Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

அக்காமலை செக்டேமில் ரூ.42 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்

Print PDF

தினமணி           10.01.2014

அக்காமலை செக்டேமில் ரூ.42 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்

அக்காமலை செக்டேம் பகுதியில் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ள இருக்கும் வளர்ச்சி பணிகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

வால்பாறை நகராட்சி மூலமாக சமீபகாலமாக பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் பிரேமா புதன்கிழமை, வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

அதன்பின், வால்பாறையை அடுத்த கருமலை எஸ்டேட்டில் உள்ள அக்காமலை தடுப்பணை பகுதிக்கு சென்ற அவர், அங்கு ரூ.42 மதிப்பீட்டில் நடைபெற உள்ள தடுப்பணை தூர்வாருதல் மற்றும் தடுப்புச் சுவர் கட்டும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

மேலும், சோலையார் அணைப் பகுதிக்கு சென்று, அங்கு புதிதாக குடிநீர் விநியோகம் செய்ய ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற உள்ள குடிநீர் குழாய் பதிக்கும் பணி குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, நகராட்சி மண்டலப் பொறியாளர் திருமாவளவன், ஆணையாளர் வெங்கடாசலம், நகராட்சித் தலைவர் சத்தியவாணிமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

மல்லாங்கிணறில் வளர்ச்சிப்பணி ஆய்வு

Print PDF

தினமணி           09.01.2014

மல்லாங்கிணறில் வளர்ச்சிப்பணி ஆய்வு

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் பேரூராட்சி பகுதியில் புதிதாக போடப்பட்ட தார் சாலையினை பேரூராட்சி தலைவர் நாகையா புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

   மல்லாங்கிணர் 14ஆவது வார்டு காந்திநகரில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை அபிவிருத்தி திட்டத்தின்கீழ் ரூ. 25 லட்சம் செலவில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு புதிய தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பேரூராட்சித் தலைவர் நாகையா, துணைத் தலைவர் மணிராஜ், செயல் அலுவலர் மாலா, உதவி பொறியாளர் சண்முகசுந்தரம், பணி ஆய்வாளர் சமுத்திரக்கனி ஆகியோர் சாலை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

  பின்னர் செயல் அலுவலர் மாலா கூறியதாவது: மல்லாங்கிணறில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் 10, 12, 14-வது வார்டுகளில் உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் நிதியின் மூலம் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டு வருகிறது. ரூ.10 லட்சம் செலவில் ஊரணிகள் சீரமைக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.10 லட்சம் செலவில் காந்தி மைதானம், முடியனூர் விலக்கு ஆகிய இடங்களில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டு வருகிறது. மேலும், மல்லாங்கிணர் பேரூராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கும், உள்ளாட்சித் துறை அமைச்சருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும், பேரூராட்சிகளின் இயக்குநர், உதவி இயக்குநர் ஆகியோருக்கும் பேரூராட்சி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

 

மாநகராட்சியில் ரூ.57 லட்சத்தில் திட்டப் பணிகள்: மேயர் திறந்து வைத்தார்

Print PDF

தினமணி               08.01.2014

மாநகராட்சியில் ரூ.57 லட்சத்தில் திட்டப் பணிகள்: மேயர் திறந்து வைத்தார்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 17 மற்றும் 18-ஆவது வார்டுகளில் ரூ.56.80 லட்சம் செலவில் முடிக்கப்பட்ட பல்வேறு திட்டப் பணிகளை மேயர் செ.ம.வேலுசாமி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.

சட்டப்பேரவை உறுப்பினர் தா.மலரவன், ஆணையாளர் க.லதா முன்னிலை வகித்தனர்.

17-ஆவது வார்டு வடவள்ளி மகாராணி அவின்யூ பகுதியில் மாநகராட்சி பொது நிதி ரூ.14.80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தையும், வடவள்ளி குருசாமி நகர் பகுதியில் தக்ஷô நிறுவனம் மூலமாக ரூ.13 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டிருந்த பூங்காவையும், 18-ஆவது வார்டு வீரகேரளம் சுண்டப்பாளையம் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதி ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்தையும், வீரகேரளம் சத்யா

காலனி பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதி ரூ.14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பாலத்தையும் மேயர் செ.ம.வேலுசாமி திறந்து வைத்தார்.

வடவள்ளி, சுண்டப்பாளையம் பகுதி நியாய விலைக்கடைகளில் தமிழக அரசின் பொங்கல் பண்டிகைக்கான சிறப்புத் தொகுப்பு பொருள்களையும் மேயர் வழங்கினார்.

துணை ஆணையர் சு.சிவராசு, மேற்கு மண்டலத் தலைவர் சாவித்ரி, கண்காணிப்பு பொறியாளர் கணேஷ்வரன், நகரப் பொறியாளர் சுகுமார், உதவி ஆணையர் சுப்ரமணியன், சுகாதார குழுத் தலைவர் தாமரைச் செல்வி, கல்வி குழுத் தலைவர் சாந்தாமணி, நியமனக் குழு உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 


Page 8 of 160