Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Transportation

வண்டலூர் பேருந்து நிலைய வரைபடம்திருப்தியில்லை! புதிய குழு அமைக்க சி.எம்.டி.ஏ., உத்தரவு

Print PDF

தினமலர்          19.04.2017

வண்டலூர் பேருந்து நிலைய வரைபடம்திருப்தியில்லை! புதிய குழு அமைக்க சி.எம்.டி.ஏ., உத்தரவு

வண்டலுார் கிளாம்பாக்கத்தில் அமையவுள்ள புதிய பேருந்து நிலையத்துக்கு, ஒப்பந்தநிறுவனம் தயாரித்த வரைபடம் திருப்திஅளிக்க வில்லை என்பதால், புதிய குழு அமைக்க, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் சி.விஜயராஜ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள புறநகர் பேருந்து நிலையத்தில், போக்குவரத்து நெரிசல் வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால், தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகளுக்காக, வண்டலுாரை அடுத்த கிளாம்பாக்கத்தில், புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக வருவாய் துறை, 85 ஏக்கர் நிலத்தை சி.எம்.டி.ஏ.,வுக்கு ஒப்படைத்துள்ளது. இந்நிலத்தில் அமைய உள்ள பேருந்து நிலையத்துக்கான வரைபடம் தயாரிப்பது திட்டத்தை நிறைவேற்றுவதற்கான கலந்தாலோசனை பணிக்கான தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.

ஒப்பந்தம் பெற்றதில் இருந்து, மூன்று மாதங்களுக்குள், புதிய பேருந்து நிலையத்தின் வரைபடத்தை அளிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டிருந்தது. இதன்படி, சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனம் மாதிரி வரைபடத்தை, சி.எம்.டி.ஏ.,வுக்கு அளித்தது.

இந்த வரைபடத்தை ஆய்வதற்கான கூட்டம், சி.எம்.டி.ஏ., அலுவலகத்தில் அண்மையில் நடந்தது. அதில் ஒப்பந்த நிறுவனம் தயாரித்த வரைபடம் குறித்து விளக்கப்பட்டது.ஆனால், ஒருங்கிணைந்த தன்மை இன்றி, தனியான பேருந்து நிலையமாக அது இருந்ததால், சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் அதிருப்தி அடைந்தார். அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மட்டும் பயன்படுத்தும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதை, அதிகாரிகள் ஏற்க மறுத்தனர். இதனால் வண்டலுார் பேருந்து நிலைய திட்டம் சிக்கலாகியுள்ளது.
மாற்றம்!

தென் மாவட்ட பேருந்துகளை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படாமல், மாநகர பேருந்துகள், மெட்ரோ, மோனோ, புறநகர் மின்சார ரயில் சேவைகளுடன் இணைப்பது, தனியார் வாகனங்கள் வந்து செல்வது என, ஒருங்கிணைந்த வகையில், வரைபடத்தை மாற்றி தாக்கல் செய்ய உறுப்பினர் செயலர் உத்தரவிட்டுள்ளார்.இதற்காக, இரண்டு தலைமை திட்ட அதிகாரிகள், இரண்டு மூத்த திட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிடப்பட்டுஉள்ளது. இக்குழுவினர், ஒப்பந்த நிறுவனத்துடன் கலந்து பேசி, புதிய வரைபடத்தை தயார் செய்வர்.சி.எம்.டி.ஏ., உயரதிகாரி

சர்ச்சை!
முதல்வர் சட்டசபையில் அறிவித்த, இந்த திட்டத்தை செயல்படுத்தும் போது, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் அலட்சியமாக இருப்பது இதில் தெரியவருகிறது.இதற்கான டெண்டரில், 'ஒருங்கிணைந்த' என்ற நோக்கம் தெளிவாக குறிப்பிடப்படாததால், கலந்தாலோசனை நிறுவன வரைபடம் நிராகரிக்கப்படும் நிலைக்கு சென்றுள்ளது. இது போன்ற அலட்சிய அதிகாரிகளை வைத்து, எந்த திட்டத்தையும் முறையாக செயல்படுத்த முடியாது.நகரமைப்பு வல்லுனர்கள் - நமது நிருபர் -

 

மாநகராட்சி சுங்கச்சாவடி கட்டண வசூல் தினமும் ரூ.3 லட்சம் வரை அதிகரிப்பு

Print PDF

தினமணி            16.01.2014

மாநகராட்சி சுங்கச்சாவடி கட்டண வசூல்  தினமும் ரூ.3 லட்சம் வரை அதிகரிப்பு

மதுரை மாநகராட்சி உள்சுற்றுவட்டச்சாலையிலுள்ள 5 சுங்கச்சாவடிகளில் வாகனக்கட்டண வசூலில் முறைகேடுகள் தவிர்க்கப்பட்டதன் மூலம், தினமும் வசூல் தொகை ரூ.3 லட்சம் வரை அதிகரித்துள்ளது.

 மதுரை மாநகராட்சி மூலம் உத்தங்குடி முதல் திருமங்கலம் வரையிலான 21 கிமீ உள்சுற்றுவட்டச்சாலை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தச்சாலையில் உத்தங்குடி, சிவகங்கைச்சாலை சந்திப்பு, ராமநாதபுரம் சாலை சந்திப்பு, சிந்தாமணிச்சாலை சந்திப்பு, விமானநிலையம் சமீபம் ஆகிய 5 இடங்களில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு, கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

 இந்தச் சாவடிகளில் பல ஆண்டுகளாக முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், தினமும் பல லட்சம் ரூபாய் வரை மறைக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கும் புகார்கள் சென்றதை தொடர்ந்து, முந்தைய ஆட்சியர் அன்சுல்மிஸ்ரா, காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து சோதனை நடத்தினர். இதில் சுங்கச்சாவடியில் முறைகேடுகள் நடப்பது கண்டறியப்பட்டு, சில ஊழியர்களும் கைது செய்யப்பட்டனர்.

 இதற்கு அப்போதைய மாநகராட்சி நிர்வாகமும், ஊழியர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள மாநகராட்சி ஆணையர் கிரண்குராலா சுங்கச்சாவடிகளில் சோதனை நடத்தி, முறையாக கட்டண வசூல் நடத்துமாறு ஊழியர்களை எச்சரித்தார். சம்பந்தப்பட்ட அலுவலர்களும் மாநகராட்சிக்கு இழப்பின்றி கட்டண வசூல் நடக்க உத்தரவிட்டார். அவ்வப்போது, தனி நபராக ஆணையாளரும் ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்.

 இதை தொடர்ந்து உள்சுற்றுவட்டச் சாலைகளிலுள்ள சுங்கவரி மையங்களில் வசூல் தொகை அதிகரித்துள்ளது. ஜனவரி முதல் தேதியிலிருந்து ஜனவரி 12-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் மட்டும், கட்டண வசூல் ரூ.73 லட்சத்து 98 ஆயிரத்து 985 கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, 5 சுங்கச் சாவடிகளிலும் ஜனவரி 1-ம் தேதி ரூ.5,99,340-ம், 2-ம் தேதி ரூ.5,86,960-ம், 3-ம் தேதி ரூ.6,05,940-ம், 4-ம் தேதி ரூ.6,07,995-ம், 5-ம் தேதி ரூ.5,26,780-ம், 6-ம் தேதி ரூ.5,76,605-ம், 7-ம் தேதி ரூ.6,02,055-ம், 8-ம் தேதி ரூ.6,02,165-ம், 9-ம் தேதி ரூ.6,07,480-ம், 10-ம் தேதி ரூ.6,69,490-ம், 11-ம் தேதி ரூ,7,60,040-ம், 12-ம் தேதி ரூ.6,54,135-ம் கணக்கில் காண்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, சராசரியாக இதே அளவில் கட்டண வசூல் நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது. முன்பெல்லாம், இந்த 5 சுங்கச் சாவடிகளிலும் சேர்த்து தினமும் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையில் மட்டுமே கணக்கில் காண்பிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

 

நத்தம் பேருந்து நிலைய விரிவாக்க பணிகள் தொடக்கம்

Print PDF

தினமணி               06.01.2014

நத்தம் பேருந்து நிலைய விரிவாக்க பணிகள் தொடக்கம்

நத்தம் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக வனத்துறை இலாகாவிடம் இருந்து பெறப்பட்ட இடத்தில் இருந்த வனத்துறைக்குச் சொந்தமான கட்டடங்கள் இடிக்கப்பட்டு புதிய பேருந்து நிலைய அமைப்புக்கான வேலைகள் தொடங்கின.

 இப்போது இயங்கி வரும் பேருந்து நிலையத்தில் போதிய இடவசதி இல்லாததால் பேருந்துகள் வந்து செல்ல இடையூறாக இருந்து வருகிறது. நத்தத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தினந்தோறும் நத்தத்தில் உள்ள பள்ளிகளுக்கு வந்து செல்லும் மாணவர்கள் மாலை நேரங்களில் பஸ்சில் ஏறுவதற்கு அவதி அடைந்து வருகிறார்கள். மேலும் வியாபாரம், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் மற்றும் பல வேலைகளுக்காக வருபவர்களுக்கு புதிய பேருந்து நிலையத்தில் அனைத்து வசதிகளும் கிடைக்கும் என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்காக 2 மாதங்களுக்கு முன் பேரூராட்சிக்கு 2 ஏக்கர் நிலத்தை வனத்துறை வழங்கியது. அந்த இடத்தில் சனிக்கிழமை கனரக இயந்திரங்களைக் கொண்டு பணிகள் தொடங்கின.

 
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  6 
  •  7 
  •  8 
  •  9 
  •  10 
  •  Next 
  •  End 
  • »


Page 1 of 57