Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

காய்ச்சல் விடுப்புமாணவர்களின் தகவலை மாநகராட்சிக்கு தெரிவிக்கவும்

Print PDF
தினமணி      10.10.2014

காய்ச்சல் விடுப்புமாணவர்களின் தகவலை மாநகராட்சிக்கு தெரிவிக்கவும்

காய்ச்சல் விடுப்பு எடுக்கும் மாணவர்கள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என ஆணையர் வே.ப. தண்டபாணி அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி மாநகராட்சியின் 65 வார்டுகளிலும் கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாநகரிலுள்ள பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் தங்கள் வளாகங்களில் கொசு உற்பத்தியாகும் பொருள்களை அழிக்க முன்முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன், மாணவர்கள் காய்ச்சல் என விடுப்பு எடுத்தால் அதுகுறித்த விவரங்களை உடனடியாக மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் அந்த மாணவரை மாநகராட்சி டாக்டர்கள் நேரில் சந்தித்து ஆய்வு செய்து டெங்குவாக இருப்பின் சம்பந்தப்பட்ட வசிப்பிடங்களில் கொசு உற்பத்திக்கு சிறப்பு நடவடிக்கை எடுக்கவும் முடியும்.
 

மாநகராட்சி சேவைபணிகள்: தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு

Print PDF
தினமணி     26.09.2014

மாநகராட்சி சேவைபணிகள்: தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு

திருச்சி மாநகராட்சியின் சேவைப் பணிகளில் ஈடுபடுவதற்கு பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் வே.ப. தண்டபாணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாநகரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களிடையே சமுதாயம் சார்ந்த குழுக்களை அமைத்து, அவர்களுக்கு திறன் பயிற்சி வழங்கி, மாநகராட்சி சேவைப் பணிகளில் ஈடுபடுத்த தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.

இப்பணியில் ஈடுபட விருப்பமுள்ள தொண்டு நிறுவனங்கள் செப். 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு: உதவி ஆணையர் (பணிகள்) த.ந. தனபாலன் செல்போன் எண்- 9894277411.
 

புதிய மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு

Print PDF

தினமணி        25.09.2014

புதிய மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு

திருச்சி மாநகராட்சிக்கு அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவைச் சேர்ந்த இரு மாமன்ற உறுப்பினர்களும் புதன்கிழமை காலை பதவியேற்றுக் கொண்டனர்.

15ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் மு. ராஜலட்சுமி, 32ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ரெ. சங்கர் ஆகியோருக்கு மாநகராட்சி ஆணையர் வே.ப. தண்டபாணி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு மேயர் அ. ஜெயா தலைமை வகித்தார். அரசுத் தலைமைக் கொறடா ஆர். மனோகரன், மக்களவை உறுப்பினர் ப. குமார், சட்டப்பேரவை உறுப்பினர் மு. பரஞ்ஜோதி, நகரப் பொறியாளர் ஆர். சந்திரன், கோட்டத் தலைவர்கள் ஜெ. சீனிவாசன், என். மனோகரன், எம். லதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 


Page 11 of 841