Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Financial Management

வேலூர் மாநகராட்சி பட்ஜெட் நாளை தாக்கல்

Print PDF
தினத்தந்தி        09.04.2013

வேலூர் மாநகராட்சி பட்ஜெட் நாளை தாக்கல்


வேலூர் மாநகராட்சிக்கான பட்ஜெட்டை (புதன்கிழமை) நடக்கும் கூட்டத்தில், மேயர் கார்த்தியாயினி தாக்கல் செய்கிறார்.

பட்ஜெட

வேலூர் மாநகராட்சிக்கு சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், கடைவாடகை, தரை வாடகை என்று பல்வேறு இனங்கள் மூலம் வருவாய் கிடைக்கிறது. அந்த வருவாயின் மூலம் வேலூர் மக்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மாநகராட்சிக்கு கிடைக்கும் வருவாய் எவ்வளவு, திட்டமிடப்பட்டுள்ள செலவு எவ்வளவு, முடிவில் நிதி தன்னிறைவு பெற்றுள்ளதா? அல்லது பற்றாக்குறையாக உள்ளதா? பற்றாக்குறையை ஈடுகட்ட என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையெல்லாம் கவுன்சிலர்களும், பொதுமக்களும் வெளிப்படையாக தெரிந்து கொள்ளும் வகையில் ஆண்டு தோறும் பட்ஜெட் வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பட்ஜெட் இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது.

மேயர் தாக்கல்

இன்று காலை 11 மணிக்கு மாநகராட்சியின் அவசர கூட்டம் மேயர் கார்த்தியாயினி தலைமையில் நடைபெறுகிறது. கமிஷனர் ஜானகி, துணை மேயர் தருமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். கூட்டத்தில் மேயர் கார்த்தியாயினி கலந்து கொண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுகிறார்.

கூடுதல் வரி விதிப்பு

கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வரவு ரூ.124 கோடியே 96 லட்சம் ஆகவும், செலவு ரூ125 கோடியே 84 லட்சம் ஆகவும் இருந்தது. பற்றாக்குறை ரூ.88 லட்சம் என தாக்கல் செய்யப்பட்டது. அந்த பற்றாக்குறையை தொழில் வரி, மனைப்பிரிவுகளில் காலி மனை வரிவிதிப்பு செய்வதின் மூலமும் மற்றும் அரசிடம் இருந்து பெறப்படும் நிதி உதவி மூலமும் சீர் செய்யப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.

ஆனால் இந்த ஆண்டு மாநகராட்சிக்கு பல்வேறு வகைகளில் அரசின் நிதி உதவி கிடைக்க இருப்பதாலும், நிலுவை வரி பாக்கியை வசூல் செய்யும் பணி திருப்தியாக இருப்பதாலும், இதுவரை வரி விதிக்கப்படாத கட்டிடங்கள் மற்றும் இதர இனங்களுக்கு புதிதாக வரிவிதிக்கப்பட உள்ளதாலும் பற்றாக்குறை பட்ஜெட்டாக இருக்காது என்றும், வேலூர் மக்களுக்கு சுமை தராத பட்ஜெட்டாக இருக்கும் என்றும் அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

குடிநீர் பிரச்சினை


கோடை காலம் நடைபெற்று வருவதால், வேலூர் மாநகராட்சி பகுதியில் குடிநீர் பிரச்சினை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் லாரி, டிராக்டர் போன்ற வாகனங்களில் குடிநீர் சப்ளை செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. அது பற்றி கமிஷனர் ஜானகியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–

வாகனங்களில் குடிநீர் சப்ளை செய்யும் பணி நிறுத்தப்படவில்லை. ஒப்பந்த காலம் முடிந்து விட்டதால் நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் வருகிற 16–ந் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. அதே சமயம் அவசர, அத்தியாவசியம் கருதி ஏற்கனவே செய்யப்பட்ட பழைய ஒப்பந்த அடிப்படையில் வாகனங்கள் மூலம் குடிநீர் சப்ளை செய்ய ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்று வேலூர் மாநகராட்சியில் அடங்கிய 4 மண்டல அலுவலகங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் குடிநீர் பிரச்சினை உள்பட இதர தேவைகளுக்கும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அது போல அரசிடமும் நிதி உதவி கேட்கப்பட்டுள்ளது. அது பற்றியெல்லாம் இன்று வெளியிடப்படும் பட்ஜெட்டில் தெரியவரும். இவ்வாறு கமிஷனர் கூறினார்.
 

கோபி நகராட்சியில் ரூ. 13.13 கோடிக்கு பட்ஜெட் தாக்கல்

Print PDF
தினமணி         31.03.2013

கோபி நகராட்சியில் ரூ. 13.13 கோடிக்கு பட்ஜெட் தாக்கல்

Save
கோபி நகராட்சியில், 2013-14ம் ஆண்டுக்கு, ரூ. 59.90 லட்சம் உபரியாக உள்ள வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

கோபி நகராட்சிக் கூட்டம் தலைவி ரேவதிதேவி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கோபி நகராட்சியின் 2013-14ம் ஆண்டுக்கான உத்தேச வரவு, செலவு திட்ட மதிப்பீடு விவரம் வெளியிடப்பட்டது.

உத்தேச வரவு பட்டியல்: சொத்து வரி, நிலையான வருவாய், மாநில நிதிக்குழு, சேவை மற்றும் கட்டண வருவாய், மானியம் மற்றும் பங்குத்தொகை என வருவாய் நிதிக் கணக்கில், ரூ. 9 கோடியே 36 லட்சத்து 55 ஆயிரம், குடிநீர் நிதி கணக்கு, ரூ. 2 கோடியே 93 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய், ஆரம்பக் கல்வி நிதி கணக்கில் ரூ. 82 லட்சத்து 90 ஆயிரம் என, மொத்தம் ரூ. 13 கோடியே 12 லட்சத்து 80 ஆயிரம் வரவாகக் காண்பிக்கப்பட்டுள்ளது.

உத்தேச செலவு பட்டியல்: பணியாளர் செலவு, ஓய்வூதியப் பயன்கள், இயக்குதல் செலவு, பழுது பார்ப்பு மற்றும் பராமரிப்பு, திட்டச் செலவுகள், நிர்வாகச் செலவுகள், தேய்மானச் செலவில், வருவாய் நிதி கணக்கில் ரூ. 9 கோடியே 69 லட்சத்து 35 ஆயிரம், குடிநீர் நிதி கணக்கில் ரூ. 2 கோடியே 56 லட்சத்து 35 ஆயிரம், ஆரம்பக் கல்வி நிதி கணக்கில் ரூ. 27 லட்சத்து 20 ஆயிரம் செலவாகக் காண்பிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில், ரூ. 13 கோடியே, 12 லட்சத்து 80 ஆயிரம் வரவாகவும், ரூ. 12 கோடியே 52 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் உத்தேசச் செலவாகவும் காண்பிக்கப்பட்டுள்ளன. ரூ. 59 லட்சத்து 90 ஆயிரம் உபரியாகக் காண்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உபரித் தொகை நகரின் வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கோபி நகராட்சி எல்லையை விரிவுபடுத்த அரசு உத்தரவு வரவில்லை; வந்தவுடன் கோபி நகராட்சி எல்லைகள் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றார் நகர்மன்றத் தலைவர் ரேவதிதேவி.
 

பல்லடம் நகராட்சியில் ரூ.12.71 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் உபரி வருவாய் ரூ.2.6 கோடி

Print PDF
தினகரன்        30.03.2013

பல்லடம் நகராட்சியில் ரூ.12.71 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் உபரி வருவாய் ரூ.2.6 கோடி


பல்லடம்: பல்லடம் நகராட்சியின் சாதாரணக்கூட்டம் நகராட்சி மன்ற கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சித்தலைவர் சேகர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் துணைத்தலைவர் பழனிச்சாமி,ஆணையாளர் சாந்தகுமார் மற்றும் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

சித்ராதேவி (அ.தி.மு.க.)நகராட்சிப்பகுதிகளில் பல இடங்களில் புதிதாக பெயர்பலகை வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் எனது வார்டுக்குட்பட்ட சேடபாளையம் பகுதியில் பெயர்ப்பலகை வைக்கப்படவில்லை.  தலைவர்  திட்டப்பணிகள் செய்யப்பட்ட சாலைகளுக்கு மட்டுமே பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் வைக்கப்படவில்லை. பெயர்ப்பலகை வைக்காததால் சேடபாளையம் எங்கு இருக்கிறது என்றே பலருக்கு தெரியவில்லை. அப்படியிருக்கும்போது எனது வார்டுக்குத்தான் முதல் உரிமை கொடுத்திருக்கவேண்டும் .
தலைவர்:அடுத்த கூட்டம் நடப்பதற்கு முன்பு கண்டிப்பாக வைக்கப்படும்.

சித்திக்(தி.மு.க) நகராட்சி 18 வார்டுகளிலும் நல்ல குடிநீர் பிரச்னை நிலவுகிறது. உடனடியாக சரிசெய்யவேண்டும். என்.ஜி. ஆர் ரோடு அகலப்படுத்தியும் வாகனங்கள் தன் இஷ்டம் போல் நிறுத்தி வைக்கப்படுவதால் நெரிசலாக உள்ளது.

ஒழுங்குபடுத்தவேண்டும். நகராட்சி குப்பைகளை கிணறுகளில் கொட்டிவருகிறோம். இது நிரந்தர தீர்வு இல்லை. நிரந்தர தீர்விற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தலைவர் சேகர்:  விரைவில் தீர்வு காணப்படும்.

பேபி(ம.தி.மு.க): பி.டி.ஓ.காலனியில் உள்ள டிரான்ஸ்பார்மரை மாற்றித்தரவேண்டும் அதுபோல் மங்கலம் ரோட்டில் சாக்கடை கால்வாயில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு,தேங்கி நிற்கிறது நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

பின்னர் பல்லடம் நகராட்சியின் 2013-14 ம் ஆண்டிற்கான வரவு செலவுதிட்ட பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மொத்த வருவாய் ரூ.12 கோடியே 71 லட்சம்,செலவினங்கள் ரூ.10 கோடியே 65 லட்சம்.உபரி ரூ.2 கோடியே ஆறு லட் சம்.கடந்த ஆண் டைவிட இந்த ஆண்டு  உபரி  வருவாய்  ஒரு கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
 


Page 3 of 31