Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Financial Management

சென்னையில் கட்டமைப்பு பணிகளுக்கு செலவு... ரூ.2,064 கோடி! கடந்தாண்டை காட்டிலும் ரூ.332 கோடி அதிகம்

Print PDF

தினமலர்         03.04.2017

சென்னையில் கட்டமைப்பு பணிகளுக்கு செலவு... ரூ.2,064 கோடி! கடந்தாண்டை காட்டிலும் ரூ.332 கோடி அதிகம்

சென்னை மாநகராட்சி, கடந்த நிதியாண்டில் கட்டமைப்பு பணிகளுக்கு மட்டும், 2,064 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டை விட, 332 கோடி ரூபாய் அதிகம்.

மார்ச், 31ம் தேதியுடன் முடிவடைந்த, 2016 - 17ம் நிதியாண்டில், சென்னை மாநகராட்சி அடிப்படை கட்டமைப்பு பணிகளுக்காக, மூலதன செலவு மட்டும், 2,064.31 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. இது, கடந்த, 2015 - 16ம் நிதியாண்டில், 1,731.66 கோடி ரூபாயாக இருந்தது. இதனால், முந்தைய நிதியாண்டை விட, 332 கோடி ரூபாய் அதிகமாக, மூலதன பணிகளுக்கு மாநகராட்சி செலவழித்துள்ளது.

தலைக்கு 2,949 ரூபாய்

மண்டலங்கள் மூலமும், மழைநீர் வடிகால், சாலைகள், மின் துறை ஆகியவற்றில் பணிகள் அதிகமாக நடந்துள்ளன. மற்ற துறைகளை காட்டிலும், இந்த துறைகளில் தான் அதிக நிதி செலவழிக்கப்பட்டுள்ளது. 70 லட்சம் மக்கள் தொகை கொண்ட சென்னை மாநகராட்சியில், ஒரு தலைக்கு, 2,949 ரூபாய் வீதம், கட்டமைப்பு பணிகளுக்கு, கடந்த நிதியாண்டு செலவிடப்பட்டு

உள்ளது. இதுவே இதற்கு முந்தைய நிதியாண்டில், 2,473 ரூபாய் மட்டுமே, ஒரு தலைக்கு செலவிடப்பட்டு உள்ளது.

ஆண்டு வாரியாக செலவு விபரம்

ஆண்டு மூலதன செலவு (ரூபாய் கோடியில்)

2012 - -13 732.72

2013- - 14 1,392.63

2014- - 15 1,877.03

2015 - 16 1,731.66

2016 - 17 2,064.31

மாநகராட்சியின் மூலதன பணிகளுக்கான செலவை, 2,500 கோடி ரூபாயாக உயர்த்த, மாநகராட்சி முயற்சித்து வருகிறது. இதன் படி நகர மக்கள்தொகைக்கு ஏற்ப, ஒரு தலைக்கு, 3,500 ரூபாய் வீதம், வளர்ச்சி பணிகளுக்கு செலவழித்தால் மட்டுமே, கட்டமைப்புகளை போதியளவில் உருவாக்க முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளில், மாநகராட்சி இந்த இலக்கை எட்டும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

பற்றாக்குறை அதிகரிப்பு

சென்னை மாநகராட்சி மேயர், கவுன்சிலர் இல்லாத பட்ஜெட்டை, கடந்த நிதியாண்டில் தாக்கல் செய்துள்ளது. இதில், நடப்பாண்டிற்கான மாநகராட்சிக்கு மொத்த வரவு, 5,530 கோடி ரூபாயாகவும்; செலவு, 5,650 கோடி ரூபாயாகவும் இருக்கும் என்றும், பற்றாக்குறை, 120 கோடி ரூபாய் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டை விட பற்றாக்குறை அதிகரித்துள்ளது.

 

புதிய வரிகள் இல்லாத பட்ஜெட்: கிழக்கு, தெற்கு தில்லி மாநகராட்சிகளில் தாக்கல்

Print PDF

தினமணி       24.12.2014

புதிய வரிகள் இல்லாத பட்ஜெட்: கிழக்கு, தெற்கு தில்லி மாநகராட்சிகளில் தாக்கல்

புதிய வரிகள் இல்லாத பட்ஜெட்டை கிழக்கு மற்றும் தெற்கு தில்லி மாநகராட்சிகளில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக கிழக்கு தில்லி மாநகராட்சி நிலைக்குழுவின் தலைவர் பி.பி. தியாகி கூறுகையில், "வரிகளை உயர்த்த வேண்டும் என்றும் புதிய வரிகளை விதிக்க வேண்டும் என்றும் மாநகராட்சி ஆணையர் அளித்த பரிந்துரைகள் அனைத்தையும் நிலைக்குழு நிராகரித்து விட்டது.

மக்கள் மீது மேலும் சுமையாக புதிய வரிகளைப் போட விரும்பவில்லை. கிழக்கு தில்லியின் பட்ஜெட் ரூ. 240 லட்சத்தில் இருந்து ரூ. 480 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதைத் தவிர கிழக்கு தில்லி சாலைகளில் எல்இடி விளக்குகள் அமைக்க ரூ. 500 லட்சமும், உறுப்பினர்களின் மருத்துவ காப்பீடுத் திட்டத்துக்காக ரூ. 100 லட்சமும் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

சாலை வசதிகளுக்காக ஒதுக்கப்படும் நிதி ரூ. 960 லட்சத்தில் இருந்து ரூ. 3200 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது' என்று தியாகி தெரிவித்தார்.

அங்கீகாரமற்ற காலனிகள் இடிக்கப்படாது: தெற்கு தில்லி மாநகராட்சி பகுதியில் உள்ள அங்கீகாரமற்ற காலனிகள் 2017ஆம் ஆண்டு வரை இடிக்கப்படமாட்டாது என்று தெற்கு தில்லி மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு தில்லி மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் சுபாஷ் ஆர்யா செய்தியாளர்களிடம் கூறுகையில், "புதிய வரிகள் விதிக்க வேண்டும் என்ற மாநகராட்சி ஆணையரின் பரிந்துரைகளை நிலைக்குழு நிராகரித்துவிட்டது. சுத்தமான இந்தியா திட்டத்துக்காக ரூ. 15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சொத்து வரி செலுத்துவோருக்காக பிரத்யோக எண் வழங்கப்படும். அங்கீகாரமற்ற காலனிகளில் தேங்கும் மழை நீரை அகற்ற ரூ. 10 கோடி மதிப்பிலான திட்டங்களும் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது' என்று அவர் தெரிவித்தார்.

 

சென்னை மாநகராட்சி பட்ஜெட் 19–ந் தேதி தாக்கல் மேயர் சைதை துரைசாமி புதிய திட்டங்களை அறிவிக்கிறார்

Print PDF

தினத்தந்தி              18.02.2014

சென்னை மாநகராட்சி பட்ஜெட் 19–ந் தேதி தாக்கல் மேயர் சைதை துரைசாமி புதிய திட்டங்களை அறிவிக்கிறார்

சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும் 19–ந் தேதி(புதன்கிழமை) மேயர் சைதை துரைசாமி தாக்கல் செய்கிறார். இதில் சென்னை மாநகராட்சிக்கான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன.

பட்ஜெட் தாக்கல்

சென்னை மாநாகராட்சி பட்ஜெட் ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் இறுதியில் அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக கடந்த ஆண்டு மார்ச் 11–ந் தேதி, 200 வார்டுகளுக்கும், 3 ஆயிரத்து 630 கோடி ரூபாய் மதிப்பில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இதில் கல்வி, சுகாதாரம், சாலை மேம்பாடு உள்பட 126 புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில் புதிதாக சாலைகளும்அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான விசேஷ கூட்டம் வருகிற 19–ந் தேதி சென்னை மாநகராட்சி கட்டிடத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் இந்த ஆண்டுக்கான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன.

அன்றைய தினமே விவாதம்

இந்த பட்ஜெட் கூட்டம் காலை சரியாக 9.30 மணிக்கு மேயர் சைதை துரைசாமி தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு மாநகராட்சி கமிஷனர் விக்ரம் கபூர், துணை மேயர் பெஞ்சமின் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

இந்த ஆண்டு பல்வேறு திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது. குறிப்பாக கல்வி, சுகாதாரத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்படும் என தெரிகிறது. மேலும் விரிவாக்கப்பட்ட பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும் கூறப்படுகிறது.

அன்றைய தினம் மதியமே பட்ஜெட் மீதான விவாதமும் நடைபெற இருக்கிறது. இந்த விவாதத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்து மேயர் சைதை துரைசாமி பேசுவார்.

 
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  6 
  •  7 
  •  8 
  •  9 
  •  10 
  •  Next 
  •  End 
  • »


Page 1 of 31