Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

"வரி வசூல் மையங்கள் மார்ச் 31 வரை செயல்படும்'

Print PDF

 தினமணி        22.12.2014

"வரி வசூல் மையங்கள் மார்ச் 31 வரை செயல்படும்'

கோவை மாநகராட்சியின் 2014-15ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டிற்கான சொத்து வரி, குடிநீர்க் கட்டணம் செலுத்துவதற்காக மார்ச் 31-ஆம் தேதி வரை வரி வசூல் மையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி ஆணையர் விஜய கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி:

"கோவை மாநகராட்சிக்கு 2014-15ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வரையிலான சொத்து வரி நிலுவைகளை கடந்த அக்டோபர் 15-க்குள் செலுத்தியிருக்க வேண்டும்.

நிலுவையில் உள்ள சொத்து வரி, குடிநீர்க் கட்டணத்தை உடனடியாகச் செலுத்த வேண்டும். மேலும், மாநகர எல்லைக்குள் தொழில்புரிந்து வரும் தனிநபர், வணிக நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் தொழில் வரி செலுத்த வேண்டும். நிலுவை வரியை 2015 மார்ச் 31-ஆம் தேதி வரை வரி வசூல் மையங்களில் செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படாமல் தவிர்க்குமாறு' அவர் அறிவுறுத்தியுள்ளார்.

கிழக்கு மண்டல வரி வசூல் மையங்கள்: திருச்சி சாலையில் உள்ள மண்டல அலுவலகம், வரதராஜபுரத்தில் உள்ள ஜெ.ஜெ. திருமண மண்டபம், விளாங்குறிச்சியில் உள்ள காந்தி வீதி, காளப்பட்டியில் உள்ள விளாங்குறிச்சி சாலை மையம்.

மேற்கு மண்டலம்: ஆர்.எஸ்.புரம், ராமச்சந்திரா சாலையில் உள்ள மண்டல அலுவலகம், காமராஜபுரம், சாயிபாபா காலனியில் உள்ள சிந்தாமணி நகர், பி.என்.புதூர், கவுண்டம்பாளையம் பழைய நகராட்சி அலுவலகம், வடவள்ளி பழைய பேரூராட்சி அலுவலகம், வீரகேரளத்தில் உள்ள மாரியம்மன் கோவில் சாலை, இடையர்பாளையம்.

மத்திய மண்டலம்: ஹூசூர் சாலையில் உள்ள மண்டல அலுவலகம், மாநகராட்சி பிரதான அலுவலகம், சுங்கம் ரவுண்டானா, டாடாபாத், ரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி.

தெற்கு மண்டலம்: குனியமுத்தூரில் உள்ள மண்டல அலுவலகம், செல்வபுரம், போத்தனூர் பிரிவு அலுவலகம்.

வடக்கு மண்டலம்: மண்டல அலுவலகம், பயனீர் மில் சாலை, கவுண்டம்பாளையம் தீயணைப்பு நிலையம் அருகில், கணபதி ராயப்பா நகர், ராமகிருஷ்ணாபுரம், சரவணம்பட்டி பழைய பேரூராட்சி அலுவலகம், துடியலூர் பழைய பேரூராட்சி அலுவலகம், சின்னவேடம்பட்டி பழைய பேரூராட்சி அலுவலகம்.

 

சென்னையில் 83 இடங்களில் ஒருங்கிணைந்த வரி செலுத்தும் மையங்கள்

Print PDF
தி இந்து       28.11.2014  

சென்னையில் 83 இடங்களில் ஒருங்கிணைந்த வரி செலுத்தும் மையங்கள்

 சென்னையில் வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல், 83 இடங்களில் ஒருங்கிணைந்த வரி செலுத்தும் மையங்கள் தொடங்கப்பட உள்ளன. அதாவது சென்னை மாநக ராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியையும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய தண்ணீர் வரியையும் ஒரே அலுவலகத்தில் ஒரே கவுண்டரில் செலுத்தலாம்.

இந்த வசதி சென்னை மாநகராட் சியின் 200 வார்டுகளிலும் அமல் படுத்தப்பட உள்ளது. இதில் முதல் கட்டமாக 83 இடங்களில் இவை தொடங்கப்படுகின்றன. இதில் சில மையங்கள் மாநகராட்சி வார்டு அலுவலகங்களிலும், சில மையங் கள் சென்னை குடிநீர் வாரிய அலு வலகங்களிலும் அமைக்கப்படும்.

சொத்துவரியை காசோலை யாகவோ (செக்), வரைவு காசோலையாகவோ (டிடி) செலுத்த லாம். தண்ணீர் வரியை பணமா கவோ, காசோலையா கவோ (செக்), வரைவு காசோலையாகவோ(டிடி) செலுத்தலாம்.

தற்போது, மாநகராட்சிக்கான சொத்து வரியை ஆன்லைன் மூலமா கவும், வங்கியில் பணமாகவும், மண்டலம் மற்றும் வார்டு அலுவலகங்களில் செக் அல்லது டிடியாகவும் செலுத்தலாம்.
 

கிழக்கு தில்லியிலும் பார்க்கிங் கட்டணம் உயர்வு: நவம்பர் 1 முதல் அமல்

Print PDF

 தினமணி   30.10.2014

கிழக்கு தில்லியிலும் பார்க்கிங் கட்டணம் உயர்வு: நவம்பர் 1 முதல் அமல்

தில்லி சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கிழக்கு தில்லி மாநகராட்சியும் வாகன நிறுத்த (பார்க்கிங்) கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்தக் கட்டண உயர்வு வரும் சனிக்கிழமை (நவம்பர் 1) முதல் அமலுக்கு வர உள்ளது.

வடக்கு தில்லி, தெற்கு தில்லி ஆகிய மாநகராட்சிகளும் அண்மையில் பார்க்கிங் கட்டணத்தை உயர்த்தின. இந்த நிலையில், கிழக்கு தில்லி மாநகராட்சியும் பார்க்கிங் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

இதுகுறித்து கிழக்கு தில்லி மாநகராட்சி ஆணையர் மணீஷ் குப்தா செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: பார்க்கிங் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான அறிக்கையை கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி நிலைக்குழுவிடம் சமர்பித்தோம். அதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. சாதாரண, நெரிசல் மிகுந்த நேரம் என இருவகைகளில் பார்க்கிங் கட்டணத்தை உயர்த்தத் திட்டமிட்டுள்ளோம்.

இதன்படி, கார்களுக்கு சாதாரண நேரங்களில் ஒரு மணி நேரத்துக்கு தரைதள பார்க்கிங் கட்டணம் ரூ.20, பிரீமியம் பார்க்கிங் கட்டணம் ரூ.30, மூன்று மணி நேரத்துக்கு மேல் நிறுத்துபவர்களுக்கு ரூ.50, பிரீமியம் பார்க்கிங் கட்டணம் ரூ.75 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நெரிசல் நேரங்களில் தரைத் தளங்களில் கார்களுக்கு முதல் ஒரு மணி நேரத்துக்கு பார்க்கிங் கட்டணம் ரூ.30, பிரீமியம் பார்க்கிங் கட்டணம் ரூ.50, மூன்று மணி நேரம் வரை தரைத்தளத்தில் நிறுத்த ரூ.75, பிரீமியம் பார்க்கிங் கட்டணம் ரூ.100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இருசக்கர வாகனங்களுக்கு தரைத்தள கட்டணம் ரூ.20, பிரீமியம் பார்க்கிங் கட்டணம் ரூ.30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு நவம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்றார் அவர்.

 


Page 3 of 148