Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

கொசு ஒழிப்புக்கு ஒத்துழைக்காத 25 ஆயிரம் வீடுகளுக்கு நோட்டீஸ்

Print PDF
தினமணி       11.09.2014

கொசு ஒழிப்புக்கு ஒத்துழைக்காத 25 ஆயிரம் வீடுகளுக்கு நோட்டீஸ்

கொசுக்களை ஒழிக்கும் திட்டத்துக்கு ஒத்துழைப்பு அளிக்காத 25 ஆயிரம் வீடுகள், அலுவலகங்களுக்கு வடக்கு தில்லி மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில் தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ), தில்லி போக்குவரத்து கார்ப்பரேஷன் (டிடிசி) அலுவலகங்களும் அடங்கும்.

இதுகுறித்து வடக்கு தில்லி மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "வடக்கு தில்லி மாநகராட்சியின் பொது சுகாதாரத் துறை சார்பில் கொசுக்களை ஒழிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்பணியைக் கண்காணிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இத்திட்டத்துக்கு வீடுகள், அலுவலகங்கள் முறையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என கண்டறியப்பட்டது. இவற்றில் 25,579 வீடுகளுக்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும் வகையில் நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதேபோல், பஞ்சாப் சிந்த் வங்கி, ஷாதிப்பூர் டிடிசி பேருந்து டிப்போ, டிடிஏ அலுவலகங்கள் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன என்றார் அவர்.
 

வாடகை பாக்கியுள்ள கடைகளின் உரிமம் ரத்து:மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

Print PDF

தினமணி       11.09.2014

வாடகை பாக்கியுள்ள கடைகளின் உரிமம் ரத்து:மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

மதுரை மாநகராட்சிக்குச் சொந்தமான கடைகளுக்கு செப்டம்பர் 2014 வரை உரிய வாடகையை செப்.15-ஆம் தேதிக்குள் செலுத்தாவிட்டால், உரிமம் ரத்து செய்யப்படும் என ஆணையர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சிக்குச் சொந்தமான 4086 மாத வாடகைக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளை வாடகைக்கு உரிமம் பெற்றவர்களில் பெரும்பாலானோர் முறையாக வாடகை செலுத்தாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதன் மூலம் பல லட்சம் ரூபாய் வாடகைப்பணம் முடங்கிக் கிடக்கிறது. நான்கு மண்டலங்களிலும் வாடகைக் கடைகளில் முறையாக வாடகை வசூலிக்க நடவடிக்கை எடுக்குமாறு, மண்டல உதவி ஆணையர்கள், வருவாய் உதவி ஆணையர் மற்றும் வருவாய்த்துறையினருக்கு ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, உதவி ஆணையர்(வருவாய்) அ.தேவதாஸ் தலைமையில், வருவாய்த் துறையினர் நீண்டநாள் வாடகை செலுத்தாமல் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். புதன்கிழமை அண்ணா பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள பகுதிகளில் சோதனை நடத்தினர்.

இதில், பனைவெல்லம் கூட்டுறவு சங்கத்துக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ள கடை வாடகை நீண்ட நாள்களாக செலுத்தப்படாமல் இருந்தது. அந்த கடையை பூட்டி சீல் வைத்தனர். இப்பகுதியில் நீண்டநாள் வாடகை செலுத்தாமல் இருந்த மற்ற கடைகளையும் பூட்டி சீல் வைத்தனர். உடன் வாடகைதாரர்கள், வாடகைத் தொகையை செலுத்தி ரசீது பெற்றனர்.

இந்த வகையில் ரூ.1.50 லட்சம் வாடகைத் தொகை சிறிது நேரத்திலேயே வசூலானதாக, உதவி ஆணையர் தேவதாஸ் தெரிவித்தார்.

மாநகராட்சி பகுதியில் முழுவதும் ஏராளமானோர் சில ஆண்டுகள் வரை வாடகை செலுத்தாமல் இருப்பதாகவும், இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் ஆணையர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியிருப்பது: கடை உரிமம் பெற்றவர்கள் மாதந்தோறும் வாடகை செலுத்த வேண்டும். பாக்கி வைத்திருப்பவர்கள் செப்.2014-வரையிலான வாடகைத் தொகையை செப்.15-ஆம் தேதிக்குள் முழுமையாகச் செலுத்தி விட வேண்டும். இல்லையேல், கடை உரிமம் ரத்து செய்யப்படும். உரிய வாடகைத் தொகையை வசூலிக்கவும் சட்டப்படியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

 

கட்டடம் இடிந்து மூவர் பலியான சம்பவம்: செங்கோட்டை நகராட்சிப் பொறியாளர் உள்பட இருவர் பணியிடை நீக்கம்

Print PDF
தினமணி      10.09.2014

கட்டடம் இடிந்து மூவர் பலியான சம்பவம்: செங்கோட்டை நகராட்சிப் பொறியாளர் உள்பட இருவர் பணியிடை நீக்கம்


தென்காசி, செப். 9:  திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் பழைய கட்டடத்தை இடிக்கும்போது நிகழ்ந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, நகராட்சிப் பொறியாளரும், பணி மேற்பார்வையாளரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தின் முன்புறம் உள்ள சேதமடைந்த வணிக வளாகத்தின் முதல்தளத்தை இடித்து அப்புறப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, சேதமடைந்த கட்டடங்களை இடிப்பதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, அந்தப் பணி செங்கோட்டை வீரகேரளவிநாயகர் தெருவைச் சேர்ந்த கனி என்பவரது மனைவி பாத்திமுத்து என்பவருக்கு வழங்கப்பட்டு, கடந்த 20 நாள்களுக்கு மேலாக கட்டடங்களை இடிக்கும் பணி நடந்து வந்தது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை பிற்பகலில் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, முதல் தளத்தின் சுவர் இடிந்து விழுந்ததில், தொழிலாளர்கள் கணபதி, முத்துகுமார், ராஜு ஆகியோர் இறந்தனர். இது தொடர்பாக ஒப்பந்ததாரர் பாத்திமுத்து மற்றும் நாகூர் ஆகியோர் மீது செங்கோட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக நகராட்சிப் பொறியாளர் ரமேஷ், பணி மேற்பார்வையாளர் அனந்தராமகிருஷ்ணன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து நகராட்சி நிர்வாக ஆணையர் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
 


Page 7 of 506