Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

மாநகராட்சி பள்ளிக்கு அடிப்படை வசதிகள்

Print PDF
தினகரன்                   19.04.2013

மாநகராட்சி பள்ளிக்கு அடிப்படை வசதிகள்


திருச்சி: திருச்சி மாநகராட்சி பள்ளிகளுக்கு அடிப்படை வசதி வேண்டும் என்று தலைமையாசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர். அனைவருக்கும் கல்வி இயக்க நகர்ப்புற வளமையம் சார்பில் திருச்சி மாநகராட்சி பள்ளிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் உறையூர் பாண்டமங்கலம் தெற்கு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. கோ அபிசேகபுரம் கோட்டத் தலைவர் ஞானசேகரன் தலைமை வகித்தார். மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் பாலகுரு, உதவி ஆணையர் தயாநிதி, அனைவருக்கும் கல்வி இயக்க நகர்ப்புற வள மைய மேற்பார்வையாளர் முகமது யூசுப், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் கோமதிநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் மாநகராட்சி பள்ளி தலைமையாசிரியர்கள் பங்கேற்று, தங்கள் பள்ளிகளுக்கு தேவையான கழிவறை, வகுப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தினர். அவர்களின் கோரிக்கைகளை செய்து தருவோம் என்று கோட்ட தலைவர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உறுதியளித்தனர். மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.
 

மாநகராட்சி பள்ளிகளில் புதிய வகுப்பறைக் கட்டடங்கள் திறப்பு

Print PDF
தினமணி          13.04.2013

மாநகராட்சி பள்ளிகளில் புதிய வகுப்பறைக் கட்டடங்கள் திறப்பு

மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைக் கட்டடங்களை, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

திருப்பூர் அருகே மண்ணரையில் உள்ள கிருஷ்ணசாமி கவுண்டர் புஷ்பவதி அம்மாள் நினைவு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ.60 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட 7 வகுப்பறைகள், சுற்றுச் சுவர், கழிப்பறைக் கட்டடம், கருமாரம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 3 வகுப்பறை கட்டடங்கள் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மேயர் அ.விசாலாட்சி, ஆணையர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். புதிய கட்டடங்களை திறந்து வைத்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியது:

மண்ணரையில் உள்ள இப்பள்ளிக்கு இடம் வழங்கி, கட்டடங்கள் கட்டிக் கொடுத்து இளைய சமுதாயம் முன்னேற கி.சரவணபிரகாஷ் குடும்பத்தினர் மற்றும் திருப்பூர் ரவுண்ட் டேபிள் நிர்வாகிகள் வழிகாட்டி உள்ளனர். பொருளாதார தடையினால் கல்வி தடைபடக் கூடாது என்ற நோக்கில் அனைத்து மாணவர்களும் தடையின்றி கல்வி கற்க தேவையான அனைத்து உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார்.  

தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வதற்கு கல்வி வளர்ச்சி அவசியம் என்ற அடிப்படையில், கடந்த நிதி ஆண்டில் மட்டும் கல்வித் துறைக்கு ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்தார். நடப்பு நிதி ஆண்டுக்கு ரூ.17 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

மாணவர்கள் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயன்படுத்தி, வருங்காலத்தில் இந்தியாவின் தூண்களாக விளங்க வேண்டும். கருமாரம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்காக, மாநகராட்சி மூலமாக ரூ.40 லட்சம் செலவில் அணுகு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இப்பள்ளிக்கு கழிவறை வசதி மற்றும் அடிப்படை வசதிகள் ரூ.10 லட்சம் மதிப்பில் செய்து தரப்பட்டுள்ளது என்றார்.

ஜோ.ர.சார்ல்ஸ் ஜான் சாமூவேல், ப.முத்துசாமி, கவுன்சிலர் அ.சுப்பிரமணியம், கி.சரவணபிரகாஷ் குடும்பத்தினர், ரவுண்ட் டேபிள் நிர்வாகிகள் மணிஷ் பர்மானந்தா, அன்கூர் மேத்தா, ஹர்திக் சேட்டா, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அ.அழகர்சாமி, பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
 

கல்லூரிக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் மாநகராட்சி மெட்ரிக் பள்ளி விரைவில் தொடங்க திட்டம்

Print PDF

தினகரன்                18.03.2013

கல்லூரிக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் மாநகராட்சி மெட்ரிக் பள்ளி விரைவில் தொடங்க திட்டம்


மதுரை: மாநகராட்சி சார்பில் கல்லூரி தொடங்க அரசு அனுமதி கிடைப்பதில் சிக்கலாகி விட்டதால், மெட்ரிக் பள்ளி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி சார்பில் 11 மேல்நிலைப்பள்ளி, 13 உயர்நிலை, 14 நடுநிலை, 29ஆரம்ப பள்ளிகள் என மொத்தம் 63பள்ளிகள் உள்ளன. ஏழை, நடுத்தர குடும்பங்களை சார்ந்த ஆயிரக்கணக்கான மாண வர்கள் படிக்கின்றனர். இங்கு பிளஸ்2 படித்து முடிக்கும் மாணவிகள் ஏராளமானோர் மேல் படிப்புக்கு வசதியின்றி படிப்பை நிறுத்தும் நிலை உள்ளது.

எனவே மாநகராட்சி சார்பில் கல்லூரி தொ டங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக மாநகராட்சி மன்றத்தில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பப்பட்டது. இடமும் தேர்வு செய்யப்பட்டது. இதற்கு அனுமதி அளிக்கலாமா என்பது குறித்து நடந்த ஆய்வு கூட்டத்தில், தற்போது சுயநிதி கல்லூரிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. மாநகராட்சி சார்பில் சுயநிதி கல்லூரி நடத்த இயலாது, ஏனென்றால் இம்மாதிரி கல்லூரியில் தனியார் போல் மாநகராட்சி கட்டணம் வசூலிக்க முடியாது, என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கல்லூரி தொடங்கும் திட்டம் கைவிடப்பட்டது.

இதையடுத்து ஆங்கில வழி கல்விக்கு மாநகரட்சி பள்ளிகளில் வசதி ஏற்படுத்த வேண்டும், என கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். கல்லூரி தொடங்க முடி யாத நிலை இருப்பதால், அரசின் வழி காட்டுதல் பெற்று மாநகராட்சி மெட்ரிக் பள்ளி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் ராஜன்செல்லப்பா தெரிவித்துள்ளார்.
கைவிடப்பட்ட பள்ளிகள்

மாநகராட்சியுடன் வண்டியூர், மேலமடை, உத்தங்குடி உள்ளிட்ட 11 ஊராட்சிகள் 2011-ல் இணைக்கப்பட்டன. இதிலுள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகள் மாநகராட்சி நிர்வாகத்தில் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் கடந்த 2ஆண்டுகளாக இந்த பள்ளிகளின் அடிப்படை வசதிகளை ஊராட்சி ஒன்றியங்கள் கவனிக்காமல் கைவிட்டு விட்டன. மாநகராட்சியும் தங்கள் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்படவில்லை என கண்டுகொள்வது இல்லை. இதனால் இந்த பள்ளிகளில் எந்த ஒரு வசதியும் இன்றி மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

Last Updated on Tuesday, 19 March 2013 10:30
 


Page 19 of 111