Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

மாநகராட்சி பள்ளிகளில் கம்ப்யூட்டர் மூலம் மாணவர்கள் வருகை கண்காணிப்பு

Print PDF

தினமணி 17.08.2009

மாநகராட்சி பள்ளிகளில் கம்ப்யூட்டர் மூலம் மாணவர்கள் வருகை கண்காணிப்பு

சென்னை, ஆக. 15: மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் வருகைப் பதிவு விவரங்களை கம்ப்யூட்டர் மூலம் கண்காணிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

பள்ளிக்கு மாணவர்கள் வரவில்லையெனில் அது குறித்தும், பாடவாரியாக மாணவர் பெற்ற மதிப்பெண் விவரங்களும் எஸ்.எம்.எஸ். மூலம் பெற்றோர்களின் செல்போனுக்குத் தெரிவிக்கப்படும்.

ரூ. 2.50 லட்சத்தில் செலவில் நவீன சாஃப்ட்வேர் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த வசதியை மாநகர மேயர் மா. சுப்பிரமணியன் சனிக்கிழமை தொடங்கி வைத்தார். இதன்பின் அவர் கூறியதாவது:

முதல்முறையாக நுங்கம்பாக்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 816 மாணவிகள், 36 ஆசிரியர்களின் தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் மாநகராட்சியின் 285 பள்ளிகளிலும் இத் திட்டம் செயல்படுத்தப்படும்.

இதற்காக மாநகராட்சியின் கல்வித் துறைக்கு தனி மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பள்ளிகளும் இணையதளம் மூலம் ஒருங்கிணைக்கப்படுவதால், மாநகராட்சியின் உயர் நிர்வாக அதிகாரிகள், கல்வித் துறை, பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் எளிதில் பல்வேறு தகவல்களைப் பெற முடியும்.

மாணவர்கள் குறித்து எஸ்.எம்.எஸ். அனுப்ப, பெற்றோர்களின் செல்போன் எண்கள் பெறப்பட்டுள்ளன.

மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தும் வகையில் "பிராஜெக்ட் இ ஸ்கூல்ஸ்' என்ற இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

கட்டுக்குள் பன்றிக் காய்ச்சல்: தண்டையார்பேட்டை மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்புக்குள்ளான 5 பேருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மற்றவர்கள் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.

எனவே, இந்த நோய் குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம். மாநகராட்சி தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது என்றார் மேயர் மா. சுப்பிரமணியன்.

 

காஞ்சி மாவட்டத்தில் கல்விக் குழு நாள் விழா

Print PDF

தினமலர் 17.08.2009

 

குளித்தலையில் திடக்கழிவு மேலாண்மை பயிற்சி முகாம்

Print PDF

தினமணி 14.08.2009

குளித்தலையில் திடக்கழிவு மேலாண்மை பயிற்சி முகாம்

குளித்தலை, ஆக.13: பள்ளி மாணவர்களுக்கான திடக்கழிவு மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் குளித்தலை நகராட்சி மூலமாக குளித்தலையில் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்றது.

குளித்தலை பாரதி வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற 2 நாள் முகாமுக்கு நகர்மன்றத் தலைவர் அ. அமுதவேல் தலைமை வகித்து பள்ளி மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்து விளக்கினார்.

குளித்தலை நகராட்சியில் இத்திட்டத்தில் தற்போது 12 வார்டுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வார்டுகளில் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து அவற்றிலிருந்து உரம் தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பகுதிகளைச் சேர்ந்த சுய உதவிக்குழு பெண்களுக்கு அண்மையில் இதுகுறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், பள்ளி மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளக்க முகாம்கள் நடைபெற்றன.

இதில், பாரதிவித்யாலயா பள்ளி, அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். ஆத்மா தொண்டு நிறுவனம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் மூலம் திடக்கழிவு மேலாண்மை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் அன்வர்பாட்ஷா, குளித்தலை நகராட்சி ஆணையர் கு. தனலட்சுமி, நகர்மன்ற உறுப்பினர் ஆர். ஜெயசங்கர், எக்ஸ்னோரா தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர்கள் பி. விஜய்ஆன்ந்த், வி. கணபதி, கே. மோகனசுந்தரம், சுகாதார ஆய்வாளர் மு. செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 


Page 105 of 111