Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Finance

பரமக்குடி நகராட்சியில் சாலைப் பணிகளுக்கு ரூ. 3 கோடி ஒதுக்கீடு: நகராட்சித் தலைவர்

Print PDF

தினமணி 19.10.2010

பரமக்குடி நகராட்சியில் சாலைப் பணிகளுக்கு ரூ. 3 கோடி ஒதுக்கீடு: நகராட்சித் தலைவர்

பரமக்குடி, அக். 18: பரமக்குடி நகராட்சிப் பகுதிகளில் சாலைப் பணிகளுக்காக ரூ. 3 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என நகர்மன்றத் தலைவர் எம்.கீர்த்திகா நகர்மன்றக் கூட்டத்தில் தெரிவித்தார். இக்கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் எம். கீர்த்திகா தலைமை வகித்தார். துணைத் தலைவர் கே.கே.பாபுஜி முன்னிலை வகித்தார். ஆணையர் கே.அட்ஷயா வரவேற்றார்.

 

பயணிகள் நிழற்குடை ரூ2 கோடி வருவாய்

Print PDF

தினகரன் 18.10.2010

பயணிகள் நிழற்குடை ரூ2 கோடி வருவாய்

கோவை, அக்.18:கோவையில் புதிய நிழற்குடையால் 2 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி கமிஷனர் அன்சுல்மிஸ்ரா கூறியதாவது;

கோவை மாநகரில் உலக தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு நகர்ப்பகுதியில் 259 பஸ் ஸ்டாப் நிழற்குடை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தனியார், பொதுமக்கள் பங்களிப்புடன் புதிய வடிவமைப்பில் நிழற்குடை அமைக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் ரோடு உள்ளிட்ட சில இடத்தில் நிழற்குடை சரியாக இல்லை என தெரிவிக்கப்பட்டது. வெயில் பாதிப்பு தொடர்பாக எவ்வித புகாரும் வர வில்லை. ஆனால் மழை நீர் வருவதாக புகார் வந்தது. இந்த நிழற்குடைகளில் மழை நீர் தடுப்பு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தனியார், பொதுமக்கள் பங்களிப்புடன் நிழற்குடைகள் அமைக்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் நிழற்குடை அமைக்கும் பணி முடியவில்லை. விரைவில் பணி முடிந்து விடும். நிழற்குடை அமைக்கும் பணிக்கு மாநகராட்சி நிர்வாகம் எந்த செலவும் செய்யவில்லை. தனியார் நிறுவனங்கள், தங்கள் விளம்பரங்களை குறிப்பிட்ட அளவிற்கு வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உரிய விதிமுறைப்படி தான் இந்த விளம்பரம் வைக்க அனுமதி தரப்பட்டிருக்கிறது. நிழற்குடை வடிவமைப்பை மாற்ற மாநகராட்சி நிர்வாகம் எந்த செலவும் செய்யவேண்டியதில்லை. நிழற்குடை அமைப்பதன் மூலமாக மாநகராட்சிக்கு தனியார் நிறுவனம் மூலம் ஆண்டிற்கு 2 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். அவிநாசி, திருச்சி ரோட்டில் செம்மொழி மாநாட்டின் போது அமைக்கப்பட்ட மின் விளக்குகள் சிறப்பாக இருக்கிறது. இதில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது. நடைபாதை அமைக்கப்பட்ட பகுதியில் சுமார் 10 மீட்டர் இடைவெளியில் விளம்பரம் வைக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அன்சுல்மிஸ்ரா கூறினார்.

 

மாநகராட்சி அறிவிப்பு 220 பார்க்கிங் பகுதிகளை குத்தகைக்கு விட முடிவு

Print PDF

தினகரன் 22.09.2010

மாநகராட்சி அறிவிப்பு 220 பார்க்கிங் பகுதிகளை குத்தகைக்கு விட முடிவு

புதுடெல்லி, செப். 22: நகரில் 220 வாகன பார்க்கிங் பகுதிகளை குத்தகைக்கு விட மாநகராட்சி முடிவு செய்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் அக்டோபர் 7ம் தேதிக்குள் டெண்டர்களை அனுப்பலாம் என்று அறிவித்துள்ளது.

டெல்லி மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள வாகன பார்க்கிங் பகுதிகளை மறு ஏலம் விட மாநகராட்சி முடிவு செய்தது. உரிமக் காலம் முடிந்தது, உரிமம் பெற்றவர்கள் தொட ர்ந்து நடத்தாமல் திரும்ப ஒப்படைத்தது, முறைகேடுகளால் உரிமம் ரத்து செய்யப்பட்டது என 245 பார்க்கிங்குகள் மறு ஏலத்துக்கு அடையாளம் காணப்பட்டன.

இதில், 25 பார்க்கிங் பகுதிகள் முன்னாள் ராணுவத்தினருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பதால், எஞ்சிய 220 பார்க்கிங்குகளுக்கு ஏலம் விட மாநகராட்சி முடிவு செய்து, பொது அறிவிப்பை வெளியிட்டது.

இதுபற்றி மாநகராட்சியின் வருவாய்த் திட்டப் பிரிவின் தலைவர் அமியா சந்திரா கூறியதாவது:

220 வாகன பார்க்கிங் பகுதிகளை 2 வருட காலத்துக்கு ஏற்று நடத்த உரிமம் வழங்கப்படவுள்ளது. பார்க்கிங் பகுதிகளின் உரிமம் பெற விரும்புபவர்களிடம் இருந்து டெண்டர்கள் வரவேற்கப்படுகின்றன. டெண்டர்களை அனுப்ப கடைசி நாள் அக்டோபர் 7ம் தேதியாகும். அன்றைய தினமே டெண்டர்கள் பிரிக்கப்படும்.

220ல் 40 பார்க்கிங் பகுதிகளுக்கான மறு ஏலப் பணிகள் நடந்து வருகின்றன. எஞ்சிய 180 பார்க்கிங்குகளில் 80 பொதுப்பணித் துறையின் சாலைகளில் அமைந்துள்ளன. அவைகளுக்கு அரசு ஏற்கனவே ஒப்புதல் வழங்கியுள்ளன. எஞ்சிய 100 பார்க்கிங் பகுதிகளுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை.

மாநகராட்சியின் வருவாயைப் பெருக்கவும், போக்குவரத்து பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் அந்த 100 இடங்களையும் முறைப்படுத்த முயற்சித்து வருகின்றோம். இந்த விவகாரத்தை போக்குவரத்து போலீசின் உயரதிகாரிகள் கவனத்துக்கொண்டு சென்று, புதிய வழிமுறைகளை வகுக்கும்படி கேட்டிருக்கிறோம். சில பார்க்கிங் பகுதிகளுக்கு போக்குவரத்து போலீஸ் சான்றிதழ் வழங்கிவிட்டது.

ஒப்புதல் சான்றிதழ் கிடைக்காத பார்க்கிங் பகுதிகளுக்காக வரப்பெற்ற டெண்டர்கள் ரத்து செய்யப்படும். இவ்வாறு அமியா சந்திரா கூறினார்.

7ம் தேதி டெண்டர்கள் பிரிக்கப்படும்பட்சத்தில், காமன்வெல்த் போட்டிகளுக்குப்பிறகு புதிய உரிமதாரர்கள் பார்க்கிங் பகுதிகளை ஏற்று நடத்துவார்கள் என்று தெரிகிறது.

 


Page 14 of 37