Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

மாநகராட்சி பள்ளிகளில் திறந்தவெளி காய்கறி தோட்டம்

Print PDF

தினகரன்             02.01.2014

மாநகராட்சி பள்ளிகளில் திறந்தவெளி காய்கறி தோட்டம்

கோவை,: கோவை மாநகராட்சி பள்ளிகளில் திறந்தவெளி காய்கறி தோட்டம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேசிய பசுமை படை, சுற்றுச்சூழல் மன்றங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இம்மன்றங்கள் மூலம், கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள பள்ளிகளில் ‘திறந்தவெளி காய்கறி தோட்டம்‘ அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி சார்பில், ஆரம்ப பள்ளி, நடுநிலை பள்ளி, உயர்நிலை பள்ளி, மேல்நிலை பள்ளி என மொத்தம் 83 பள்ளிகள் நடத்தப்படுகின்றன. இவற்றில், முதல்கட்டமாக, 16 பள்ளிகளில் இந்த காய்கறி தோட்டங்களை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.

தேசிய பசுமை படை திட்டத்தின்கீழ் மாணவ, மாணவிகளிடம் சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், சுற்றுச்சூழலை மாசுபடாமல் பாதுகாக்க காய்கறி தோட்டம் அமைத்தல், மண்புழு உரக்குழி பராமரித்தல், மழைநீர் சேகரித்தல் ஆகிய பழக்கங்களை உருவாக்கிக்கொள்ளும் வகையில் இந்த திறந்தவெளி காய்கறி தோட்டம் அமைக்கப்படுகிறது.

இதற்காக, மாநகராட்சி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தனி பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நிதி, மாநகராட்சி பொது நிதியில் இருந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த காய்கறி தோட்டத்துக்கு மண்புழு உரம் பயன்படுத்தவும், இதன்மூலம் விளையும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் அந்தந்த பள்ளியில் சத்துணவு மையங்களுக்கு சப்ளை செய்யவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

கெமிக்கல் உரம் பயன்படுத்தாமல், இயற்கை உரம் மூலம் விளையும் காய்கறிகள் ஆரோக்கிய வாழ்வுக்கு உகந்தது என்ற விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தும் வகையில் சத்துணவு மையங்களுக்கு இவை பயன்படுத்தப்படுகிறது. மிக விரைவில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என மாநகராட்சி கமிஷனர் லதா கூறினார்.

 

பசுமை திட்டத்தில் மரம் வளர்க்க திருச்சி மாநகராட்சி அழைப்பு

Print PDF

தினமலர்            07.12.2013

பசுமை திட்டத்தில் மரம் வளர்க்க திருச்சி மாநகராட்சி அழைப்பு

திருச்சி: மூன்றாயிரம் ரூபாய் செலுத்தி பசுமை திட்டத்தில் மரம் வளர்க்க திருச்சி மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து திருச்சி மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:திருச்சி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பசுமை திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதில், பஞ்சப்பூர் பகுதியில் மதுரை - சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி மாநகராட்சிக்கு சொந்தமான 5 ஏக்கர் பரப்பளவில் நிலம் உள்ளது.

இங்கு நகர்புற பசுமை காடுகள் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டு மாநகராட்சியால் பராமரிக்கப்படவுள்ளது. இப்பணிக்கு மரம் ஒன்றுக்கு 3 ஆயிரம் ரூபாய் வீதம் மக்கள் பங்களிப்பாக பெறப்பட்டு, இந்த நிதியை மூலதனமாக கொண்டு பராமரிப்பு பணிக்கு பயன்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மாநகாட்சியை பசுமையான திருச்சியாக மாற்றிடவும், சுற்றுசூழலை பாதுகாத்திடவும் மாநகர மக்களின் பங்களிப்பை மாநகராட்சி நிர்வாகம் எதிர் நோக்கியுள்ளது.

இத்திட்டத்திற்கு தங்களது ஆதரவினை வழங்கி தங்களது உற்றார் உறவினர் நண்பர்களிடம் எடுத்துக் கூறி அவர்களையும் இத்திட்டத்தில்பங்கேற்க செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இத்திட்டம் குறித்து பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, பட்டய கணக்கர், டாக்டர்கள், வக்கீல்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள் வணிக பேரவைகள், வங்கி நிறுவனங்கள், பொறியாளர் குழுமங்கள், அனைத்து அரசு துறை உயர் அலுவலர்கள் ஆகியோருக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

எனவே, மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த புதிய பசுமை திட்டத்தில் தாங்களும் பங்கேற்று உரிய படிவத்தில் விபரங்களை பூர்த்தி செய்து மரக்கன்று ஒன்றினை பராமரிப்புத் தொகைக்கான வங்கி டி.டி.,யை ஆணையர், திருச்சி மாநகராட்சி என்ற பெயரில் அனுப்பி, தங்களது பங்கேற்பினையும், ஒத்துழைப்பையும் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மீண்டும் ஐஎஸ்ஓ தரச்சான்று பெற புதுப்பொலிவு பெறும் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட்

Print PDF

தினகரன்             29.11.2013

மீண்டும் ஐஎஸ்ஓ தரச்சான்று பெற புதுப்பொலிவு பெறும் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட்

மதுரை, : மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட்டில் புகை, ஒலி மாசை தடுக்கும் வகையில் புது வகை செடிகள், மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மீண்டும் ஐஎஸ்ஓ தரம் பெறுவதற்காக புதுப் பொலிவு பெற்றுள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டிற்கு அன்றாடம் 725 வெளியூர் அரசு பஸ்கள், 140 தனியார் பஸ்கள், 160 சிட்டி பஸ்கள், 26 மினி பஸ்கள் என மொத்தம் 6 ஆயிரத்து 40 முறை வந்து செல்கின்றன. இதனால் 24 மணி நேரமும் புகை வெளி யேறி நச்சுத் தன்மையும், ஒலி மாசும் அதிகரித்து வருகிறது.

இதனை கிரகித்து, ஆக்சிஜனை வெளியிடும் இயல்புகொண்ட பலவகை பூஞ்செடிகள் மற்றும் மரக்கன்றுகள் பஸ் ஸ்டாண்டின் உள்பகுதியை சுற்றிலும் மாநகராட்சி சார்பில் புதிதாக நடப்பட்டுள்ளன. சிட்டி பஸ்கள் நிற்கும் பகுதியில் மத்தியில் உள்ள பூங்காவானது செயற்கை நீருற்று, புல் வெளி, புள்ளிமான் உருவம், மின் விளக்கு அலங்காரத்துடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

அரளி, மகிழம் பூ, செண்பகம், பிளேம் ஆப் தி பாரஸ்ட், மஞ்சள் கொன்னை, காதித பூ, நந்தியா வட்டு, அடுப்பு மல்லி, மரம் வல்லி போன்ற பூக்கும் செடிகள் குவிந்துள்ளன. வெப்பத்தை தணிக்கும் வேம்பு, புங்கன், இலுப்பை போன்ற மரக்கன்று வகைகள் உள்பட 6 ஆயிரத்து 500 செடி, மரக்கன்றுகள் நடப்பட்டுள் ளன. பசுமையான புல் தரைகள், வன விலங்கு, பறவை உருவங்கள் அமைக்கப்பட்டுள் ளன. இது அழகிய தோற் றத்தை உருவாக்கி உள்ளது.

இந்த பணிகளை மாநகராட்சி சார்பில் செய்து முடித்துள்ள வனத்துறை ஓய்வு பெற்ற ரேஞ்சர் ராஜகோபால் கூறும்போது, “வனத்துறையில் பணிபுரிந்த அனுபவத்தின் அடிப்படையிலான எனது யோச னையை மேயர் ராஜன்செல்லப்பா ஏற்று அனுமதி அளித்தார். அதன்படி பஸ் ஸ்டாண்டில் புகை, ஒலி மாசுவை கிரகித்து ஆக்சி ஜன் வெளியிடும் செடி, மரங்கள், புல் வெளிகள் அமைத்து இயற்கை சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் தேவையான இடங்களில் செடிகள், புல் தரை கள் அமைக்கப்படும். அழ கிய தோற்றம் காணப்படும்போது, அதில் சிறு நீர் கழிப்பதை தவிர்க்க வாய் ப்பு ஏற்படும். துர் நாற்றம் வீசாமல் தடுக்க முடியும். பராமரிப்புக்காக தனியாக ஊழியர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்“ என்றார்.

மாட்டுத் தாவணி பஸ் ஸ்டாண்ட் 1999ல் திறக்கப்பட்டது. 2007ல் ஐஎஸ்ஓ தரம் பெற்றது. அதன் காலம் முடிந்து இடைக்காலத்தில் சீர்குலைவு ஏற்பட்டது. தற்போது மீண்டும் ஐஎஸ்ஓ தரத்துக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதில் புகை, ஒலி மாசு தடுப்பு முக்கிய இடம் பெறுகிறது. இதனை ஐஎஸ்ஓ தரச் சான்று குழு பார்வையிட்டு ஆய்வு நடத்தியது. பஸ் ஸ்டாண்ட்டின் முன் ஆட்டோ, டாக்சிகளுக்கு டைல்ஸ் தளத்துடன் தனி இடம், அருகில் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் என மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் புதுப்பொலிவு பெற்றுள்ளது.

மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ முன் பதிவு நிலையம் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் செயல்படவில்லை. குறிப்பிட்ட இடங்களுக்கு ஆட்டோ டிரைவர் கள் ஏற்றுக்கொண்ட கட்டணம் “டிஸ்பிளே“ செய்யப்படும் என்றார்கள். அதையும் காணோம். ஆட்டோ கட்டணத்தை ஆர்டிஓ மூலம் மாவட்ட கலெக்டர் நிர்ணயித்து, போலீஸ் கமிஷனர் இணைந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே ஆட் டோ முன் பதிவு நிலையம் செயல்பட முடியும்.

 


Page 9 of 135