Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Finance

மதுரை மாநகராட்சிக்கு ரூ.100 கோடி சிறப்பு நிதி ஒதுக்க அரசுக்கு கோரிக்கை

Print PDF

தினமணி 22.07.2010

மதுரை மாநகராட்சிக்கு ரூ.100 கோடி சிறப்பு நிதி ஒதுக்க அரசுக்கு கோரிக்கை

மதுரை, ஜூலை 21: மதுரை மாநகராட்சியில் நிலவும் நிதிப் பற்றாக்குறையைப் போக்கவும், பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளவும் தமிழக அரசிடம் ரூ.100 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய, மாநகராட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிதிப் பற்றாக்குறையால் திணறும் மதுரை மாநகராட்சி என்ற செய்தி தினமணியில் ஜூலை 12-ல் வெளியானது. இதன் எதிரொலியாக, வளர்ச்சித் திட்டங்களுக்காக ரூ.100 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யுமாறு தமிழக அரசுக்கு மதுரை மாநகராட்சி சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. மேலும், மேயர் கோ.தேன்மொழி தலைமையிலான கவுன்சிலர் மற்றும் அதிகாரிகள் குழுவினர், தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரை விரைவில் சந்திக்கவுள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியது: பல்வேறு இனங்களில் கோடிக்கணக்கான ரூபாய் அளவில் வரிகள் நிலுவையில் உள்ளது. மாநகராட்சிக்கு கிடைக்கும் வருவாய் மூலம் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது. மாநகராட்சிப் பணியாளர்களுக்கு சம்பளம் மட்டுமே மாதம் ரூ.6 கோடி வரை கொடுக்க வேண்டியுள்ளது.

எனவே, முதல்வர் மற்றும் துணை முதல்வரை நேரில் சந்தித்து மதுரை மாநகராட்சிக்கு சிறப்பு நிதி கோர, மேயர் தலைமையிலான குழுவினர் விரைவில் சென்னை செல்லவுள்ளோம். இதற்கான தேதி விரைவில் கிடைக்கும் என நம்புகிறோம்.

மேலும், மாநகராட்சிக்கு உள்பட்ட பல இடங்களில் குறிப்பாக கோச்சடை லாரி புக்கிங் ஷெட்டில் 200 கடைகள் கட்டி வாடகைக்கு விடுவது, மீனாட்சி கோயில் பகுதியில் சென்ட்ரல் மார்க்கெட் இருந்த இடத்தில் நவீன பார்க்கிங் அமைப்பது உள்ளிட்ட

பல்வேறு திட்டங்கள் மூலமும் வருவாயைப் பெருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

 

கரூர் நகராட்சிக்கு இழப்பீடு தொகை ரூ.3.87 கோடி மின்வாரியம் பாக்கி

Print PDF

தினகரன் 30.06.2010

கரூர் நகராட்சிக்கு இழப்பீடு தொகை ரூ.3.87 கோடி மின்வாரியம் பாக்கி

கரூர், ஜூன் 30: கரூர் நகராட்சிக்கு, மின்சார வாரியம் இழப்பீட்டுத் தொகை ரூ.3 கோடியே 87 லட்சம் வழங்கவேண்டிய விவர பட்டியல் நகர்மன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. தமிழகத்தில் 16 ஆண்டுகளுக்கு முன் உள்ளாட்சி அமைப்பிடம் மின் விநியோகம் இருந்தது. 1994ம் ஆண்டு இவை தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

கரூர் நகராட்சி வசம் இருந்த மின் விநியோகம் 1994ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி மின்வாரியத்தால் எடுத்து கொள்ளப்பட்டது. மின் விநியோகத்தை கையகப்படுத்தும் போது உள்ளாட்சி அமைப்பிற்கு இழப்பீட்டு தொகை கணக்கிட்டு வழங்கப்பட வேண்டும். கரூர் நகராட்சி ஏ என்ற நிலையை அடிப்படையாக கொண்டு இழப்பீடு தொகை பெற முடிவு செய்துள்ளது.

மின்வாரியம் விநியோகத்தை எடுத்து கொண்டபோது நஷ்டஈடு சரியாக கணக்கிடப்படாததால் சரி செய்ய 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அறிக்கை அடிப்படையில் இறுதி முடிவு எடுக்க அரசு முடிவு செய்தது.

கடந்த மே 31ம் தேதி சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனரகத்தில் நடந்த உயர்நிலை குழு கூட்டத்தில் கரூர் நகராட்சிக்கு, மின்வாரியம் வழங்க வேண்டிய ஈட்டுத்தொகை விவரப் பட்டியல் நேற்று நடந்த கரூர் நகராட்சி கூட்டத்தில் மன்ற பார்வைக்கு வைக்கப்பட்டது.

கரூர் நகராட்சிக்கு, மின்சார வாரியம் வழங்கவேண்டிய அசல் தொகை ரூ.1,83,80,396. கடந்த 1.10.1995 முதல் 31.03.2010 வரை வட்டி ரூ.1 கோடியே 1 லட்சத்து 86 ஆயிரத்து 159, கரூர் நகராட்சி கணக்கில் இருந்து பிடித்தம் செய்த தொகை ரூ.1,56,58,109. நகராட்சி நிலுவை மின் கட்டணத்திற்கு வட்டி மற்றும் அபராத வட்டி ரூ.84,56,134. கடந்த 30.04.1995க்கு பிறகு மின் வாரியம் வசூல் செய்த நகராட்சிக்கு வரவேண்டிய மின் கட்டணம். ரூ.81,15,145. நகராட்சி கட்டடத்தை பயன்படுத்திய வாடகை அசல் ரூ.20,65,500. நகராட்சிக்கு வரவேண்டிய அசல், வட்டி ரூ.6 கோடியே 28 லட்சத்து 61 ஆயிரத்து 443.

கரூர் நகராட்சி, மின்வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின்கட்டணம் ரூ.2 கோடியே 41 லட்சத்து 54 ஆயிரத்து 248. இதுபோக, கரூர் நகராட்சிக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் வழங்கவேண்டிய தொகை ரூ.3,87,7195 என விவரம் தெரிவிக்கப்படுள்ளது.

 

மதுரை மாநகராட்சி நிதிப் பற்றாக்குறையைப் போக்க முதல்வர், துணை முதல்வரிடம் மேயர் முறையிட வலியுறுத்தல்

Print PDF

தினமணி 30.06.2010

மதுரை மாநகராட்சி நிதிப் பற்றாக்குறையைப் போக்க முதல்வர், துணை முதல்வரிடம் மேயர் முறையிட வலியுறுத்தல்

மதுரை, ஜூன் 29: மதுரை மாநகராட்சியின் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க தமிழக முதல்வர், துணை முதல்வரை நேரில் சந்தித்து முறையிட மேயர் நடவடிக்கை

எடுக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் கணேசன் வலியுறுத்தினார்.

மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், கவுன்சிலர் கணேசன் பேசியது:

மாநகராட்சி நிதிப் பற்றாக்குறையால் ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்க முடியவில்லை. ஓய்வூதியர்களுக்கும் பணிக்கொடை வழங்கவில்லை. வாரிசுதாரர்களுக்கான பணி நியமனமும் மேற்கொள்ளவில்லை.

சென்னை மற்றும் கோவை மாநகராட்சி மேயர்கள் இதுபோன்ற சூழ்நிலையில் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு..ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்து முறையிட்டு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யக் கோருகின்றனர். பல முறை சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சென்னை, கோவை மாநகராட்சிப் பகுதிகளில் பணிகள் நடைபெற்று வருவதை நாம் செய்திகள் மூலம் அறிகிறோம்.

ஆனால், முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் சேர்ந்து மதுரை வந்திருந்தபோதும், அவர்கள் அருகருகே அமர்ந்திருந்தபோதும் அவர்களை மேயரோ, கமிஷனரோ சந்தித்து நிதிநிலை குறித்துத் தெரிவிப்பதில்லை. துணை முதல்வரை சந்தித்தால் இங்கிருக்கும் மத்திய அமைச்சர் மு..அழகிரி கோபித்துக்கொள்வாரோ என்ற பயத்தால்தான் இவர்கள் மு..ஸ்டாலினை சந்திப்பதில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் வெள்ளப்பெருக்கு நேரத்தில் மதுரை மாநகராட்சிக்கு கோரப்பட்ட ரூ.74 கோடி சிறப்பு நிதி இன்னும் கிடைத்தபாடில்லை என்றார்.

இதற்கு மேயர் கோ.தேன்மொழி, விரைவில் எனது தலைமையில் சிறப்புக் குழுவினர் முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

கமிஷனர் எஸ்.செபாஸ்டின் பேசுகையில், பல நேரங்களில் நாங்கள் நிதி அவசர நேரங்களில் நிதி கோரி அணுகியுள்ளோம். தற்போது சுற்றுலா மேம்பாட்டுக்காக தமிழக அரசு ரூ.25 கோடி மதுரை மாநகராட்சிக்கு ஒதுக்கீடு செய்துள்ளது என்றார்.

காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்ப நடவடிக்கை: கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் சுப்புராம் கேள்விக்கு கமிஷனர் எஸ். செபாஸ்டின் பதில் அளிக்கையில், மதுரையில் உலகத் தரத்திலான சாலை வசதி மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாநகராட்சியில் ஓய்வுபெற்ற ஊழியர்கள் 366 பேருக்கு ஓய்வுகால பணிக்கொடை உள்ளிட்டவை வழங்க வேண்டியுள்ளது. மொத்தம் உள்ள இவர்களில் 30 சதவிகிதம் ஊழியர்களுக்கு இன்னும் பணிக்கொடை வழங்க வேண்டியுள்ளது. ஜூலை மாதத்துக்குள் அனைவருக்கும் பணிக்கொடை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், மாநகராட்சியில் மொத்தம் 260 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளது. இந்தப் பணியிடங்களையும் இன்னும் ஒரு மாதத்துக்குள் நிரப்ப அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

கூட்டத்தில் கிழக்கு மண்டலத் தலைவர் வி.கே. குருசாமி பேசுகையில், கிழக்கு மண்டலத்துக்கு உள்பட்ட பல அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வரி விதிப்பில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இதனால் ஒரு கோடியே 18 லட்சத்து 7 ஆயிரம் வரை நிதியிழப்பு ஏற்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.

ஜூலை 18-க்குள் சென்ட்ரல் மார்க்கெட் செயல்படும்:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் கணேசன் கேள்விக்கு கமிஷனர் செபாஸ்டின் பதில் அளிக்கையில், மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகே திறக்கப்பட்ட சென்ட்ரல் காய்கறி மார்க்கெட்டில் கடைகள் ஒதுக்குவது தொடர்பாகப் பகுதி பகுதியாக ஏலம் விடப்பட்டு வருகிறது. ஜூலை 18-ம் தேதிக்குள் மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் செயல்பட்டு வரும் கடைகள் மாற்றப்பட்டு புதிய சென்ட்ரல் காய்கறி மார்க்கெட் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 


Page 20 of 37