Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Transportation

விழுப்புரத்தில் ரூ24லட்சம்மதிப்பில் புதியபேருந்துநிறுத்தம் துணை முதல்வர் திறந்து வைத்தார்

Print PDF

தினகரன்              07.12.2010

விழுப்புரத்தில் ரூ24லட்சம்மதிப்பில் புதியபேருந்துநிறுத்தம் துணை முதல்வர் திறந்து வைத்தார்

விழுப்புரம், டிச. 7: விழுப்புரத்தில் ரூ. 24 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிறுத்தத்தை துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 24 லட்சம் மதிப்பில் பிர மாண்ட புதிய பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டது. இதனை துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை திறந்து வைத்தார். இதனைதொடர்ந்து விழுப்புரம் நகராட்சி மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் கே.கே. ரோட்டில் ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட எரிவாயு தகன மேடையை துணை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது அவர், கந்தசாமி மரகதம் அறக்கட்டளை சார்பில் எரிவாயு தகன மேடைக்கு ஆம்புலன்சை அர்ப்பணித்து வைத்தார். அமைச்சர் பொன்முடி, ஆட்சியர் பழனிசாமி, நகர்மன்ற தலைவர் ஜனகராஜ், ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் கவுதமசிகாமணி, செயலாளர் செல்வராஜ், விழுப்புரம் கோபிசிகாமணி, புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஜானகிராமன், எம்எல்ஏ சிவா, சிவக்குமார், நகர செயலாளர் பாலாஜி மற்றும் பலர் உடனிருந்தனர்.

இதையடுத்து, விழுப்புரம் கலைஞர் அறிவாலயம் முன்பு மாவட்ட திமுக சார்பில் துணை முதல்வர் ஸ்டாலினுக்கு நாட்டுப்புற கலைஞர்கள் மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளித்தனர். எம்எல்ஏக்கள் புஷ்பராஜ், கண்ணன், சபாராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ ஏ.ஜி சம்பத், விழுப்புரம் சேர்மன் ஜனக ராஜ், மாவட்ட அவைத் தலைவர் மஸ்தான், திமுக பொருளாளர் புகழேந்தி, எக்ஸ்சலெண்ட் கட்டுமான நிறுவன நிர்வாக இயக்குனர் திருசங்கு, எலும்பு முறிவு சிறப்பு டாக்டர் முத்தையன், விழுப்புரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவர் அமீர்அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் மைதிலிராஜேந்திரன், அசோகன், ஒன்றிய தலைவர்கள் காணை கல்பட்டுராஜா, கோலியனூர் பிரசன்னதேவிசெல்வகுமார், மயிலம் மலர்மன்னன், விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளர் வேம்பிரவி, வளவனூர் சேர்மன் சம்பத், உட்பட பலர் வரவேற்றனர். இதேபோல் துணை முதல் வர் ஸ்டாலினை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் பழனிசாமி வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடாசலம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், திண்டிவனம் சப்&கலெக்டர் பாஜிபாக்ரே ரோகிணிராம்தாஸ், விழுப்புரம் கோட்டாச்சியர் முத்துசாமி, தாசில்தார் சேதுராமன் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் வரவேற்றனர். டிஐஜி மாசானமுத்து தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

 விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் ரூ.24 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிறுத்தத்தை துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். அருகில் அமைச்சர் பொன்முடி, ஆட்சியர் பழனிசாமி, சேர்மன் ஜனகராஜ், கோபிசிகாமணி.

 

திறப்பு விழா நடந்து 6 மாதத்தில் ‘பார்க்கிங்’ ஆனது பஸ் நிலையம்

Print PDF

தினகரன்         30.11.2010

திறப்பு விழா நடந்து 6 மாதத்தில் பார்க்கிங்ஆனது பஸ் நிலையம்

கும்மிடிப்பூண்டி, நவ.30: கும்மிடிப்பூண்டி பஜாரில் இருந்து தினமும் பொன்னேரி, சென்னை, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, ஆரம்பாக்கம், சத்தியவேடுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது.

மேலும், சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி வழியாக திருப்பதி உட்பட பல ஊர்களுக்கு பஸ்கள் வந்து செல்கின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், நோயாளிகள், தினக்கூலி தொழிலாளர் என பல்வேறு தரப்பட்டவர்கள், கும்மிடிப்பூண்டி, சுண்ணாம்புகுளம், அண்ணாமலைச்சேரி, ஓமசமுத்திரம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை பகுதிகளிலிருந்து வந்து செல்கின்றனர்.

வாகனங்கள் சாலையோரம் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசலும், பஸ்சில் பயணம் செய்ய வருபவர்கள், சாலையில் குறுக்காக ஓடுவதால் விபத்துக்களும் ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில், பேரூராட்சி நிர்வாகம் சார்பில், ரூ30 லட்சம் செலவில் அங்கு பஸ் நிலையம் ஓராண்டுக்கு முன்பு கட்டப்பட்டது. பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டன. 10 கடைகளும் கட்டப்பட்டுள்ளன.

6 மாதத்துக்கு முன்பு திறப்பு விழா நடந்தது. ஆனால், பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் சென்று வர நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பஜார் சாலையில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன பஸ்கள். இதனால், பஸ் நிலையத்துக்குள் தனியார் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறிவிட்டது.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், "கும்மிடிப்பூண்டி பஜார் அருகே பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த ஆண்டு பஸ் நிலையம் கட்டப்பட்டது. ஆனால், அங்கு பஸ் சென்றுவர நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் தனியார் வாகனங்களை அப்புறப்படுத்தி, அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் பஸ் நிலையத்துக்குள் வந்து செல்ல பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் பேரூராட்சிக்கு வருவாய் கிடைக்கும்" என்றனர்.

 

ஒட்டன்சத்திரத்தில் ரூ.10 லட்சத்தில் நிழற்குடை

Print PDF

தினமலர்        30.12.2010

ஒட்டன்சத்திரத்தில் ரூ.10 லட்சத்தில் நிழற்குடை

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட்டில் ரூ.10 லட்சம் செலவில் குடிநீர், பயணிகள் நிழற்குடை, இலவச சிறுநீர் கழிப்பிடம், பயணிகள் உட்கார இருக்கை வசதி செய்து கொடுக்க நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒட்டன்சத்திரம் நகராட்சி முதல் கூட்டம் தலைவர் உமாமகேஸ்வரி தலைமையில் நடந்தது. துணை தலைவர் வனிதா முன்னிலை வகித்தார். நகராட்சி கமிஷனர் மூர்த்தி வரவேற்றார். தலைமை எழுத்தர் கிருஷ்ணன் தீர்மானங்களை வாசித்தார். அரசு தலைமை கொறடா சக்கரபாணி, அரசு அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகளை கொட்ட காவேரியம்மாபட்டி ஊராட்சியில் தேர்வு செய்யப்பட்ட இடத்தை விலைக்கு வாங்கி அங்கு குப்பைகளை கொட்டுவதற்கும், பத்து லட்சம் ரூபாய் செலவில் பயணிகள் நிழற்குடை, இலவச சிறுநீர் கழிப்பிடம், பயணிகள் உட்காருவதற்கு இருக்கை வசதிகள் மற்றும் குடிநீர் வசதி செய்து கொடுக்கவும் அனுமதி அளித்தல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Last Updated on Wednesday, 01 December 2010 07:24
 


Page 15 of 57