Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

திருப்பூர் மாநகரில் புதிய சாலை அமைப்பு

Print PDF

தினமணி 12.11.2009

திருப்பூர் மாநகரில் புதிய சாலை அமைப்பு

திருப்பூர், நவ.12: திருப்பூரில் மாநகரின் பிரதான சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க புதிய சாலை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதற்காக திட்டமிடப்பட்ட வழியிலுள்ள கட்டடங்கள் வியாழக்கிழமை இடித்து அகற்றப்பட்டன.

மாவட்டம், மாநகராட்சி நிர்வாகங்கள் மூலம் திருப்பூர் மாநகரை அழகுபடுத்த 16 அம்ச திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதில் மாநகர சாலைகளில் ஏற்படும் நெருக்கடியை குறைக்க புதிய சாலைகள் அமைத்தல் முக்கிய திட்டமாக உள்ளது.

முதற்கட்டமாக திருப்பூர்-ஊத்துக்குளி சாலையிலும், ரயில்வே மேம்பாலத்திலும் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க புதுராமகிருஷ்ணாபுரம் இரட்டைக்கண் பாலம் முதல் சிட்கோ தொழிற்பேட்டை சாலையை இணைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதுவரை புதுராமகிருஷ்ணாபுரத்தில் இருந்து வரும் வாகனங்கள் புஷ்பா தியேட்டர் பகுதிக்கு செல்ல ரயில் பாதையை கடந்து ஊத்துக்குளி சாலை, ரயில்வே மேம்பாலம் வழியாக புஷ்பா தியேட்டர் ரவுண்டா சென்றடைந்தன

புதியதாக அமைக்கப்படும் சாலையின் மூலம் புது ராமகிருஷ்ணாபுரத்தில் இருந்து நேரடியாக தொழிற்பேட்டை வழியே புஷ்பா தியேட்டர் ரவுண்டானாவை அடைய முடியும். அதற்காக தற்போது சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் இருந்த 2 பெரிய அலுவலக கட்டங்களும், 4 வீடுகளும் வியாழக்கிழமை இடிக்கப்பட்டன.

"கட்டடங்கள் இடிப்பைத் தொடர்ந்து அப்பகுதியில் 40 அடி அகலத்தில் சுமார் 1 கி.மீ.க்கு சாலை அமைக்கப்படும்.

இதனால் ஊத்துக்குளி சாலை, குமரன் சாலை, மேம்பாலம் பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி பெருமளவு குறையும்.

இதேபோல் மின்மயானம் சாலையிலிருந்து அணைப்பாளையம், பாளையக்காடு, மண்ணரை வழியே ஊத்துக்குளி சாலையை அடையும்படி புதிய சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது' என்றார் மேயர் க.செல்வராஜ்.

Last Updated on Friday, 13 November 2009 09:06
 

திருச்சி மாநகரில் 376 கிமீ தொலைவு சாலைகளை நவீனப்படுத்த திட்டம்

Print PDF

தினமணி 11.11.2009

திருச்சி மாநகரில் 376 கிமீ தொலைவு சாலைகளை நவீனப்படுத்த திட்டம்


திருச்சி, நவ. 10: திருச்சி மாநகரில் 376 கிமீ தொலைவு சாலைகளை சர்வதேச தரத்துக்கு இணையாக நவீனப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

தமிழ்நாடு நகர்ப்புற சாலை உள்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் நடைபெறும் இந்தத் திட்டத்தின் தொழில்நுட்பக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி மேயர் எஸ். சுஜாதா இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். ஆணையர் த.தி. பால்சாமி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவன உதவித் துணைத் தலைவர் ஆர். காயத்ரி பேசியது:

""தமிழகத்தில் முதன் முறையாக கொண்டு வரப்பட்டுள்ள இத்திட்டத்தின்படி அமைக்கப்படும் சாலைகள், சர்வதேச தரத்துக்கு இணையாகவும், 20 ஆண்டுகளுக்கு பழுது ஏற்படாமல் இருக்கும் வகையிலும் அமைக்கப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சாலை ஓரங்களில் மரங்களும் வளர்க்கப்படும். இத்திட்டத்தைச் செயல்படுத்தும் நிறுவனம் பணிகள் முடிந்து 5 ஆண்டுகள் அவற்றைச் செயல்படுத்தி- பராமரித்த பின்னரே மாநகராட்சி வசம் ஒப்படைக்கும்.

புதை சாக்கடைத் திட்டத்தைச் செயல்படுத்தி வரும் திருச்சி, மதுரை, திருநெல்வேலி, திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளும், தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, கரூர், இனாம்கரூர், ஆலந்தூர் மற்றும் வளரசவாக்கம் ஆகிய நகராட்சிகளும் இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மொத்தத்தில் ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சாலைகள் அனைத்தும் புவி தகவல் அமைப்பின் கீழ் கொண்டு வரப்படும். தெரு விளக்குகள், மழைநீர் வடிகால், நடைபாதைகள் அனைத்தும் ஒரே மாதிரியாக அமைக்கப்படும். இரு மருங்கிலும் சாலையை அகலப்படுத்தவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், தேவைக்கேற்ப மேம்பாலங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கலந்தறிதற்குரியவர் மூலம் முதல் 9 மாதங்கள் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு, அடுத்த 18 மாதங்களில் பணிகள் முடிக்கப்படும். மாநகராட்சி அளித்த விவரங்களின்படி, தற்போது 376 கிமீ சாலைகள் இத்திட்டத்தில் மேம்படுத்தப்படும்'' என்றார் காயத்ரி.

கூட்டத்தில் நகரப் பொறியாளர் எஸ். ராஜா முகம்மது, செயற்பொறியாளர் ஆர். சந்திரன், எஸ். அருணாசலம், கோட்டத் தலைவர்கள் எஸ். பாலமுருகன், ரெ. அறிவுடைநம்பி, ஜெரோம் ஆரோக்கியராஜ், . குமரேசன், தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதிச் சேவை நிறுவன ஆலோசகர் (சாலைகள்) டாக்டர் எம்.எஸ். ஸ்ரீனிவாசன், துணை மேலாளர் யு. விஜயராகவன், உதவி மேலாளர் ஆர். பிரதீப், தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் திட்ட பொறியாளர் எம். வைத்தீசுவரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Last Updated on Wednesday, 11 November 2009 09:30
 

திருச்சி மாநகராட்சி பகுதியில் 20 ஆண்டு க்கு சேதம் அடையாத ரோடுகள் ரூ.100 கோடி செலவில் அமைக்கப்படுகிறது

Print PDF

மாலை மலர் 10.11.2009

திருச்சி மாநகராட்சி பகுதியில் 20 ஆண்டு க்கு சேதம் அடையாத ரோடுகள் ரூ.100 கோடி செலவில் அமைக்கப்படுகிறது

திருச்சி, நவ.10-

திருச்சியில் பெய்த கனமழை காரணமாக சாலைகள் குண்டும் குழியுமாக மாறிவிட்டது. சமீபத்தில் போடப்பட்ட புதிய சாலைகள் கூட இந்த மழைக்கு தாங்க முடியாமல அரிப்பு ஏற்பட்டு உள்ளது. தரமில்லாமல் போடப்பட்ட இந்த சாலைகளினால் மக்கள் பணம் மழை நீரில் கரைந்து விட்டது.

இந்த நிலை வரும் காலங்களில் ஏற்படாமல் தடுக்க திருச்சி மாநகராட்சி பகுதியில் சர்வதேச தரத்தில் ரூ.100 கோடி செலவில் புதிதாக சாலைகள் போட திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று மாநகராட்சி மேயர் சுஜாதா தலைமையில் நடந்தது. கமிஷனர் பால்சாமி மற்றும் சாலைப்பணி ஆலோசகர் டாக்டர் சீனிவாசன், துணை மேலாளர் துரைரகுநாதன், மாநகராட்சி என்ஜினீயர் ராஜாமுகமது , நிர்வாக என்ஜினீயர் சந்திரன், அருணாசலம், கோட்ட தலைவர்கள் பாலமுருகன், குமரேசன், ஜெரோம் ஆரோக்கியராஜ், அறிவுடைநம்பி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு நகர்புற சாலை உள்கட்டமைப்பு துணை தலைவர் காயத்ரி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசிய தாவது:-

திருச்சி மாநகராட்சி பகுதியில் ரூ.100 கோடி செலவில் நவீன முறையில் சர்வதேச தரத்தில் புதிதாக சாலைகள் அமைக்கப்பட உள்ளது. இந்த சாலைகள் அதிக அகலத்தில் மண் சாலைகள் இல்லாத வகையில் என்டு டூ என்டு ரோடாக அமைக்கப்படும். மேலும் சாலை ஓரங்களில் நவீன நடைபாதைகள் ஒரே மாதிரியான தெருவிளக்குகள் அமைக் கப்படும். இந்த சாலையை அமைப்பவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு பராமரிக்க வேண்டும்.

மேலும் புதிய சாலை அமைக்கப்பட்ட பிறகு யாரும் எந்த பணிக்காகவும் சாலையை தோண்டாத அளவுக்கு ஏற்பாடு செய்யப்படும். சம்பந்தப்பட்டவர்கள் சாலை போடுவதற்கு முன்பே இதுபோன்ற பணிகளை முடித்து விடவும் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும்.

முதல் கட்டமாக பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்த பகுதியில் இந்த சாலைகள் போடப்படும். இந்த சாலைகள் 20 வருடம் உழைக்கும் வகையில் சிறந்த தரத்துடன் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 


Page 160 of 167