தினமணி 25.02.2010
மாநகராட்சி பட்ஜெட்: அனைத்துக் கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்
சென்னை, பிப். 24: வரும் நிதியாண்டுக்கான (2010}2011) மாநகராட்சி பட்ஜெட் தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
வரும் நிதியாண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட் கூட்டம், மார்ச் 15}ம் தேதி தொடங்குகிறது. இதுதொடர்பான அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் மேயர் மா. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
மாநகராட்சி சார்பில் கலைக் கல்லூரி கட்டப்பட வேண்டும், கொசுத் தொல்லையை முழு அளவில் ஒழிக்க அதிக அளவில் கொசு ஒழிப்பு இயந்திரங்கள் வாங்கப்பட வேண்டும். மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் சிறப்பான முறையில் மேம்படுத்தப்பட வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை, அனைத்துக் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.
மேலும் மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பென்சில், பேனா ஆகியவற்றுடன் கூடிய ஜாமென்ட்ரி பாக்ஸ் இலவசமாக வழங்கப்பட வேண்டும். சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ, மாணவிகள் கைகளை சுகாதாரமாக பராமரிக்க சோப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.