தினகரன் 26.03.2013
குப்பை தொட்டி விவகாரம் வியாபாரிகள் சாலைமறியல்
கோவை: கோவை பாலக்காடு மெயின் ரோடு குனியமுத்தூர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு தனியார் வணிக வளாகம் சார்பில் மாநகராட்சிக்கு சொத்து வரி ரூ.30 ஆயிரம் செலுத்த வேண்டியுள்ளது. இதுபற்றி மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் தமிழ்வேந்தன் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் நேரில் விளக்கம் கேட்டனர். காலஅவகாசமும் கொடுத்தனர். ஆனாலும், நிலுவை தொகை செலுத்தப்படவில்லை. இந்நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காலை இரண்டு ராட்சத குப்பை தொட்டிகளை இவ்வணிக வளாகம் முன்புறம் பாலக்காடு மெயின் ரோட்டின் ஓரமாக வைத்துவிட்டு சென்றனர். குப்பை தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியதால் வணிக வளாக உரிமையாளர் மற்றும் இதர வியாபாரிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. குப்பை தொட்டிகளை அகற்றி, வேறு இடத்தில் வைக்கும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதையடுத்து, அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் சுமார் 100 பேர் ஒன்றுதிரண்டு நேற்று மதியம் பாலக்காடு மெயின் ரோட்டில் மறியல் போராட்டம் நடத்தினர். மதியம் 1.30 மணி முதல் 2.30 மணி வரை மறியல் போராட்டம் நடந்தது. குனியமுத்தூர் போலீசார் விரைந்து சென்றனர். வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. கடைசிவரை குப்பை தொட்டி அகற்றப்படவில்லை.
குப்பை தொட்டி விவகாரம் வியாபாரிகள் சாலைமறியல்
கோவை: கோவை பாலக்காடு மெயின் ரோடு குனியமுத்தூர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு தனியார் வணிக வளாகம் சார்பில் மாநகராட்சிக்கு சொத்து வரி ரூ.30 ஆயிரம் செலுத்த வேண்டியுள்ளது. இதுபற்றி மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் தமிழ்வேந்தன் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் நேரில் விளக்கம் கேட்டனர். காலஅவகாசமும் கொடுத்தனர். ஆனாலும், நிலுவை தொகை செலுத்தப்படவில்லை. இந்நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காலை இரண்டு ராட்சத குப்பை தொட்டிகளை இவ்வணிக வளாகம் முன்புறம் பாலக்காடு மெயின் ரோட்டின் ஓரமாக வைத்துவிட்டு சென்றனர். குப்பை தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியதால் வணிக வளாக உரிமையாளர் மற்றும் இதர வியாபாரிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. குப்பை தொட்டிகளை அகற்றி, வேறு இடத்தில் வைக்கும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதையடுத்து, அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் சுமார் 100 பேர் ஒன்றுதிரண்டு நேற்று மதியம் பாலக்காடு மெயின் ரோட்டில் மறியல் போராட்டம் நடத்தினர். மதியம் 1.30 மணி முதல் 2.30 மணி வரை மறியல் போராட்டம் நடந்தது. குனியமுத்தூர் போலீசார் விரைந்து சென்றனர். வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. கடைசிவரை குப்பை தொட்டி அகற்றப்படவில்லை.