Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

9 இடங்களில் மீண்டும் கடைகள்: மாநகராட்சி அனுமதி

Print PDF

தினமணி        09.08.2021

9 இடங்களில் மீண்டும் கடைகள்: மாநகராட்சி அனுமதி

Chennaicorporation

கோப்புப்படம்

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் 9 இடங்களில் மீண்டும் திங்கள்கிழமை முதல் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்ட ரங்கநாதன் தெரு சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை, புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் புருக்லின் சாலை வரை, ஜாம் பஜாா் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை, ஃபக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜாா் , என்எஸ்சி போஸ் சாலை, குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை, ராயபுரம் சந்தை பகுதியில் கல்மண்டபம் சாலை, வாட்டா் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோயில் வரை, அமைந்தகரை சந்தை பகுதியில் அமைந்தகரை காவல் உதவி மையம் முதல், புல்லா நிழற்சாலை திருவிக நகா் பூங்கா சந்திப்பு வரை மற்றும் ரெட்ஹில்ஸ் சந்தை பகுதியில் ஆஞ்சநேயா் சிலை முதல் அம்பேத்கா் சிலை வரை ஆகிய பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் கடைகள், ஜூலை 31-ஆம் தேதி முதல் ஆக.9-ஆம் தேதி காலை 6 மணி வரை செயல்பட தடை விதிக்கப்பட்டது.

கொத்தவால் சாவடி சந்தை ஆக.1 முதல் ஆக.9-ஆம் தேதி காலை 6 மணி வரை செயல்படவும் அனுமதிக்கப்படவில்லை.

அதற்கான காலக்கெடு நிறைவடைந்த நிலையில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் திங்கள்கிழமை (ஆக.9) முதல் கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: தடை விதிக்கப்பட்டிருந்த 9 இடங்களில் வியாபாரிகளின் நலன் கருதி திங்கள்கிழமை முதல் கடைகள் செயல்படலாம். அதே நேரம், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும், கடைகளின் ஊழியா்களுக்கும் தடுப்பூசி செலுத்த விரைவுப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளோம். இந்த விதிகளைப் பின்பற்றி கடைகள் செயல்படும் என வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் உறுதியளித்த பிறகே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றனா்.

 

புதுச்சேரியில் பதிவு செய்யாத கேபிள் டிவி இணைப்புகள் துண்டிப்பு: நகராட்சி நடவடிக்கை

Print PDF
தினமணி          05.08.2021
 

புதுச்சேரியில் பதிவு செய்யாத கேபிள் டிவி இணைப்புகள் துண்டிப்பு: நகராட்சி நடவடிக்கை


puducherry

புதுச்சேரியில் பதிவு செய்யாத, கேளிக்கை வரி செலுத்தாத கேபிள்டிவி நிறுவன இணைப்புகளை துண்டித்து நகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. 

புதுச்சேரியில் நூற்றுக்கும் மேற்பட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலம் வீடுகளுக்கு கேபிள் டிவி தொலைக்காட்சி ஒளிபரப்பு இணைப்பு வழங்கப்பட்டு, பல்வேறு சேனல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 

இதற்காக ரூ. 200 முதல் ரூ. 500 வரை மாதக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் புதுச்சேரியில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அரசு விதிகள்படி புதுச்சேரி நகராட்சியில் பதிவு செய்யாமலும், கேளிக்கை வரி செலுத்தாமலும் நீண்டகாலமாக தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் பல கோடி ரூபாய் வரி செலுத்தாமல் நிலுவை உள்ளதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் பதிவு செய்யாமலும் கேளிக்கை வரி செலுத்தாமலும் உள்ள கேபிள் ஆபரேட்டர்கள் இணைப்பு துண்டிக்கப்படும் என நகராட்சி ஆணையர் சிவக்குமார் அண்மையில் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

இதனைத் தொடர்ந்து கேபிள் டிவி கேளிக்கை வரி செலுத்தாத, பதிவு செய்யாத கேபிள் ஆபரேட்டர்களின் இணைப்புகளை துண்டிக்கும் பணியை நகராட்சி ஆணையர் சிவக்குமார் தலைமையிலான குழுவினர் வியாழக்கிழமை மேற்கொண்டனர்.

இதன்படி முதல் கட்டமாக ரூ. 1 கோடியே 2 லட்சம் அளவில் கேளிக்கை வரி நிலுவை வைத்துள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இணைப்புகளை துண்டித்து, அவர்கள் பொருட்களை ஜப்தி செய்யும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்த வகையில் 6 கேபிள் டிவி நிறுவனங்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டு ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து பதிவு செய்யாத, வரி செலுத்தாத கேபிள் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

பாதாள சாக்கடை இணைப்பு, 'கட்'

Print PDF

தினமலர்      28.11.2017

பாதாள சாக்கடை இணைப்பு, 'கட்'

குரோம்பேட்டை : பல்லாவரம் நகராட்சியில், பல ஆண்டுகளாக, பாதாள சாக்கடை இணைப்புக்கு, கட்டணம் செலுத்தாத, 10 அடுக்குமாடி குடியிருப்புகளின் இணைப்பை நகராட்சி அதிகாரிகள் துண்டித்தனர்.

பல்லாவரம் நகராட்சியில், 75.33 கோடி ரூபாய் செலவில், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இங்கு இதுவரை, 22 ஆயிரத்து 520 வீட்டு கழிவுநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. குடியிருப்புகளுக்கு வைப்பு தொகை, 10 ஆயிரம் ரூபாய் என்றும்,மாத கட்டணம் 150 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.விடுபட்ட பகுதிகளில், 24.06 கோடி ரூபாய் செலவில், பாதாள சாக்கடை பணி நடந்து வருகிறது. இந்நிலையில், பாதாள சாக்கடை திட்ட கட்டணம் செலுத்தாத குடியிருப்புகள் குறித்து, கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில், 10 அடுக்குமாடி குடியிருப்புகள், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, கட்டணம் செலுத்தவில்லை என்பது தெரியவந்தது.அந்த இணைப்புகளை நகராட்சி அதிகாரிகள் துண்டித்தனர்.

 
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  6 
  •  7 
  •  8 
  •  9 
  •  10 
  •  Next 
  •  End 
  • »


Page 1 of 506