Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடிந்ததும் தூத்துக்குடியில் சாலைகள் சீரமைக்கப்படும்: அமைச்சர்

Print PDF

தினமணி 04.09.2009

பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடிந்ததும் தூத்துக்குடியில் சாலைகள் சீரமைக்கப்படும்: அமைச்சர்

தூத்துக்குடி, செப். 3: தூத்துக்குடி நகரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிந்ததும் அனைத்துச் சாலைகளும் சீரமைக்கப்படும் என, மாநில சமூகநலத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் வியாழக்கிழமை தெரிவித்தார்.

தூத்துக்குடி செல்வநாயகபுரத்தில் சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ. 3.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குழந்தைகள் நல மையம் மற்றும் நியாயவிலைக் கடை கட்டடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.

இக் கட்டடங்களைத் திறந்துவைத்து அமைச்சர் கீதா ஜீவன் மேலும் பேசியதாவது:

தூத்துக்குடி நகரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெறுவதால், பல சாலைகள் சேதமடைந்துள்ளன. திட்டப்பணிகள் முடிந்ததும் அனைத்து சாலைகளும் சீர் செய்யப்படும்.

ஏழை, எளிய மக்கள் உயர்தர மருத்துவ சிகிச்சைகள் பெறும் வகையில் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் கீழ் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி திருச்செந்தூரில் தொடங்கப்பட்டுள்ளது. இத் திட்டம் உங்கள் வீடு தேடி வரும். இப் பகுதி மக்களின் வசதிக்காக குழந்தைகள் மைய கட்டடம் மற்றும் நியாயவிலைக் கடை கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இக் கட்டடங்களை உங்கள் சொந்தக் கட்டடம்போல பராமரிக்க வேண்டும். நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர்.

விழாவுக்கு தலைமை வகித்து ஆட்சியர் கோ. பிரகாஷ் பேசுகையில், மக்களின் தேவைகளைக் கண்டறிந்து அரசால் அளிக்கப்படுகின்ற நிதியுதவி, திட்டங்கள் உங்களுக்கு கிடைத்திட மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு அளிக்கும் என்றார்.

மாநகராட்சி மேயர் இரா. கஸ்தூரி தங்கம், துணை மேயர் தொம்மை ஜேசுவடியான், மாமன்ற உறுப்பினர் கா. தங்கம்மாள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சு. பன்னீர்வேலு, புள்ளியியல் ஆய்வாளர் நா. இருங்கோலப்பிள்ளை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் வ. ஜெயபால், குடிமை பொருள் வழங்கல் துறை தனி வட்டாட்சியர் என். மாரிராஜா, தூத்துக்குடி மாநகராட்சி பொறியாளர் எஸ். ராஜகோபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

அவினாசி பேரூராட்சியில் வளர்ச்சி பணிகள்

Print PDF

தினமலர் 03.09.2009

 

திருவொற்றியூரில் வளர்ச்சித் திட்டங்கள் விரைவில் நிறைவேறும்

Print PDF

தினமணி 03.09.2009

திருவொற்றியூரில் வளர்ச்சித் திட்டங்கள் விரைவில் நிறைவேறும்: அமைச்சர் கே.பி.பி. சாமி

திருவொற்றியூர், செப். 2: திருவொற்றியூர் நகர வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படுமென அந்த தொகுதி எம்.எல்.-வும், மீன் வளத்துறை அமைச்சருமான கே.பி.பி. சாமி தெரிவித்துள்ளார்.

திருவொற்றியூர் நகராட்சி அலுவலகத்தை ஒட்டி ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட நீச்சல் குளம், ரூ.15 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட பூங்கா ஆகியவற்றின் திறப்புவிழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகர்மன்றத் தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கே.பி.பி. சாமி பேசியது:

சுமார் 2.75 லட்சம் பேர் வசிக்கும் இந்நகருக்கு போதிய அளவு வசதிகள் இல்லை. இதனை கருத்தில் கொண்டுதான் இத்தகைய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

திருவொற்றியூர் பூந்தோட்டத்தில் உள்ள நகராட்சி பள்ளி நடைபயிற்சி பாதை விரைவில் நவீனப்படுத்தப்படவுள்ளது. நகராட்சி மருத்துவமனை கட்டடங்கள் தற்போது இடிக்கப்பட்டு வருகின்றன. அதே இடத்தில் அனைத்து வசதிகளும் அடங்கிய புதிய மருத்துவமனை அமைய உள்ளது.

கோமாதா நகர் அருகே ரயில்வே மேம்பாலம், அண்ணாமலைநகர், விம்கோ நகர் ஆகிய இடங்களில் ரயில்வே சுரங்க பாலம் அமைக்கப்படவுள்ளது.

ரூ. 95 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் திருவொற்றியூர் நகர குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், அரசு கலைக் கல்லூரி ஆகிய திட்டங்கள் நிறைவேறும்போது வளர்ச்சியடைந்த நகரங்களுள் ஒன்றாக திருவொற்றியூர் மாறும் என்றார் அவர்.

நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத் தலைவர் ராமநாதன், நகராட்சி ஆணையர் கலைவாணன், தி.மு.. நகர செயலாளர் தி.மு. தனியரசு, கவுன்சிலர்கள் சொக்கலிங்கம், பாலயோகேஷ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 152 of 160