவு திறன் கொண்ட மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி ஆகியவற்றிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று அடிக்கல் நாட்டினார். 

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம். சின்னய்யா, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கே. பணீந்திர ரெட்டி, நகராட்சி நிர்வாக ஆணையர் சந்திரகாந்த் பி. காம்ப்ளே, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

தாம்பரம் சானடோரியத்தில் ரூ.5 கோடியில் புதிய பஸ் நிலையம் காணொலி காட்சி மூலம் ஜெயலலிதா திறந்து வைத்தார்

Print PDF

தினத்தந்தி            07.11.2013

தாம்பரம் சானடோரியத்தில் ரூ.5 கோடியில் புதிய பஸ் நிலையம் காணொலி காட்சி மூலம் ஜெயலலிதா திறந்து வைத்தார்

சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியத்தில் ரூ.5 கோடியில் அமைக்கப்பட்ட புதிய பஸ் நிலையத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

புதிய பஸ் நிலையம்

சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியத்தில் 3.77 ஏக்கர் இடத்தில் ரூ.4 கோடியே 95 லட்சம் செலவில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. புதிய பஸ் நிலையத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.

தாம்பரம் சானடோரியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் வரவேற்று பேசினார். பயனாளிகள் 3 பேரும் பேசினர். விழாவில் தாம்பரம் நகராட்சி தலைவர் ம.கரிகாலன், ஆணையாளர் சிவசுப்பிரமணியன், பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய தலைவர் என்.சி.கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

106 பஸ்கள்

இந்த புதிய பஸ் நிலையத்தில், தாம்பரத்தில் இருந்து சென்னை செல்லும் அனைத்து மாநகர பஸ்களும் நின்று செல்லும். காஞ்சீபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர் செல்லும் அரசு பஸ்கள் புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும். இந்த புதிய பஸ் நிலையத்தில் 30 கடைகள், ஓட்டல்கள், பயணிகள் ஓய்வு இடம், 18 பஸ்கள் நிற்கும் வசதியுடன் பாதை ஆகியவையும் அமைக்கப்பட்டு உள்ளன.

பழைய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட கீழ்கண்ட பஸ்கள் இனி புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும்.

காஞ்சீபுரம்(வழிதடம் எண் 79), ஸ்ரீபெரும்புதூர்(வழிதடம் 583), பேரம்பாக்கம்(வழிதடம் 583டி, 583பி), போந்தூர்(வழிதடம் 583பி), எழிச்சூர்(வழிதடம் 55பி), மேட்டுப்பாளையம் 9(வழிதடம் 55எஸ்), குருவன்மேடு(வழிதடம் 55 எம்), ஸ்ரீபெரும்புதூர்(வழிதடம் 55 என்), வல்லக்கோட்டை(வழிதடம் 55எல், 55ஏ), வாலாஜாபாத்(வழிதடம் 579ஏ), வேலூர்(வழிதடம் 155), ஆரணி(வழிதடம் 279), சித்தூர்(வழிதடம் 168), பெங்களூர்(வழிதடம் 144).

மொத்தம் 106 பஸ்கள் தினமும் இந்த புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்கின்றன.
Last Updated on Thursday, 07 November 2013 09:54
 

தாம்பரத்தில் ரூ.5 கோடியில் புதிய பஸ் நிலையம்

Print PDF

தினமணி            07.11.2013

தாம்பரத்தில் ரூ.5 கோடியில் புதிய பஸ் நிலையம்

தாம்பரம் சானடோரியத்தில் ரூ.5 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பஸ் நிலையத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா விடியோ கான்பரன்ஸ் மூலம் புதன்கிழமை திறந்து வைத்தார்.

தென் தமிழகத்தின் நுழைவாயிலாக திகழும் தாம்பரத்தின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன.

அவ்வாறு வரும் பஸ்களை நிறுத்துவதற்கு ஏற்ப அங்கு போதிய வசதிகள் கொண்ட பஸ் நிலையம் இல்லை. இதனால் தாம்பரம் ஜி.எஸ்.டி.சாலையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டே இருக்கும்.

இதற்கு தீர்வு காணும் வகையில் தற்போது தாம்பரம் சானடோரியத்தில் 3.77 ஏக்கர் பரப்பளவில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை தமிழக முதல்வர் ஜெயலலிதா விடியோ கான்பரன்ஸ் மூலம் புதன்கிழமை திறந்து வைத்தார்.

ஜி.எஸ்.டி. சாலை வழியாக சென்னை மாநகருக்குள் செல்லும் அனைத்து மாநகர பஸ்களும் இந்த புதிய பஸ் நிலையத்துக்குள் வந்து செல்ல உத்திரவிடப்பட்டுள்ளது.

இதனால் சானடோரியம் ஜி.எஸ்.டி.சாலையில் பஸ்ஸþக்காக காத்திருக்கும் பொதுமக்களின் கூட்டம் பெருமளவு குறையும்.

மேலும் புதிய பஸ்நிலையத்திலிருந்து காஞ்சிபுரம் (தடம் எண் 79) வேலூர் (தடம் எண் 155) ஆரணி(தடம் எண் 279) சித்தூர்(தடம் எண் 168) பெங்களூர் (தடம் எண் 144)ஆகிய இடங்களுக்கு காலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை பஸ்கள் புறப்பட்டுச் செல்லும்.

சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூர் (தடம் எண் 583), பேரம்பாக்கம் (தடம் எண் 583-டி), போந்தூர் (தடம் எண் 583-பி), எழிச்சூர் (தடம் எண் 55-பி), குருவன்மேடு (தடம் எண் 55-எம்), ஸ்ரீபெரும்புதூர் (தடம் எண் 55-என்), வல்லக்கோட்டை (தடம் எண் 55-எல்,55-ஏ), வாலாஜாபாத் (தடம் எண் 579-ஏ) ஆகிய இடங்களுக்கும் சுமார் 106 வழித்தடங்கள் செயல்படும். பஸ்நிலையத்தினுள் பொதுமக்கள் வசதிக்காக உணவகம், பயணிகள் தங்கும் அறை, கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தாம்பரம் புதிய பஸ் நிலைய திறப்பு விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கரன், தாமஸ் மலை ஒன்றியத்தலைவர் என்.சி.கிருஷ்ணன், தாம்பரம் நகர்மன்றத் தலைவர் எம்.கரிகாலன், ஆணையர் எஸ்.சிவசுப்ரமணியன், பொறியாளர் சீனிவாசன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

 


Page 4 of 57