Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 88.7 சதவீத தேர்ச்சி: கடந்த ஆண்டைவிட 2.5 சதவீதம் அதிகம்

Print PDF

தி இந்து        13.05.2017

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 88.7 சதவீத தேர்ச்சி: கடந்த ஆண்டைவிட 2.5 சதவீதம் அதிகம்

பிளஸ் 2 பொதுத்தேர்வில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளில் 88.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சென்னையில் 32 மேல்நிலைப் பள்ளி களை சென்னை மாநகராட்சி நடத்தி வருகிறது. இந்த பள்ளிகளில் படித்த 6,423 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதினர். இவர்களில் 2,580 பேர் மாணவர்கள், 3,843 பேர் மாணவிகள். தேர் வெழுதிய 6,423 பேரில் 5700 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 88.7 சதவீதமாகும். கடந்த ஆண்டு மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளின் ஒட்டுமொத்த தேர்ச்சி 86.21 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் 2.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

தேர்ச்சி பெற்றவர்களில் 2,085 பேர் மாணவர்கள், 3,615 பேர் மாணவிகள். தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் மாணவர்களைக் காட்டிலும் மாணவிகளே அதிகம் உள்ளனர். மாநகராட்சி பள்ளி மாணவர்களின் தேர்ச்சி வகிதம் 80.8 சதவீதமாக உள்ளது. அதேவேளையில் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 94.1 சதவீதமாக இருக்கிறது.

தேர்ச்சி பெற்றவர்களில் 136 மாணவ, மாணவியர் 1,100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர், கடந்த ஆண்டு 61 பேர் மட்டுமே 1,100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருந்தனர். மேலும் 524 பேர் 1000 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ள னர். கடந்த ஆண்டு இது 326-ஆக இருந் தது. கடந்த ஆண்டை விட முழு (200-க்கு 200) மதிப்பெண்கள் பெற்றவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு பெரம்பூர் மார்க் கெட் தெரு சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிஐடி நகர் சென்னை மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை எட்டியுள்ளன. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 3-ஆக இருந்தது. அதேபோல இந்தாண்டு 18 பள்ளிகள் 90 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.

 

கண் தான விழிப்புணர்வு வாரம்: மாநகராட்சிப் பள்ளிகளில் கண் பரிசோதனை

Print PDF

தினமணி          26.08.2014

கண் தான விழிப்புணர்வு வாரம்: மாநகராட்சிப் பள்ளிகளில் கண் பரிசோதனை

கண் தான விழிப்புணர்வு வாரங்களை முன்னிட்டு சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்குக் கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது என எழும்பூர் கண் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் நமீதா புவனேஸ்வரி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியது.

ஆகஸ்ட் 25-ஆம் தேதி முதல் செப்டம்பர் 8-ஆம் தேதி வரையிலான இரண்டு வாரங்கள், கண் தான விழிப்புணர்வு வாரங்களாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதை முன்னிட்டு சென்னையிலுள்ள அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகளில் விழிப்புணர்வு கைப்பிரதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

மேலும் செப்டம்பர் 2-ஆம் தேதி எழும்பூர் பாந்தியன் சாலையில் இருந்து மார்ஷல் சாலை வரை விழிப்புணர்வுப் பேரணி நடைபெறும்.

செப்டம்பர் 8-ஆம் தேதி கண் தானம் வழங்கிய குடும்பத்தினரும், தானம் பெற்ற குடும்பத்தினரும் கலந்து கொள்ளும் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

108 சேவை: இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 108 ஆம்புலன்ஸ் சேவையும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, இறந்துவிட்ட ஒருவருடைய கண்களை அவரது உறவினர்கள் தானமளிக்க விரும்பினால், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் சேவையை அழைக்கலாம்.

அழைத்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அதுபற்றி அருகிலுள்ள கண் வங்கிக்குத் தகவல் கொடுக்கப்படும். கண் வங்கியினர் சென்று குறிப்பிட்ட நேரத்துக்குள் கண்களைத் தானமாகப் பெற்றுக் கொள்வார்கள்.

இதற்காக தமிழகத்தில் உள்ள அரசு, தனியாரைச் சேர்ந்த 69 கண் வங்கிகளுடன் இணைந்து பணியாற்றுகிறோம் என 108 ஆம்புலன்ஸ் சேவையின் மண்டல மேலாளர் பிரபுதாஸ் தெரிவித்தார்.

Last Updated on Tuesday, 26 August 2014 09:48
 

732 மாணவர்களுக்கு ரூ. 84 லட்சம் ஊக்கத்தொகை: மேயர் சைதை துரைசாமி வழங்கினார்

Print PDF

தினமணி             07.02.2014

732 மாணவர்களுக்கு ரூ. 84 லட்சம் ஊக்கத்தொகை: மேயர் சைதை துரைசாமி வழங்கினார்

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் படித்து, தற்போது உயர்கல்வி பயிலும் 732 மாணவ, மாணவியருக்கு ரூ. 83.91 லட்சம் மதிப்பிலான ஊக்கத்தொகையை மேயர் சைதை துரைசாமி வியாழக்கிழமை வழங்கினார்.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி: சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் படித்து 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு உயர்கல்விக்கான ஊக்கத்தொகை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகிறது. இப்போது இந்த ஊக்கத்தொகை உயர்த்தி வழங்கப்படுகிறது.

இதன்படி சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் 732 மாணவர்களுக்கு ரூ. 83.91 லட்சம் அளவிலான ஊக்கத் தொகையை மேயர் சைதை துரைசாமி வியாழக்கிழமை வழங்கினார்.

இதில் முதலாமாண்டு பயிலும் 275 பேருக்கு ரூ. 42 லட்சமும், இரண்டாமாண்டு பயிலும் 225 பேருக்கு ரூ. 18.25 லட்சமும், மூன்றாமாண்டு பயிலும் 205 பேருக்கு ரூ. 17.51 லட்சமும், நான்காமாண்டு பயிலும் 27 பேருக்கு ரூ. 6.15 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.

ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில், தியாகராய நகர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.பி. கலைராஜன், துணை ஆணையர் (கல்வி) ரா. லலிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 


Page 2 of 111