Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

பிப். 28க்குள் வரிகளை செலுத்த காரைக்குடி நகராட்சி வேண்டுகோள்

Print PDF

தினமணி             22.01.2014 

பிப். 28க்குள் வரிகளை செலுத்த காரைக்குடி நகராட்சி வேண்டுகோள்

காரைக்குடி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை, குடிநீர் இணைப்பிற்கு செலுத்த வேண்டிய கூடுதல் வைப்புத்தொகை ஆகிய அனைத்துவித வரிகளையும் வரும் பிப்ரவரி 28-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு)பொ. மாரியப்பன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: இந்நகராட்சியில் அத்தியாவசிய வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கிறது.

 அதற்காக வரிகளை செலுத்த பொது மக்களிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது. வரி செலுத்தாத நபர்களின் மீது சட்டபூர்வ நடவடிக்கை மற்றும் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 வரி செலுத்தாமல் நிலுவை வைத்திருப்போர் பட்டியலை முகவரியுடன் பஸ் நிலையத்தில் பிளக்ஸ் பெயர் பலகை வைக்கவும் நாளிதழில் பிரசுரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 வரி செலுத்தாதோரின் வீடுகளில் மின் இணைப்பை துண்டிப்புச்செய்ய தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பரிந்துரைக்கப்படும். பணம் செலுத்துவதற்கு வசதியாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள்களிலும் கல்லுக்கட்டி குடிநீர் தேக்கத்தொட்டி வசூல் மையமும், நகராட்சி அலுவலகத்தில் உள்ள கணினி வசூல் மையமும் இயங்கும் என்றார்.

 

அன்னூர் பேரூராட்சியில் வரி செலுத்த வேண்டுகோள்

Print PDF

தினமணி            16.01.2014

அன்னூர் பேரூராட்சியில்  வரி செலுத்த வேண்டுகோள்

அன்னூர் நகராட்சியில் வரிசெலுத்தாதவர்கள் உடனடியாக வரி செலுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அன்னூர் பேரூராட்சித் தலைவர் ராணி, செயல் அலுவலர் கல்யாணசுந்தரம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:

  • அன்னூர் பேரூராட்சியில் நடப்பாண்டில் அரசு நிதி, சட்டபேரவை உறுப்பினர் நிதி, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் பொது நிதி உள்ளிட்ட நிதிகளிலிருந்து தற்போது ரூ. 4 கோடி மதிப்பீட்டில் 15 வார்டுகளிலும் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
  • மேலும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட உள்ளதால், மக்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர்க் கட்டணம், வணிக நிறுவனங்களின் உரிமக் கட்டணம் உள்ளிட்டவற்றை ஒருவார காலத்திற்குள் செலுத்த வேண்டும்.
சில பகுதிகளில் சொத்து வரி, குடிநீர்க் கட்டணம் ஆகியவை பல ஆண்டுகளாக செலுத்தப்படாமல் உள்ளன. அதனால் பல வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆகவே, வரி செலுத்தாதவர்கள் உடனடியாக வரிகளைச் செலுத்த வேண்டும். இல்லையெனில் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படுவதுடன், நகராட்சி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

திருப்பூர் மாநகராட்சியில் 100 சதவீதம் வரி வசூல் செய்ய வேண்டும் அதிகாரிகளுக்கு நிதிக்குழு தலைவர் உத்தரவு

Print PDF

தினத்தந்தி               09.01.2014

திருப்பூர் மாநகராட்சியில் 100 சதவீதம் வரி வசூல் செய்ய வேண்டும் அதிகாரிகளுக்கு நிதிக்குழு தலைவர் உத்தரவு

திருப்பூர் மாநகராட்சியில் வரிவசூலை 100 சதவீதம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நிதிக்குழு தலைவர் ஆர்.சந்திரசேகர் உத்தர விட்டார்.

வரிவிதிப்பு

திருப்பூர் மாநகராட்சி வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு கூட்டம் மாநகராட்சி அலு வலக கூட்ட அரங்கில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு நிதிக்குழு தலைவர் ஆர்.சந்திர சேகர் தலைமை தாங்கி னார். உதவிஆணையர் (கணக்கு) விஜயகுமார் முன்னிலை வகித் தார். உறுப்பினர்கள் கீதா ஆறுமுகம், நஜ்முதீன், உதவி ஆணையர் வாசுக்குமார், செல்வநாயகம், வருவாய் ஆய் வாளர்கள், சுகாதார ஆய் வாளர்கள் கலந்து கொண் டனர்.

கூட்டத்தில் உறுப்பினர் கீதா ஆறுமுகம் பேசும்போது, ‘‘சூசையாபுரம் கிழக்கு, எம்.ஜி.ஆர்.காலனி, டி.எம்.சி.காலனி ஆகிய பகுதிகளில் புதிதாக பட்டா வழங்கப்பட்ட வீடுகளுக்கு இதுவரை வரி விதிக்கவில்லை. அங்கு குடிநீர் இணைப்பு உள்பட அடிப் படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. சாலையோரம் உள்ள ஆக்கிர மிப்பு கடைகள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையாக செலுத்துவ தில்லை’’ என்றார்.

செல்போன் கோபுரங்கள்

உறுப்பினர் நஜ்முதீன் பேசும் போது, ‘‘பூலவாரி சுகுமார் நகர் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய வீடு களுக்கு வரி விதித்து, அவர் களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும். இது போல் பெரியகடைவீதியில் பலர் தொழில்வரி செலுத்தா மல் தொழில்நடத்தி வருகிறார் கள். அங்கு வரிகளை உரிய முறையில் வசூல் செய்ய வேண்டும். செல்போன் கோபு ரங்கள் நகரில் ஏராளமாக உள்ளன. இவற்றுக்கு உரிய வரி விதிக்க வேண்டும்’’ என்றார்.

இதைத்தொடர்ந்து தலை வர் ஆர்.சந்திரசேகர் பேசும் போது கூறியதாவது:–

வரி வசூலை பொருத்து தான் மாநகராட்சியின் நிர் வாகத்தை பெருக்க முடியும். மாநகராட்சியில் 30 முதல் 40 சதவீதம் மட்டுமே வரிவசூல் செய்யப்பட்டுள்ளது. இது போதுமானது அல்ல. வருகிற ஏப்ரல் மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டி உள்ளதால் அதற்கு முன்பாக வரிவசூலை செய்து முடிக்க வேண்டும் என்று மேயரும், துணைமேயரும் கூறி உள்ளனர்.

100 சதவீதம் வரிவசூல்

எனவே 100 சதவீதம் வரி வசூலை மார்ச் மாத இறு திக்குள் செய்து முடிக்க வேண் டும். மாநகராட்சி வருவாய் ஆய்வாளர்கள் தான் இதற்கு முழு முயற்சி எடுக்க வேண் டும். நீண்ட நாட்களாக வரி பாக்கி வைத்துள்ளவர்களின் குடிநீர் இணைப்பை பார பட்சம் இன்றி துண்டிக்க வேண்டும்.

அதுபோல் தொழிலாளர் கள் நிறைந்துள்ள திருப்பூரில் தொழில்வரி மிகவும் குறை வாக உள்ளது. 3,355 பேருக்கு மட்டும் தான் புதிதாக தொழில்வரி விதிக்கப்பட்டு உள்ளது. டி.எல்.ஓ. எனப்படும் அபாயகரமான தொழிற் சாலைகளுக்கான உரிமம் அதிகரிக்கப்பட வேண் டும்.

வாகன காப்பகங்கள்

இதுதவிர மாநகரில் 75 சதவீத நிறுவனங்கள் உரிமம் இன்றி இயங்கி வருகிறது. இதுபோல் வாகன காப்பகங் கள், செல்போன் கோபுரங்கள் அமைந்துள்ள இடங்களுக்கு நிலவரி மட்டுமே செலுத்து கிறார்கள். எனவே இவற்றுக்கு தனி வரி விதிக்க வேண்டும்.

புதிதாக குடிநீர் இணைப்பு கொடுத்து அனைவருக்கும் முறையாக அட்டை வழங்கி, குடிநீர் கட்டணம் வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல் குடிசைமாற்று வாரிய பகுதி களில் வீடுகட்டி வசிப்பவர் களுக்கும், சூசையாபுரம் கிழக்கு, எம்.ஜி.ஆர்.காலனி, டி.எம்.சி.காலனி ஆகிய பகுதிகளில் புதிதாக பட்டா வழங்கப்பட்ட வீடுகளுக்கும் உடனே வரி வதிக்க வேண்டும்.

இவ்வாறு தலைவர் சந்திரசேகர் பேசினார்.

 


Page 8 of 148