Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

பொது மக்களுக்கு விநியோகிக்காமல் உணவகங்களுக்கு குடிநீர் விற்ற 4 லாரிகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம்

Print PDF

தி இந்து 

பொது மக்களுக்கு விநியோகிக்காமல் உணவகங்களுக்கு குடிநீர் விற்ற 4 லாரிகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம்

கோப்பு படம்

சென்னைக் குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொதுமக்களின் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு சென்னைக் குடிநீர் வாரியம் வணிக நிறுவனங்களுக்காக விநியோகம் செய்யும் குடிநீர் சேவையை சில மாதங்களுக்கு முன்னர் ரத்து செய்தது. சென்னைக் குடிநீர் வாரிய ஒப்பந்த அடிப்படையிலான லாரிகள் பொது மக்களுக்கு விநியோகிக்கும் குடிநீரை முறைகேடாக பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குடிநீர் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குடிநீர் வாரியத்தால் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்வதில் எவ்வித முறைகேடும் நடைபெறாமல் இருக்க அதிகாரிகள் கொண்ட கண்காணிப்புக் குழுவினரை நியமித்து அவர்கள் அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை பள்ளிப்பட்டு நீர் நிரப்பு மையம் அருகில் உள்ள கானகத்தில் கண்காணிப்புக் குழு அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது குடிநீர் வாரிய ஒப்பந்த லாரிகள் பொது மக்களுக்கு விநியோகம் செய்வதற்கான குடிநீரை முறைகேடாக தனியார் உணவகத்துக்கு விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.

இதுபோல அண்ணாநகர் பகுதியில் சோதனை செய்தபோது முறைகேட்டில் ஈடுபட்ட 2 லாரிகள் பிடிபட்டன. இதையடுத்து இந்த 4 லாரிகளுக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், அவற்றின் ஒப்பந்த பணி ஆணைகளும் ரத்து செய்யப்பட்டன. இனிவரும் காலங்களில் குடிநீர் வாரிய ஒப்பந்த லாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் குடிநீர் வாரிய நிர்வாகம் எச்சரித்துள்ளது.
Last Updated on Friday, 07 July 2017 07:38
 

வேலூர் மாநகராட்சியில் முறைகேடாக குடிநீர் உறிஞ்சிய 10 மின்மோட்டார்கள் பறிமுதல் : அதிகாரிகள் நடவடிக்கை

Print PDF

தினகரன்           07.04.2017

வேலூர் மாநகராட்சியில் முறைகேடாக குடிநீர் உறிஞ்சிய 10 மின்மோட்டார்கள் பறிமுதல் : அதிகாரிகள் நடவடிக்கை

வேலூர்: வேலூர் மாநகராட்சியில் முறைகேடாக குடிநீர் உறிஞ்சிய 10 மின்மோட்டார்களை பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். வேலூரில் கோடைகாலம் தொடங்கியது முதல் தினமும் வெயில் சதம் அடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அதோடு குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. வேலூர் நகரில் மாநகராட்சி சார்பில் வாரத்திற்கு ஒரு முறை, 10 நாட்களுக்கு ஒருமுறை என குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

போதிய குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் ஒருசிலர் குடிநீர் இணைப்பு பெறாமல் முறைகேடாக மின் மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சி விடுகின்றனர். எனவே முறைகேடாக குடிநீர் உறிஞ்சும் மின்மோட்டார்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.  இந்நிலையில் கமிஷனர் குமார் உத்தரவின்பேரில் உதவி பொறியாளர் செந்தில் தலைமையிலான அதிகாரிகள் வேலூர் மாநகராட்சியில் கஸ்பா, பயர் லைன், பெரிய மசூதி தெரு, யாகூப் சாகிப் தெரு என 54 மற்றும் 55வது வார்டுகளில் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது முறைகேடாக வீடுகளில் குடிநீர் உறிஞ்சிய 10 மின்மோட்டார்களை பறிமுதல் செய்தனர். அனுமதியின்றி இணைப்பு வைத்திருந்த குழாய் இணைப்புகளையும் துண்டித்தனர். மேலும் தொடர்ந்து முறைகேடாக மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.

 

கோயம்பேட்டில் 10 கடைகளுக்கு 'சீல்' சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் அதிரடி

Print PDF

தினமலர்      07.04.2017

கோயம்பேட்டில் 10 கடைகளுக்கு 'சீல்' சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் அதிரடி

கோயம்பேடு: கோயம்பேடு மார்க்கெட்டில், பராமரிப்பு வரி கட்டாத மற்றும் அனுமதி பெறாத, 10 கடைகளுக்கு, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.

கோயம்பேடு மார்க்கெட்டில், 3,000க்கும் மேற்பட்ட பூ, பழம், காய்கறி மொத்த விற்பனை கடைகள், சில்லரை விற்பனை கடைகள் உள்ளன. மார்க்கெட் பராமரிப்பு மற்றும் நிர்வாக பணியை, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தில் இயங்கும், மார்க்கெட் நிர்வாக குழு கவனிக்கிறது.

இங்கு கடைகள் அமைக்க, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறுவோருக்கு, சான்றிதழ் வழங்கப்படும். மேலும், மாதம்தோறும், சதுரடிக்கு ஒரு ரூபாய் என, பராமரிப்பு தொகையும் வழங்க வேண்டும்.

இந்நிலையில், அங்கு, விதியை மீறி, நடைபாதைகளை ஆக்கிரமித்து, பலர் கடை நடத்துகின்றனர். இதுகுறித்த புகார்களை அடுத்து, ஆக்கிரமிப்பு கடைகளை, அதிகாரிகள் அகற்றி

வருகின்றனர்.

சி.எம்.டி.ஏ., சார்பில் அனுமதி பெறாமலும், உரிமத்தை புதுப்பிக்காமல், பராமரிப்பு வரி கட்டாமலும் உள்ள, 10க்கும் மேற்பட்ட கடைகளுக்கு, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், நேற்று, 'சீல்' வைத்தனர்.

400 கடைகள்

கடந்த, 2013ல் இருந்து, பராமரிப்பு வரி வழங்காத மற்றும் உரிமத்தை புதுப்பிக்காத கடைகளுக்கு, 'சீல்' வைத்துள்ளோம். இன்னும், 400க்கும் மேற்பட்ட கடைகள், உரிமம் பெறாமல் உள்ளன. விரைவில் அவற்றுக்கும், 'சீல்' வைக்கப்படும்.

 


Page 2 of 506