Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

ஆரணி நகராட்சி உயர்நிலைப் பள்ளி 100% தேர்ச்சி

Print PDF
தினமணி        03.06.2013

ஆரணி நகராட்சி உயர்நிலைப் பள்ளி 100% தேர்ச்சி


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், ஆரணி கண்ணப்பன் தெருவில் உள்ள நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளி கடந்த ஆண்டுதான் தரம் உயர்த்தப்பட்டது. முதல் முறையாக 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.

எஸ்.பாரதி 440 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடத்தையும், ஜி.கெüசல்யா 394 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடத்தையும், என்.ப்ரீத்தா 383 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடத்தையும் பெற்றனர்.

இவர்களை பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.கே.ரத்தினகுமார், தலைமையாசிரியர் ப.பிரேமா, உதவித் தலைமையாசிரியர் எஸ்.ராஜா ஆகியோர் பாராட்டினர்.
 

ஏழை மாணவியர் எதிர்காலக் கல்விக்கு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவாதம்

Print PDF
தினமணி        01.06.2013

ஏழை மாணவியர் எதிர்காலக் கல்விக்கு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவாதம்


பத்தாம் வகுப்பு படிப்பதே கஷ்டம் என்றிருந்த ஏழை மாணவ, மாணவியர், மாநகராட்சிப் பள்ளிகளில் முதல் 3 இடங்களைப் பெற்றதன் மூலமாக குறைந்தபட்சம் பிளஸ் 2 வரையிலான படிப்பை கோவை மாநகராட்சி உறுதி செய்துள்ளது.

கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்களைப் பெறுபவர்களுக்கு தங்கப் பதக்கம், கல்வி ஊக்கத் தொகை மற்றும் அவர்கள் படிக்க விரும்பும் படிப்புக்கான செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்வதாக மேயர் செ.ம.வேலுசாமி அறிவித்து நடைமுறைப்படுத்தியுள்ளார்.

அதன்படி, கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இத்துடன் அவர்களின் உயர்கல்விக்குத் தேவையான கட்டணங்களும் மாநகராட்சி சார்பில் செலுத்தப்பட்டது.

இதன் மூலமாக பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தத் திட்டமிட்டிருந்த மாணவ, மாணவியர் பிளஸ் 2 வரை படிக்கவும், பிளஸ் 2வுடன் படிப்பை நிறுத்தத் திட்டமிட்டிருந்த பலரது கல்விக் கனவு கல்லூரி வரையிலும் விரிவடைந்தது. இந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் ஒவ்வொரு மாநகராட்சிப் பள்ளிகளிலும் முதல் 20 இடங்களைப் பிடித்தவர்களுக்குக் கல்விக் கடன் முகாமும் மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்டுக் கல்விக் கடன் வழங்கப்பட்டது.

இதன் மூலமாக கோவை மாநகராட்சி நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் கல்வி பயில வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 11 மாதத்தில் தாய், தந்தையை இழந்தாலும் கூலித் தொழிலாளியான சித்தப்பா எஸ்.தங்கத்தின் ஆதரவில் வளர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மூன்றாவது இடம் பெற்ற ஒப்பணக்கார வீதி மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஹேமலதா, கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

வறுமை துரத்தினாலும் பல்வேறு இடையூறுகள் தொடர்ந்தாலும் கல்வி ஒன்றுதான் தங்கள் வாழ்க்கையின் கலங்கரை விளக்கம் என்பதை உணர்ந்து படித்த மாணவ, மாணவியருக்கு மாநகராட்சியின் கல்வி உதவி மிகப் பெரும் வரமாக அமைந்துள்ளது. இதுதான் சிறப்பாகப் படித்தவர்களை மேலும் சாதிக்கத் தூண்டும் உந்துசக்தி என்றனர் மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவியர்.
 

கோவை மாநகராட்சி பள்ளிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு மேயர் செ.ம.வேலுச்சாமி வழங்கினார்

Print PDF
தினதந்தி       01.06.2013

கோவை மாநகராட்சி பள்ளிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு மேயர் செ.ம.வேலுச்சாமி வழங்கினார்


‘கோவை மாநகராட்சி பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி, தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ–மாணவிகளுக்கு மேயர் செ.ம.வேலுச்சாமி ரொக்கப்பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

முதல் 3 இடங்கள்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியாயின. இதில் கோவை மாநகராட்சி அனுப்பர்பாளையம் உயர்நிலைப்பள்ளி மாணவி எஸ்.சுவாதி 500–க்கு 492 மதிப்பெண்கள் எடுத்து கோவை மாநகராட்சி பள்ளிகளில் முதல் இடத்தையும், ரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர் கே.ருமேஷ் குமார் 500–க்கு 491 மதிப்பெண்களை பெற்று 2–வது இடத்தையும், ஒப்பணக்கார வீதி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கே. ஹேமலதா, கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேற்கு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.பவதாரிணி, ரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர் வி.தினேஷ் ஆகியோர் 500–க்கு 487 மதிப்பெண்கள் பெற்று 3–ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

மேயர் பாராட்டு

அந்த மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் கோவை மாநகராட்சி மேயர் செ.ம.வேலுச்சாமியை நேற்று சந்தித்தனர். அப்போது அவர்களுக்கு மேயர் சால்வை அணிவித்து ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–கோவை மாநகராட்சியில் உள்ள 27 மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளுக்கு 8 பள்ளிகளுக்கு தரச்சான்று கிடைத்துள்ளது. இந்த ஆண்டு மேலும் 9 பள்ளிகளுக்கு தரச்சான்று கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோவை மாநகராட்சி பள்ளிகளில் ஏழை மாணவர்கள் சேருகிறார்கள். ஆனால் அவர்களுக்கும் நன்கு பயற்சி அளித்து அதிக மார்க் எடுக்க வைத்த மாநகராட்சி ஆசிரியர்கள். கல்வி அதிகாரிகளை பாரட்டுகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த நிகழ்ச்சியில் சேலஞ்சர் துரை எம்.எல்.ஏ., துணை ஆணையாளர் சிவராசு, துணைமேயர் லீலாவதி, மண்டல தலைவர்கள் கேஆர்.ஜெயராம், ஆதிநாராயணன், சாவித்திரி பார்த்தீபன், குழு தலைவர்கள் அம்மன் அர்ச்சுனன்,பிரபாகரன்,வக்கீல் ராஜேந்திரன், சாந்தாமணி, தாமரைச்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பேட்டி

கோவை மாநகராட்சி பள்ளியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:–எங்கள் பள்ளி ஆசியர்கள், தலைமை ஆசிரியர்கள் அளித்த பயிற்சியின் காரணமாக அதிக மதிப்பெண்கள் தேற முடிந்தது. மாநகராட்சி சார்பில் மாலையில் நடத்தப்படும் சிறப்பு வகுப்புகள் எங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
 


Page 13 of 111