Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Finance

ரூ3.16 கோடி கோருகிறது அறந்தாங்கி நகராட்சி

Print PDF

தினமணி 31.08.2010

ரூ3.16 கோடி கோருகிறது அறந்தாங்கி நகராட்சி

அறந்தாங்கி, அக். 30: அறந்தாங்கி நகரில் பழுதடைந்துள்ள சாலைகளைப் புதுப்பிக்க சிறப்புச் சாலைகள் திட்டத்தின் கீழ் |ரூ 3.16 கோடி வழங்கக் கோரி அறந்தாங்கி நகர்மன்றம் திங்கள்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது. அறந்தாங்கி நகர்மன்றத்தின் அவசரக் கூட்டம் நகர்மன்றத் தலைவர் பழ. மாரியப்பன் தலைமையில் நடைபெற்றது.

ஆணையர் பா. அசோக்குமார், பொறியாளர் தங்கபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில்,நகராட்சி நிர்வாக இயக்குநரகம் கேட்டுள்ளபடி, இயற்கை இடர்பாடுகள் மற்றும் குடிநீர்த் திட்டங்களினால் பழுதடைந்துள்ள சாலைகளில் முன்னுரிமை அடிப்படையில் 27 வட்டங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 கி.மீ. நீள சாலைகளைப் புதுப்பிக்க ரூ| 3.16 கோடி திட்ட மதிப்பீட்டிற்கு ஒதுக்கீடு செய்து நகர்மன்றம் தீர்மானம் நிறைவேற்றியது.

முன்னதாக தீர்மானம்பற்றி பேசிய உறுப்பினர்கள் லெ. முரளிதரன், கோ. இளங்கோ, மு.வீ. பார்த்திபன், வி.ஆர்.எஸ். சுப்பிரமணியன் உள்ளிட்ட உறுப்பினர்கள் தங்கள் வட்டங்களில் சாலைப் பணிகளை முடிவு செய்தபோது, தங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று புகார் தெரிவித்தனர்.

இதுபற்றி நகர்மன்றத் தலைவர் பழ. மாரியப்பன் கூறுகையில், ""மன்றத்தின் அனுமதிக் கடிதம் கொடுக்க வேண்டிய கால அவகாசம் குறைவாக இருந்த காரணத்தாலேயே தகவல் தெரிவிக்க முடியவில்லை என்றும் திட்டத்தில் வேறு சாலைகளை மாற்றி சேர்த்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

 

குடிநீர்த் தட்டுப்பாடு: மாற்றுத் திட்டங்களால் வீணாகும் நகராட்சி நிதி

Print PDF

தினமணி 30.08.2010

குடிநீர்த் தட்டுப்பாடு: மாற்றுத் திட்டங்களால் வீணாகும் நகராட்சி நிதி

தேனி, ஆக. 29: தேனியில் குடியிருப்புப் பகுதிகளின் விரிவாக்கம், அதிகரித்து வரும் மக்கள் தொகை ஆகியவற்றிற்கு ஏற்ப குடிநீர்த் திட்டங்களை மேம்படுத்தவும், புதிய குடிநீர் திட்டத்தை உருவாக்கவும் நகராட்சி நிர்வாகம் காலதாமதம் செய்வதால் நகராட்சி நிதி வீணாகி வருகிறது.

நகராட்சிப் பகுதிகளுக்கு பழனிசெட்டிபட்டி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், அரப்படித்தேவன்பட்டி குடிநீர் திட்ட உறை கிணறுகள், வீரப்ப அய்யனார் கோயில் குடிநீர் திட்டம் ஆகியவற்றில் இருந்து குடிநீர் பம்பிங் செய்து மேல்நிலைத் தொட்டிகள் மற்றும் தரைமட்டத் தொட்டிகள் மூலம் குழாய்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

இதில் அரப்படித்தேவன்பட்டி வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகள் மூலம் பம்பிங் செய்யப்படும் குடிநீர் என்.ஆர்.டி. நகர் மேல்நிலைத் தொட்டி, தரைமட்டத் தொட்டி ஆகியவற்றில் சேகரிக்கப்பட்டு 13-க்கும் மேற்பட்ட வார்டுகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

அரப்படித்தேவன்பட்டி குடிநீர் திட்ட உறை கிணறுகளில் ஆற்றில் நீர்வரத்து அதிகம் உள்ள போதும், ஆறு வறண்டுள்ள காலங்களிலும் குடிநீர் பம்பிங் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் கோடை, மழைக் காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

மேலும் தற்போதுள்ள குடிநீர் திட்டங்கள் நகர் குடியிருப்பு விரிவாக்கப் பகுதிகளுக்கும், அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கும் ஏற்றதாக இல்லை. இதனால் தேனி நகருக்குப் புதிய குடிநீர் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், தேனியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்போது 15 நாள்களுக்கு ஒருமுறை குழாய்களில் குடிநீர் விநியோகம் செய்தும், வாடகை டேங்கர்கள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கியும் நிலைமையை நகராட்சி நிர்வாகம் சமாளித்து வருகிறது.

அரப்படித்தேவன்பட்டி குடிநீர் திட்ட உறை கிணறுகள், பிரதானக் குழாய், மோட்டார் பம்பு ஆகியவற்றை தாற்காலிகமாக சீரமைக்க ஆண்டுதோறும் நகராட்சி பல லட்சம் ரூபாய் செலவு செய்வதாக நகராட்சிக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.மேலும், பழனிசெட்டிபட்டி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீர் மட்டுமே சுத்திகரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. வீரப்ப அய்யனார் கோயில் குடிநீர் திட்டம், அரப்படித்தேவன்பட்டி குடிநீர் திட்ட உறை கிணறுகள் ஆகியவை மூலம் பம்பிங் செய்யப்படும் தண்ணீர் சுத்திகரிக்கப்படாமல், மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் குளோரினேசன் செய்து குழாய்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால், மழைக் காலங்களில் குடிநீர் மாசு கலந்து வருவதாக நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந் நிலையில், லோயர்கேம்ப் பகுதியில் பெரியாற்றில் இருந்து தேனிக்கு குடிநீர் கொண்டுவரும் புதிய திட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் பல மாதங்களுக்கு முன்பு தீர்மானம் நிறைவேற்றியது.ஆனால், நகரின் குடிநீர் தட்டுப்பாட்டை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, புதிய திட்டத்திற்கான அனுமதி பெறுவதில் நகராட்சி நிர்வாகம் ஆர்வம் காட்டவில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

இது குறித்து நகராட்சி அலுவலர்களிடம் கேட்டதற்கு, லோயர்கேம்ப் பெரியாற்றில் இருந்து குடிநீர் கொண்டுவரத் திட்ட மதிப்பீடு செய்யும் பணி நடைபெறுகிறது என்று தெரிவித்தனர்.இதற்கிடையில், குன்னூர் வைகை ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள அரப்படித்தேவன்பட்டி குடிநீர் திட்டப் பிரதான குழாயை, நெடுஞ்சாலைத் துறை பாலத்தையொட்டி இரும்பு கர்டர்கள் அமைத்து, அதன்மேல் கொண்டு செல்வதற்காக நகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத் திட்டங்கள் என்ற பெயரில் ஆண்டுதோறும் பொது நிதியை வீணாக்கி வருவதைத் தவிர்த்து, குடிநீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாண புதிய திட்டத்திற்கு அனுமதி பெற்று பணிகளைத் துவக்க நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

 

ரூ1.46 கோடியை 6 மாதங்களாக பயன்படுத்தாத கடலூர் நகராட்சி

Print PDF

தினமணி 24.08.2010

ரூ1.46 கோடியை 6 மாதங்களாக பயன்படுத்தாத கடலூர் நகராட்சி

கடலூர் ஆக. 23: கடலூரில் மீன் அங்காடிகள் கட்ட மத்திய அரசு வழங்கிய |ரூ 1.46 கோடியை, நகராட்சி பயன்படுத்தாததால், நகர மக்கள் சுகாதாரமற்ற மீன் அங்காடிகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

÷"கடலூர் நகரில் மீனங்காடிகள் மிகவும் சுகாதாரக் கேடான நிலையில் உள்ளன. இவற்றை மேம்படுத்த வேண்டும்' என்று தமிழ்நாடு மீனவர் பேரவை மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தது. இக் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு 6 மாதங்களுக்கு முன் ரூ| 1.46 கோடி ஒதுக்கியது.

÷இதில் இருந்து கடலூர் திருப்பாப்புலியூர் பான்பரி மார்க்கெட் மீன் அங்காடிக்கு | ரூ82 லட்சம், மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட் மீன் அங்காடிக்கு ரூ| 24 லட்சம், தேவனாம்பட்டினம் மீன் அங்காடிக்கு | ரூ40 லட்சம் ஒதுக்கப்பட்டது.

÷மீன் அங்காடிகள் எவ்வாறு அமைய வேண்டும் என்ற வரைபடங்களும் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் 50 சதவீத நிதி, ஏற்கெனவே விடுவிக்கப்பட்டு கடலூரில் உள்ள ஒரு வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதாகவும், மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் திங்கள்கிழமை தெரிவித்தார்.

÷இந்நிலையில் கடலூர் பான்பரி மார்க்கெட்டில் |ரூ 15 லட்சத்தில் மீன் அங்காடி ஒன்று கட்டப்பட்டு 2 ஆண்டுகளாகப் பயன்படுத்தாமல் உள்ளது. 30 வியாபாரிகள் பயன்படுத்தும் வகையில், நகராட்சியால் இந்த அங்காடி கட்டப்பட்டது. ஆனால் 60-க்கும் மேற்பட்ட மீன் வியாபாரிகள் இங்கு இருப்பதால், இதில் யாருக்கு இடம் அளிப்பது என்ற பிரச்னை எழுந்தது. பிரச்னையை நகராட்சி தீர்த்து வைக்க முன் வராததால் |ரூ 15 லட்சம் செலவிட்டும் பயனில்லை.

÷இதனால் பான்பரி மார்க்கெட் மீன் அங்காடி கூரைக் கொட்டகையில், முற்றிலும் சுகாதாரக் கேடான நிலையில் இயங்கி வருகிறது. இதுகுறித்து மக்கள் பிரதிநிதிகளோ, நகராட்சி நிர்வாகமோ கவலைப்படவில்லை. மக்களும் மெüனம் சாதிக்கிறார்கள்.

÷இந்நிலையில் 3 நாள்களாப் பெய்துவரும் அடை மழையால், பான்பரி மார்க்கெட் மீன் அங்காடி கூரைக் கொட்டகை திங்கள்கிழமை மிகவும் ஒழுகத் தொடங்கியது. ஆத்திரம் அடைந்த மீன் விற்கும் பெண்கள், மீனவர் பேரவை மாவட்டத் தலைவர் சுப்புராயன் தலைமையில், நகராட்சி அலுவலகத்தில் முறையிட்டனர்.

÷இதுகுறித்து நகராட்சித் தலைவர் து.தங்கராசு கூறுகையில், நகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட முயற்சியால், மத்திய அரசின் மீனவர்நல நிதியிலிருந்து, ரூ| 1.46 கோடி பெறப்பட்டு உள்ளது. திட்டத்துக்கான பணம் கிடைத்து விட்டது. நகராட்சிகளின் இயக்குநர் அலுவலகம் இறுதி ஒப்புதல் அளிக்க வேண்டியுள்ளது. செப்டம்பர் 4-ம் தேதி வரச்சொல்லி இருக்கிறார்கள். எனவே செப்டம்பர் இறுதிக்குள் மீன் அங்காடிகளுக்கு டெண்டர் விடப்படும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.

 


Page 15 of 37