Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 'ஏசி' வசதியுடம் கம்யூட்டர் லேப்

Print PDF

தினமலர் 27.08.2009

 

தசைத்திறன் குறைந்தோருக்கு சென்னையில் சிறப்புப் பள்ளி

Print PDF

தினமணி 21.08.2009

தசைத்திறன் குறைந்தோருக்கு சென்னையில் சிறப்புப் பள்ளி

சென்னை, ஆக. 20: தசைத்திறன் குறைபாடு உள்ளவர்களுக்காக சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பள்ளியை துணை முதல்வர் மு.. ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை மாநகராட்சி சார்பில் ஆயிரம் விளக்கு மாதிரிப் பள்ளி சாலையில் இந்த சிறப்புப் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் தசைத்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான சிறப்பு நூலை வெளியிட்டு மு.. ஸ்டாலின் பேசியது:

தசைத் திறன் குறைபாடு உள்ளவர்கள் மாடிப்படிகள் ஏற முடியாது. நடக்க முடியாது. எனவே அவர்களுக்கு ஏற்ற வசதிகளுடன் வகுப்பறைகள் இந்த சிறப்புப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பள்ளியில் ஊனமுற்றோர் என்று சொல்லக் கூடிய எல்லாக் குறைபாடுகள் உள்ள குழந்தைகளும் சேர்ந்து படிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற சிறப்புப் பள்ளிகள் இல்லாவிட்டால் 10 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் படிக்கும் வாய்ப்பை இழந்து விடுவார்கள். எதிர்வரும் ஆண்டுகளில் சேரும் குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இப்பள்ளி விரிவுப்படுத்தப்படும்.

உடல் ஊனமுற்றவர்கள், தசைத் திறன் குறைபாடு உள்ளவர்கள் அரசின் நலத்திட்டங்களைப் பயன்படுத்தி முன்னேற தொண்டு நிறுவனங்களும், மனித நேயம் படைத்தவர்களும் முன்வர வேண்படும் என்றார் ஸ்டாலின்.

மத்திய சமூக நீதித் துறை இணை அமைச்சர் டி. நெப்போலியன், சென்னை மாநகர மேயர் மா. சுப்பிரமணியன், ஆணையர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 

மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை: மேயர் தகவல்

Print PDF

தினமணி 19.08.2009

மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை: மேயர் தகவல்

வேலூர், ஆக. 17: மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வேலூர் மேயர் ப. கார்த்திகேயன் தெரிவித்தார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ரோட்டரி இண்டர்நேஷனல் இணைந்து பள்ளி மாணவர், மாணவியர்களுக்கான வேலூர் ஒலிம்பியாட் 2009 தடகள விளையாட்டுப் போட்டிகளை திங்கள்கிழமை நடத்தியது.

கோட்டையில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளி அரங்கில் இந்த போட்டிகளை எம்எல்ஏ சி. ஞானசேகரன் தொடங்கி வைத்தார். இதில் 150 பள்ளிகளிலிருந்து 1,500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா மாலையில் நடைபெற்றது.

மாணவ, மாணவிகளுக்கு பரிசளித்து மேயர் பேசியதாவது:

மாணவர்கள் படிக்கும் காலத்தில் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். விளையாடும் நேரத்தில் விளையாட்டும், படிக்கும் நேரத்தில் படிப்பும், டிவி பார்க்க வேண்டிய நேரத்தில் டிவியும் என உங்களின் நடவடிக்கைகளை வரையறுத்துக் கொண்டு, நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

மாணவர்களின் நலன் கருதி மாநகராட்சிப் பள்ளிகளில் மின்விளக்கு, மின்விசிறி, மேஜை, நாற்காலிகள் உள்ளிட்ட வசதிகளை செய்து வருகிறோம். இப்பள்ளிகளின் தரத்தை உயர்த்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜி. மூர்த்தி, ரோட்டரி ஒலிம்பியாட் ஒருங்கிணைப்பாளர் கே. பாண்டியன், மாவட்ட ஆளுநர் டபுள்யூ. ஆனந்த், சின்னத்திரை நடிகர் பி.கே. கமலேஷ், மாவட்ட விளையாட்டு அலுவலர் கே. மதிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் வெற்றிபெற்று முதல் இரு இடங்களை பெற்ற மாணவ, மாணவியர் வரும் 25-ம் தேதி சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.

 


Page 104 of 111