Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

திருச்சி மாநகராட்சி பகுதியில் வீடுகட்டும் போது மரக்கன்று நடுவது கட்டாயமாக்கப்படும் ஆணையர் பேச்சு

Print PDF

தினகரன்     08.09.2014

திருச்சி மாநகராட்சி பகுதியில் வீடுகட்டும் போது மரக்கன்று நடுவது கட்டாயமாக்கப்படும் ஆணையர் பேச்சு


திருச்சி, :  திருச்சி மாநகராட்சி பகுதியில் இனிமேல் புதிதாக வீடு கட்டும் போது மரக்கன்று நடுவது கட்டாயமாக்கப்ப டும் என ஆணையர் தண்டபாணி தெரிவித்துள்ளார். சமூக முன்னேற்றத்துக்கான இளைஞர் கூட்டமைப்பான ‘இலக்கு’ சார் பில், கண்தானம் தொடர் பான புதிய இணையதளம் மற்றும் ஹெல்ப் லைன் துவக்கவிழா திருச்சி மாநகராட்சி கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.

திருச்சி மாநகராட்சி ஆணையர் தண்டபாணி, இணையதளம் மற்றும் ஹெல்ப் லைனை துவக்கி வைத்தார்.அப்போது அவர் பேசியதாவது:

திருச்சி மாநகராட்சி பகுதியில் 3 சதவீதம் பேர் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளனர். 90 சதவீதம் பேர் கழிப்பிட வசதியை பயன்படுத்தி வருகின்றனர். 10 சதவீதம் பேர் மட்டுமே திறந்தவெளி கழிப்பிடங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

திருச்சி மாநகராட்சியில் 13 இடங்கள் திறந்தவெளி கழிப்பிடங்களாக பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. அந்த இடங்களில் மாநகராட்சி சார்பில் ‘நம்ம கழிப்பறைகள்’ அமைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி பகு தியில் இனிமேல் புதிதாக வீடு கட்டும்போது மரக்கன்று நடுவது கட்டாயமாக்கப்படும். பிளாஸ்டிக் பொருட்கள் உள்பட குப் பைகளை வீடுகளிலேயே சேமித்து மாநகராட்சி சார் பில் வீடு வீடாக சென்று பெற்று கொள்ளும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப் பட உள்ளது. அதிகளவு குப்பைகளை தருபவர்க ளுக்கு அதற்கேற்ப தொகை வழங்கப்படும் என்றார்.

 

திண்டுக்கல் மாநகராட்சி அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும்: அமைச்சர்

Print PDF

தினமணி             17.02.2014

திண்டுக்கல் மாநகராட்சி அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும்: அமைச்சர்

திண்டுக்கல் மாநகராட்சியாகும் அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என பூங்கா திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற மின்துறை அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் தெரிவித்தார்.

 திண்டுக்கல் நகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள குமரன் பூங்காவில் ரூ.30 லட்சம் செலவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. முதல் கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பூங்காவை திறந்து வைக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

 நிகழ்ச்சிக்கு நகர்மன்றத் தலைவர் வி.மருதராஜ் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மின்துறை அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் பூங்காவை திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசியது: வறட்சியின் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னையை சமாளிப்பதற்கு விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் போதிய நீராதாரம் இல்லை என்பதால், குடிநீர் பற்றாக்குறையை சமாளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

 குறிப்பாக திண்டுக்கல் நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.70 கோடி மதிப்பிலான திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். அதேபோல் மாநகாரட்சியாக நிலை உயர்த்தப்பட உள்ள திண்டுக்கல் நகரின் சாலைகளை மேம்படுத்தவும் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. மாநகராட்சியாக தரம் உயர்த்தும் அறிவிப்பு ஒரிரு நாளில் வெளியாகும் என்றார்.

நகர்மன்றத்தலைவர் வி.மருதராஜ்:  3.55 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குமரன் பூங்கா 50 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மேலும் நகர மக்களின் ஒரே பொழுதுபோக்கு இடமாகவும் அமைந்துள்ளது. தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பராமரிப்பு பணிகளின் மூலம் மீண்டும் பொதுமக்கள் பயன்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. நடைபயிற்சி மேற்கொள்வோரின் வசதிக்காக நடைமேடை விரிவாக்கம் செய்து கொடுக்கப்படும். மேலும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு ரயில் வசதியும் ஏற்படுத்தப்படும் என்றார்.

 நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் கே.ராஜன், நத்தம் தொகுதிச் செயலர் ஆர்.வி.என்.கண்ணன், நகரச் செயலர் பாரதிமுருகன், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

தருமபுரியில் புதுப்பிக்கப்பட்ட நகராட்சி சிறுவர் பூங்கா திறப்பு

Print PDF

தினமணி            17.02.2014

தருமபுரியில் புதுப்பிக்கப்பட்ட நகராட்சி சிறுவர் பூங்கா திறப்பு

தருமபுரியில் ரூ. 35 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட நகராட்சி சிறுவர் பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

தருமபுரி நகரின் மையப்பகுதியில் நகராட்சி சார்பில் பளுப்புக்குட்டையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூங்கா அமைக்கப்பட்டது. இந்தப் பூங்காவை முறையாகப் பராமரிக்காததால், முள்புதர்கள் வளர்ந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் போனது.

பூங்காவை அனைவரும் பயன்படுத்தும் வகையில் புதுப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து, பூங்காவைப் புதுப்பிக்க நகராட்சி சார்பில் ரூ. 35 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதில், கண்ணைக் கவரும் வகையில் செயற்கை நீருற்றுகள், புல்தரைகள், ஊஞ்சல் உள்ளிட்ட பொழுதுபோக்கு சாதனங்கள் அமைக்கப்பட்டன.

நகர்மன்றத் தலைவர் ஜெ.சுமதி தலைமையில் நடைபெற்ற விழாவில், மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் பூங்காவைத் திறந்துவைத்தார்.

பாலக்கோடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.அன்பழகன், நகராட்சி பொறியாளர் கிருஷ்ணகுமார், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.

 


Page 3 of 135