சிவகாசி நகராட்சியில் ரூ. 1.50 கோடியில் பணிகள்
Saturday, 30 March 2013 10:39
administrator
நாளிதழ்௧ள் -
ந௧ர்ப்புற மேம்பாடு
தினமணி 30.03.2013
சிவகாசி நகராட்சியில் ரூ. 1.50 கோடியில் பணிகள்
சிவகாசி நகராட்சி பகுதியில் ரூ. 1.50 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள மன்றக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.
சிவகாசி நகர்மன்றக் கூட்டம், அதன் தலைவர் வெ.க. கதிரவன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவர் கே.ஏ.ஏ. அசன்பத்ருதீன் முன்னிலை வகித்தார். நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கோரிக்கைகளின் படி, தெருக்களில் பேவர் பிளாக் கற்களை பொருத்துவது, போர்வெல் அமைத்து தண்ணீர் வசதி, மழைநீர் வாய்க்கால், பழுதாகியுள்ள தண்ணீர்த் தொட்டிகளை சீரமைப்பது, உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள நகராட்சி பொது நிதியில் இருந்து ரூ. 1.50 கோடி ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அம்மன் கோவில்பட்டி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு ரூ. 25 லட்சம்,காமராஜர் நீர்தேக்கத் தொட்டியில் மின்மோட்டர்களை பொருத்துவதற்கு ரூ. 3.30 லட்சம், வெம்பக்கோட்டை அணையில் நீரேற்றம் செய்ய, மின்மோட்டார்களை பொருத்துவதற்கு ரூ. 9.85 லட்சம் ஒதுக்கீடு செய்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தற்போது 1.91 ஏக்கர் பரப்பளவில் புதிய பஸ் நிலையம் அமைக்கத் திட்ட மதிப்பீடு தயார் செய்ய தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் தீர்மானமும், ஊருணிகளைச் சீரமைத்தும், நீர்வரத்துக் கால்வாய்களை தூர்வாரி மழைநீர் சேமிக்க உள்கட்டமைப்பு செய்ய ஆகும் செலவினை அரசு மானியமாக வழங்க வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
பொறியாளர் முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
|
பெருந்துறை பகுதியில் ரூ6.90 கோடி வளர்ச்சிப்பணிகள்: கலெக்டர் ஆய்வு
Saturday, 09 March 2013 11:16
administrator
நாளிதழ்௧ள் -
ந௧ர்ப்புற மேம்பாடு
தினகரன் 09.03.2013
பெருந்துறை பகுதியில் ரூ6.90 கோடி வளர்ச்சிப்பணிகள்: கலெக்டர் ஆய்வு
ஈரோடு: பெருந்துறை பகுதிகளில் 6.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகளை கலெக்டர் சண்முகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஊராட்சி ஒன்றியம், பெருந்துறை, காஞ்சிக்கோவில் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சண்முகம் ஆய்வு மேற்கொண்டார். 2012-13ம் ஆண்டு நபார்டு நிதியுதவியின்கீழ் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் பெருந்துறை பேரூராட்சி அலுவலக கட்டிட பணிகளை பார்வையிட்டார். நெடுஞ்சாலைத்துறை சார்பில் பெருந்துறை - கவுந்தப்பாடி ரோட்டில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு பராமரிப்பு பணிகளையும், 1.04 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலை மேம்பாடு பணிகளையும் ஆய்வு செய்தார்.
காஞ்சிக்கோவில் பேரூராட்சி முத்துக்கவுண்டன்பாளையத்தில் அமைந்துள்ள குளத்தில் நபார்டு திட்டத்தின்கீழ் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாருதல், தடுப்புச்சுவர் கட்டும் பணிகளை ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டார். பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின்கீழ் ஒருகோடியே 58 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய அலுவலக கட்டிடப்பணிகளை பார்வையிட்ட கலெக்டர் உரிய காலக்கெடுவிற்குள் பணிகளை முடிக்க உத்தரவிட்டார்.
திங்களூர் ஊராட்சி தாண்டாகவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 1.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமையலறை, இருப்பறை பணிகளை பார்வையிட்டார். மேலும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு பணிகள், ஊரக கட்டமைப்பு திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட வரும் பணிகள் என 6 கோடியே 90 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சண்முகம் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது பெருந்துறை பேரூராட்சி தலைவர் சரஸ்வதி, பேரூராட்சிகள் துறை செயற்பொறியாளர் மோகன், செயல் அலுவலர் தன்னாசி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் வாணி, தமிழ்ச்செல்வி, ஒன்றிய பொறியாளர் வெங்கடேசன் மற்றும் துறை அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கழிவுநீர் விடப்பட்ட காலியிடத்தில் ரூ23 லட்சம் செலவில் பூங்கா துரைப்பாக்கத்தில் மாநகராட்சி ஏற்பாடு
Friday, 08 March 2013 06:45
administrator
நாளிதழ்௧ள் -
ந௧ர்ப்புற மேம்பாடு
தினகரன் 08.03.2013
கழிவுநீர் விடப்பட்ட காலியிடத்தில் ரூ23 லட்சம் செலவில் பூங்கா துரைப்பாக்கத்தில் மாநகராட்சி ஏற்பாடு
துரைப்பாக்கம், : துரைப்பாக்கம் பகுதியில் காலி மைதானத்தில் கழிவுநீர் விடப்படுவதாக தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளி யானது. இதன் எதிரொலி யாக அப்பகுதியில் 23 லட்சம் செலவில் பூங்கா அமைக்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட புறநகர் பகுதிகளில் பாதாள சாக்கடை பணி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதனால் துரைப்பாக்கம் 193வது வார்டுக்குட்பட்ட ஆனந்தா நகர் காலி மைதானத்தில், அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை விடுகின்றனர். இதனால் அப்பகுதி கொசு உற்பத்தி தொழிற்சாலையாக மாறியுள்ளது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள மார்ஸ் பொதுநல சங்கத்தினர் வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக துரைப்பாக்கம் ஆனந்தா நகரில் காலியாக உள்ள மைதானத்தில் பூங்கா அமைக்க மாநகராட்சி சார்பில் ரூ23 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதற்கான பூமி பூஜை நேற்று முன்தினம் நடந்தது. இதற்கு வார்டு கவுன்சிலர் டி.சி.கோவிந்த சாமி தலைமை வகித்து பூஜையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரிகள், மார்ஸ் பொதுநல சங்க தலைவர் சத்தியநாராயணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இப்பகுதியில் மார்ஸ் பொது நல சங்கம் சார்பில் 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 12 குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் குடிநீர் நிரப்பி தர மெட்ரோ வாட்டர் நிறுவனம் மூலம் ஏற்பாடு செய்ய மாநகராட்சிக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் தொட்டிகளில் எண்கள் மட்டுமே எழுதியுள்ளனர். இதுவரை குடிநீர் நிரப்பித்தரவில்லை.
இதையடுத்து மார்ஸ் பொதுநல சங்கமே, ரூ1400 கட்டி லாரியில் தண்ணீர் வரவழைத்து தொட்டிகளில் நிரப்பி அப்பகுதி மக்களுக்கு வினியோகித்து வருகிறது. சங்க நிர்வாகிகள் கூறுகையில், மாநகராட்சிக்கு வரி செலுத்தியும் தொட்டி குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து தர மறுக்கின்றனர். இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றனர்.
Last Updated on Friday, 08 March 2013 09:53
|
|
|
|
Page 20 of 160 |