Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

சிவகாசியில் ரூ 2.30 கோடியில் வளர்ச்சிப் பணிகள்

Print PDF

தினமணி             25.01.2014

சிவகாசியில் ரூ 2.30 கோடியில் வளர்ச்சிப் பணிகள்

சிவகாசியில் ரூ.2.30 கோடியில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருவதாக நகர்மன்றத் தலைவர் வெ.க. கதிரவன் தெரிவித்தார்.

   நகர்மன்றத் தலைவர் வெ.க. கதிரவன் கூறியதாவது: ஒருங்கிணைந்த நகர்புற மேம்பாட்டுத் திட்டம் 2013-2014 இன் கீழ் 1.02 கி.மீ. நீளமுள்ள என்.கே.ஆர். பெரியண்ணன் சாலை (விளாம்பட்டிசாலை) சீரமைக்கப்பட்டுள்ளது. தெய்வானை நகரில் 365 மீட்டர் அளவில் தார் சாலையும், ஏ.ஆர். அருணாச்சலம் சாலையும்  ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டுள்ளது.  ஜக்கம்மாள் கோயில் பகுதியிலும், வேலாயுதம் சாலையிலும், ரூ.3 லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவுள்ள மேல்நிலைத் தொட்டியும், அப்பகுதிக்கு காமராஜர் மேல்நிலைத் தொட்டியிலிருந்து பகிர்மானக் குழாய் பதிக்கவும், மேல்நிலைத் தொட்டி பகுதியில் உள் கட்டமைப்பு செய்யவும், பசும்பொன் சாலையிருந்து, பழனியாண்டவர் புரம் காலனியில் உள்ள மேல்நிலைத் தொட்டிவரை பகிர்மானக் குழாய் பதிக்கவும் ரூ.1.30கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைவில் தொடங்கும் என்றார்.

 

கருப்பூரில் ரூ.5.25 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் தொடக்கம்

Print PDF

தினமணி            24.01.2014 

கருப்பூரில் ரூ.5.25 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் தொடக்கம்

ஓமலூர் அருகேயுள்ள கருப்பூர் பேரூராட்சியில் ரூ.5.25 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினர் பல்பாக்கி சி.கிருஷ்ணன் வியாழக்கிழமை தொடக்கிவைத்தார்.

கருப்பூர் பேரூராட்சி 3-ஆவது வார்டு பகுதியில் ரூ.2.25 லட்சம் மதிப்பீட்டில் தார்ச் சாலை, சாக்கடை வடிகால் அமைக்கும் பணி, குள்ளகவுண்டனூர் பகுதியில் ரூ.3 லட்சம் மதிப்பிலான கொசு ஒழிப்பு இயந்திரத்தின் செயல்பாடுகளையும் சட்டப்பேரவை உறுப்பினர் பல்பாக்கி சி.கிருஷ்ணன் தொடக்கிவைத்தார்.

இதில், பேரூராட்சித் தலைவர் வெற்றிவேல், செயல்அலுவலர் அப்துல்சாதிக் பாட்ஷா, துணைத் தலைவர் மகாதேவன், ஓமலூர் ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

அக்காமலை செக்டேமில் ரூ.42 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்

Print PDF

தினமணி            10.01.2014

அக்காமலை செக்டேமில் ரூ.42 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்

அக்காமலை செக்டேம் பகுதியில் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ள இருக்கும் வளர்ச்சி பணிகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

வால்பாறை நகராட்சி மூலமாக சமீபகாலமாக பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் பிரேமா புதன்கிழமை, வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

அதன்பின், வால்பாறையை அடுத்த கருமலை எஸ்டேட்டில் உள்ள அக்காமலை தடுப்பணை பகுதிக்கு சென்ற அவர், அங்கு ரூ.42 மதிப்பீட்டில் நடைபெற உள்ள தடுப்பணை தூர்வாருதல் மற்றும் தடுப்புச் சுவர் கட்டும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

மேலும், சோலையார் அணைப் பகுதிக்கு சென்று, அங்கு புதிதாக குடிநீர் விநியோகம் செய்ய ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற உள்ள குடிநீர் குழாய் பதிக்கும் பணி குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, நகராட்சி மண்டலப் பொறியாளர் திருமாவளவன், ஆணையாளர் வெங்கடாசலம், நகராட்சித் தலைவர் சத்தியவாணிமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 


Page 7 of 160