Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

நகராட்சி பள்ளி ஆண்டு விழா

Print PDF
தினமணி           01.03.2013

நகராட்சி பள்ளி ஆண்டு விழா


உடுமலை ருத்ரப்பநகர் நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

தலைமையாசிரியர் கே.முருகாத்தாள் தலைமை வகித்தார். ஆசிரியர் வி.கலைவாணி ஆண்டறிக்கை வாசித்தார். இதையொட்டி மாணவ, மாணவிகளின் அணிநடை பயிற்சி, கோலாட்டம், சிலம்பம், மனித கோபுரம், யோகா, ஜிம்னாஸ்டிக், கரகாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம், குழு நடனம், மாறுவேடம், நாடகம், பங்கரா நடனம் ஆகிய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தமிழ் மற்றும் ஆங்கில பேச்சுப் போட்டிகள், கட்டுரை, ஒப்புவித்தல், கவிதை, பாடல், ஓவியம் ஆகிய தனித்திறன் போட்டிகளும், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், தவளை ஓட்டம், சாக்கு ஓட்டம், குண்டு எறிதல், கபடி உள்ளிட்ட குழு விளையாட்டுகளும் நடைபெற்றன.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் டி.தண்டபாணி, கூடுதல் அலுவலர் அங்கயற்கண்ணி, கல்விக் குழுத் தலைவர் ஷோபா, பெற்றோர்-ஆசிரியர் சங்க உறுப்பினர் சு.சிவசங்கர் உள்பட பலர் பங்கேற்றுப் பேசினர்.

பொதுமக்கள், பெற்றோர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
Last Updated on Friday, 01 March 2013 09:53
 

நகராட்சி பள்ளியில்அறிவியல் கண்காட்சி

Print PDF
தின மலர்                26.02.2013

நகராட்சி பள்ளியில்அறிவியல் கண்காட்சி


தர்மபுரி: தர்மபுரி எஸ்.வி., ரோடு நகராட்சி நடுநிலை பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.கண்காட்சியை உதவி தொடக்க கல்வி அலுவலர் ரகுநாத் துவங்கி வைத்தார். இதில், மாணவ, மாணவிகள் சோலார் மின்சாரம், சோலார் பஸ், மின்சார மணி, உணவு வலை, மழைநீர் சேகரிப்பு மாதிரி, மூலிகைகளின் பயன், இதய அமைப்பு, மனித எழும்பு கூடு, குவி, குழி லென்ஸ்களின் பலன்கள் மற்றும் இயக்கம் குறித்து சக மாணவர்கள் மற்றும் பிற பள்ளி மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.கண்காட்சியில் சிறப்பான முறையில் கண்காட்சி அமைத்து விளக்கம் அளித்த மாணவி, நந்தினி, பூங்கொடி, ஆகியோருக்கு, பள்ளி தலைமையாசிரியர்(பொ) தாமோதரன் பரிசு வழங்கி பாராட்டினார்.

ஆசிரியர் கயற்கன்னி, செல்வம், தையல் ஆசிரியை பிரேமா உடன் இருந்தனர்.


Last Updated on Tuesday, 26 February 2013 11:32
 

மாநகராட்சிப் பள்ளிகளில் "ஸ்மார்ட்' வகுப்பறைகள்

Print PDF
தின மணி          23.02.2013

மாநகராட்சிப் பள்ளிகளில் "ஸ்மார்ட்' வகுப்பறைகள்

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் "ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைப்பது தொடர்பான தீர்மானம் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2011-12-ம் ஆண்டு பட்ஜெட்டில் 38 உயர்நிலை மற்றும் 32 மேல்நிலைப் பள்ளிகளில் "ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. "ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்க பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் தேவைப்படுகின்றன.

முதலில் 14 பள்ளிகளில் "ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு டெண்டர் கோரப்பட்டது. டெண்டர் கோரியவர்களிடம் தகுந்த வசதிகள் இல்லாததால் டெண்டர் நிராகரிக்கப்பட்டது. பின்னர் எல்காட் நிறுவனம் மூலம் "ஸ்மார்ட்' வகுப்பறைகள் கொண்ட சென்னைப் பள்ளிகளை 5 ஆண்டுகளுக்கு இயக்க தோராய மதிப்பு பெறப்பட்டது. இதன்படி ஒரு பள்ளிக்கு ரூ. 5.76 லட்சம் செலவாகும். மொத்தம் 14 பள்ளிகளுக்கு ரூ. 80.65 லட்சம் செலவாகும். ஒப்பந்த காலம் முடிந்தவுடன் ஸ்மார்ட் வகுப்பறைகளை பள்ளிகளுக்கே ஒப்படைக்கவேண்டும்.

எனவே "ஸ்மார்ட்' வகுப்பறை வசதியை எல்காட் நிறுவனம் மூலம் பெறவும், கட்டட துறையின் மூலம் தளவாடங்கள் மற்றும் வசதிகள் செய்து கொடுக்கவும், இதற்கான செலவை 2012-13 பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் இருந்து மேற்கொள்ளவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நூலகங்களுக்கு புத்தகங்கள்: சென்னைப் பள்ளிகளில் உள்ள நூலகங்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்குவது மற்றும் புனரமைத்தல் தொடர்பான தீர்மானமும் மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதன்படி, 76 உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளிக்கும் 100 புத்தகங்கள் அடங்கிய செட் வழங்கப்படும்.
Last Updated on Monday, 25 February 2013 11:26
 


Page 20 of 111